"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Friday, July 29, 2016

ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் காலனித்துவத்துக்கும் எதிராக அணிதிரள்வோம்: “நிரந்தரப் புரட்சி இல்லையேல் நிரந்தர மக்கட்படுகொலை"



[With the presence of RCL delegates, ‪SLL-India‬ held preliminary meetings for 1991 Berlin Summit in Chennai and Calcutta respectively on September 26, 1991 and October 5, 1991.]

Thozhilalar Pathai Volume 414
November 1991

பேர்ளினில் நவம்பர் 16-17ல் நடைபெற்ற உலகத் தொழிலாளர் மகாநாட்டுக்கு முன்னோடியாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அக்டோபர் 26ல் நடாத்திய மகாநாட்டில் பு... செயலாளர் விஜே டயஸ் சமர்ப்பித்த அறிக்கை

தோழர்களே, தோழியர்களே,

நீங்கள் அனைவரும் அறிந்தது போல் எமது இம்மகாநாடு நவம்பர் 16-17ம் திகதிகளில் ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் காலனித்துவத்துக்கும் எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடாத்தத் தயாராகி வரும் உலகத் தொழிலாளர் மகாநாட்டுக்கான முன்னோடி மகாநாடாகும். அனைத்துலகக் குழுவின் கிளைகளின் அரசியல் தலையீட்டின் மூலம் இத்தகைய முன்னோடி மகாநாடுகள் பல ஏற்கனவே உலகம் பூராவும் நடைபெற்றுள்ளன.

அக்டோபர் 19-20 வார இறுதியில் அவுஸ்திரேலிய சோசலிச லேபர் லீக்கினால் சிட்னி நகரில் நடாத்தப்பட்ட முன்னோடி மகாநாடு பெரிதும் வெற்றிகரமான மகாநாடாக விளங்கியதாக அத்தோழர்களிடம் இருந்து நாம் அறிகின்றோம். பல்வேறு கைத்தொழில் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர் குழுக்களும், ஆசிரியர், தாதிகள் போன்ற சேவை துறை ஊழியர்களும் அங்கு பேராளர்களாகக் கலந்து கொண்டுள்ளார்கள். அதுமட்டுமின்றி ஏகாதிபத்தியத்தினால் எதிர்காலம் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ள பெருந்தொகையான இளைஞர், யுவதிகளும் அதில் பங்கு பற்றியுள்ளார்கள்.

கடந்த ஜூலையில் பிரித்தானிய, பிரான்ஸ், ஜேர்மன் பேராளர்கள் கலந்து கொண்ட முன்னோடி மகாநாடு பேர்ளின் நகரில் நடைபெற்றது.

செப்டம்பர் 26ல் சென்னையிலும் அக்டோபர் 5ல் கல்கத்தாவிலும் நடைபெற்ற வெற்றிகரமான முன்னோடி மகாநாடுகள் இரண்டில் பங்கு கொள்ளும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது.
.

இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளுள் மூன்று அரசாங்கங்கள் வீழ்ச்சி கண்டதன் பின்னர் இன்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நரசிம்மராவின் காங்கிரஸ் அரசாங்கம், முன்னொரு போதும் இல்லாத அளவில் ஏகாதிபத்திய பகற் கொள்கைக்குக் கதவுகளைத் திறந்துவிட்டுள்ள போதிலும், ஏகாதிபத்தியவாதிகள் அதன் மூலம் திருப்திப்படுவதாய் இல்லை. இந்த அக்டோபர் மாத முற்பகுதியில் இந்தியா வந்த அமெரிக்க வர்த்தகத் தூதுவர் காலா ஹீலசின் நடமாட்டம், இந்திய முதலாளித்துவ ஆட்சியாளர்களைத் தமது நூலில் ஆடும் பொம்மையாக ஏகாதிபத்தியவாதிகள் கருதிச் செயல்படுவதைக் காட்டியது. 'புத்திஜீவி மூலவள உரிமை' தொடர்பான சட்டம் பற்றிக் குறிப்பிட்ட அவள், சிங்கப்பூர் அமெரிக்காவின் சிபாரிசினை ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவும் அவ்வாறே அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும், இல்லையேல் அமெரிக்க வர்த்தக தடை 301 இந்தியாவுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளான். உலகப் படத்தில் ஒரு குற்றான சிங்கப்பூரைக் கணிப்பதை விட கூடுதலாக துணைக் கண்டம் என்றாலும் இந்தியாவைக் கணிக்கப் போவதில்லை என்பதே அப்பேச்சின் பொருள். இத்தகைய கெடுபிடி ஏகாதிபத்தியப் போக்குடன் இணைந்துள்ள பிரமாண்டமான சமூக வெடிப்புப் பற்றிய புரட்சிகர அறிகுறிகள், ஏகாதிபத்தியவாதிகள் காலனித்துவத்துக்கு மீண்டும் தள்ளப்படும் அவல நிலையை வெளிப்படுத்துகின்றது. ...

இந்தியத் துணைக் கண்டம்

ஸ்டாலினிசத்தின் கீழ் உருவான 'கொம்பிரதோர்' முதலாளித்துவக் கும்பல் அணிதிரண்டு கொண்டு சோவியத் சோவியத் யூனியனை சிதறடிக்க தேசியவாத வெறியை தூண்டிவிட்டுள்ளது போலவே, இந்தியத் துணைக் கண்டத்திலும் ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ இனவாத, மதவா, ஜாதிவாத இயக்கங்களும் கூட இன்று தலைநீட்டி வருகின்றன. காலனித்துவத்தின் கீழ் இந்தியாவை ஒன்றுபடுத்திய பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளே இந்திய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களை நசுக்கும் பொருட்டு 1947ல் இந்திய முதலாளிகளுடன் சேர்ந்து ஹிந்து-முஸ்லீம் இந்தியா இரண்டினை நிறுவியது. இன்று தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தியின்படி பார்க்குமிடத்து அந்தப் பிரிவினை போதியதல்ல என்பதை ஏகாதிபத்தியவாதிகள் அறிவர். காங்கிரஸ் ஆட்சியாளர்களின் குழுக்களும், கோஷ்டிகளும் ஏகாதிபத்தியவாதிகளின் கையாட்களாக இனவாத ரீதியில் இந்தியாவை முழுமனே சிதறடிக்க இன்று முன்வந்துள்ளனர்.

ஒரிஸ்ஸா முதல் அமைச்சர் பிஜூ பட்நாய்க்கின் இயக்கம் இதற்கு நல்ல உதாரணம். ஒரிஸ்ஸாவுக்கு சுயாதீனம் அவசியம் என கூச்சலிடும் அவர் முன்வைக்கும் முக்கிய கோரிக்கை என்ன? இதுவரை காலமும் இந்திய மத்திய அரசாங்கத்தின் தனி அதிகாரமாக இருந்து வந்த வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய ஒரிஸ்ஸாவுக்கும் சுதந்திரம் வேண்டும் என அவர் கோருகின்றார். அது ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக தொழிற்பட முதலாளிகளுக்கு சுதந்திரம் வேண்டும் கோரிக்கை அவ்வாறே ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பனிகளுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்து கொள்ளும் உரிமையையும் அவர் வேண்டுகின்றார். ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆட்சியினால் கடந்த காலப்பகுதியில் உறுதி செய்து தர முடியாது போன ஜனநாயக உரிமைகள் பற்றிய பிரச்சினையையே பாவித்து இந்த இனவாத முதலாளித்துவப் புள்ளிகள் இப்போது தொழிலாள-ஒடுக்கப்படும் மக்களின் செலவில் இந்தியாவைத் தூண்டாடும் ஏகாதிபத்திய காலனித்துவ வேலைத்திட்டத்தின் தரகர்களாக முயற்சிக்கிறார்கள். ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இந்த வேலைத்திட்டத்துடன் தம்மை நேரடியாகப் பிணைத்துக் கொண்டுள்ளார்கள். ஒரிஸ்ஸா கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கு இதுவே. …

No comments:

Post a Comment