"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Showing posts with label 1996-May. Show all posts
Showing posts with label 1996-May. Show all posts

Thursday, November 22, 2018

இந்தியத் தேர்தலில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் (இந்திய சோ.தொ.க. தேர்தல் விஞ்ஞாபனம்)


Thozhilalar Paathai Volume 470
May 1996

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் பூண்ட இந்திய ட்ரொட்ஸ்கிசக் கட்சியான சோசலிசத் தொழிலாளர் கழகம் இந்தியப் பொதுத் தேர்தலில் ஒரு சோசலிசப் பதிலீட்டுக்காகப் போராட மூன்று வேட்பாளர்களை நிறுத்தயுள்ளது. ஜோற்றன் றோயும் கே. பழனியும் முறையே கல்கத்தாவிலும் வட சென்னையிலும் லோக் சபாவுக்குப் போட்டியிடுகின்றார்கள். எம். கைலாசம் சென்னை-வில்லிவாக்கம் தொகுதியில் தமிழ்நாடு சட்டசபைக்குப் போட்டியிடுகின்றார்.

இந்தப் பொதுத் தேர்தல் சமூகத் துருவப்படுத்தலும் வேலையில்லாத் திண்டாட்டமும் உக்கிரம் கண்டுள்ள நிலையில் நடைபெறுகின்றது. கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்திய முதலாளித்துவத்தின் மைய ஆணியாக விளங்கிய காங்கிரஸ் கட்சி ஆழமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. 74 வயது நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசாங்கத் துறைத் தொழில்களை வெட்டிச் சரித்துள்ளது. அரசுடமைக் கைத்தொழில்களை தனியார்மயமாக்கியுள்ளது. விவசாயிகளுக்கான அரசாங்க மானியங்களில் பெரும் வெட்டு இடம்பெற்றுள்ளது. இது இலட்சக் கணக்கான ஏழை விவசாயிகளை வறுமையினதும் பட்டினியினதும் கொடும்பிடிக்குள் தள்ளியுள்ளது.

பூகோளமயமான முதலாளித்துவ உற்பத்தியின் எதிரில் காங்கிரஸ் கட்சி அதன் பாரம்பரியமான தேசியவாத சுயபூர்த்திக் கொள்கைகளைக் கைவிட்டுள்ளது. பொருளாதாரத்தை ட்ரான்ஸ்நஷனல் கூட்டுத்தாபனங்கள் சுரண்டுவதற்குத் திறந்துவிட்டுள்ளது. அவ்வாறே பல்வேறு ஸ்டாலினிசக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தொழில்களையும் வாழ்க்கை நிலைமைகளையும் ஒழிப்பதை அங்கீகரித்துள்ளன. சோசலிசத் தொழிலாளர் கழகம் அதனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மூன்று முதலாளித்துவ முன்னணிகளையும்--காங்கிஸ், பாரதீய ஜனதா கட்சி, தேசியவாத இடதுசாரி முன்னணி--நிராகரிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தேசிய முன்னணி இடதுசாரி முன்னணி எனப்படுவது ஸ்டாலினிஸ்டுகளுக்கும் பல்வேறு பிராந்தியக் கட்சிகளுக்கும் ஜனதாக் கட்சிக்கும் இடையேயான ஒரு கூட்டாகும்.

இந்தச் சகல கட்சிகளும் இந்தியாவில் இருந்து வரும் வறுமையை ஆதரிக்கின்றன. இந்தியாவில் எந்தக் கோஷ்டி அடுத்த அரசாங்கத்தை அமைத்தாலும் அது இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தாக்குதலை நடாத்துவது உறுதி.

ஊழல்

இன்றைய பொதுத்தேர்தல் 115 அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் 43 மில்லியன் ரூபாக்களை 1989 க்கும் 1991 க்கும் இடையே இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருநிலையில் நடைபெறுகின்றது. இதில் ஏழு காங்கிரஸ் அமைச்சர்கள், பாரதீய ஜனதாக் கட்சியின் சிரேட்ட புள்ளிகள் ஆகியோர் அடங்குவர். காங்கிரசின் பேரிலான ஆழமான எதிர்ப்பும் இந்திய பாராளுமன்ற அரசியல் முறையுடனான வெறுப்பும் பாரதீய ஜனதாக் கட்சியினாலும் மற்றும் இனவாதக் கட்சிகளினாலும் இந்து சோவினிச, பிரிவினைத் திசைகளில் திசை திருப்பப்பட்டுள்ளது.

சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் இந்த பிற்போக்கு அணிதிரள்விற்கு ஸ்டாலினிசக் கட்சிகளே முக்கிய காரணம் எனச் சுட்டிக் காட்டியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜோதிபாசு தலைமையிலான ஒரு இடதுசாரி முன்னணி மூலம் ஆட்சி செலுத்துகின்றது. இவரே இன்றைய தேசிய முன்னணி-இடதுசாரி முன்னணியின் தலைவர். இவரது ஆட்சி தொழிலாளர்களுக்கு எதிராக முறைமுறையான தாக்குதல்களை நடாத்தி உள்ளது. இதனது புதிய கைத்தொழில் கொள்கையின் கீழ் 28 அரச உடமை கைத்தொழில்கள் மூடப்பட்டுள்ளதோடு 140000 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய தொழிற்சங்க சம்மேளனத்தின் உதவியுடன் ஜோதிபாசு அரசாங்கம் ரெலனிபாராவில் வேலைநிறுத்தம் செய்த சணல் ஆலைத் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸ் படையைத் திரட்டியது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கோலார் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் இந்திய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர்களால் தாக்கப்பட்டனர். இதில் பொலிஸ் படையும் சேர்ந்து கொண்டது. ஜோதிபாசு தமது சமீபத்திய அமெரிக்க விஜயத்தின் போது இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அரசாங்க மாற்றத்தினால் பாதிக்கப்பட்டு விடாது என உத்தரவாதமளித்தார்.

சகல வகையறாவைச் சேர்ந்த தேசியவாதங்களையும் பிரிவினைவாதங்களையும் நிராகரிக்கையில் சோ.தொ.. தேர்தல் விஞ்ஞாபனம் கூறுவதாவது: ... சோசலிசத் தொழிலாளர் கழகம் அனைத்து விதமான தேசியவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் நிராகரிக்கின்றது. இந்தியாவிலுள்ள தொழிலாளர்களுக்கும் சர்வதேச ரீதியாக உள்ள அவர்களது வர்க்க சகோதரர்களுக்கு இடையிலும் பகைமையைத் தூண்டிவிடும் அனைத்து முயற்சிகளையும் எதிர்க்கின்றது.

பாகிஸ்தான், நேபாளம், இலங்கை போன்ற அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள அகதிகள், குடிபெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்று நடாத்தப்படும் தேசியவெறிப் பிரச்சாரத்தை சோசலிசத் தொழிலாளர் கழகம் வன்மையாக எதிர்க்கின்றது.”

காங்கிஸ் ஆட்சிக்கு எதிரான முன்னோக்கு இலாப முறையை ஒழிக்கும் ஒரு தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை அமைக்கும் சோசலிச வேலைத்திட்டத்துக்கான ஒரு போராட்டத்தின் மூலம் மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட முடியும். சோ.தொ.. வேட்பாளர்கள் கைத்தொழில் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் இடையே ஒரு புரட்சிகரக் கூட்டுக்கு அழைப்பு விடுக்கின்றனர். அதன் மூலம் சமூக சமத்துவத்துக்கும் அனைத்து ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கும் போராட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கட்சியின் வேலைத்திட்டம் கண்ணியமான தொழில், வீட்டு வசதி, சகலருக்கும் கல்வி, சுகாதார வசதி, சகல அரசியல் கைதிகளுக்கும் விடுதலை, மரண தண்டனையை ஒழித்தல், மகளிருக்கு எதிரான சகல பாகுபாடுகளையும் ஒழித்தல், வெளிநாட்டு தொழிலாளருக்கும் அகதிகளுக்கும் எதிரான நெறிப்படுத்தப்பட்டுள்ள சகல சட்டங்களையும் நீக்குதல் என்பவற்றை உள்ளடக்கிக் கொண்டுள்ளது.

சோ.தொ.. மதச் சிறுபான்மையினருக்கு எதிரான சகல அரச இடர்பாடுகளுக்கும் முடிவு கட்டும்படியும் காஷ்மீர், பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து இந்திய இராணுவத்தை நிபந்தனையின்றி உடனடியாக வாபஸ் பெறும்படியும் கோருகின்றது.

தேசிய ஒடுக்குமுறைக்கு முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்ட நடாத்தும் ஒரு போராட்டத்தின் மூலமே முடிவு கட்ட முடியும் என்பதை அங்கீகரிப்பதன் அடிப்படையில் சோ.தொ.. வேட்பாளர்கள் இந்திய முதலாளித்துவ அரசையும் பிரிவினைவாதத்தையும் எதிர்க்கிறார்கள். அவர்கள் ஒரு இந்தியத் துணைக்கண்ட ஐக்கிய சோசலிஸ அரசை அமைக்கப் போராடுகின்றார்கள்.

இந்திய தேர்தல் முடிவுகள்: இந்தியத் துணைக்கண்டத்தை பிடித்துக் கொண்டுள்ள அரசியல் நெருக்கடியைக் காட்டுகின்றது

Thozhilalar Paathai Volume 470
May 1996

இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் இந்திய ஆளும் வர்க்கத்தையும் முழு இந்தியத் துணைக் கண்டத்தையும் பற்றிப் பிடித்துள் கொண்டு வளர்ச்சி பெறும் பிரமாண்டமான அரசியல் நெருக்கடியைக் காட்டுகின்றது. இந்த அரசியல் நெருக்கடி இந்தியத் துணைக் கண்டத்தில் சோசலிச குடியரசு ஒன்றியத்துக்காகப் போராடும் அவசியத்தை கோடானுகோடி தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் முன்னிலையில் தோற்றுவித்துள்ளது.


வெளியான சமீபத்தைய பொதுத் தேர்தல் முடிவுகளின்படி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி செலுத்திய காங்கிரஸ் கட்சி படுமோசமான தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளது. காங்கிரஸ்கட்சி 136 இடங்களையே கைப்பற்றியுள்ளது. முன்னர் அதற்கு லோக் சபாவில் 260 இடங்கள் இருந்தன.

படு பிற்போக்கு இனவாதக் கட்சியான பாரதீய ஜனதா கட்சியும் பாசிச சிவசேனாவும் கூட்டாக 195 இடங்களைக் கைப்பற்றிக் கொண்டுள்ளன. இது லோக் சபாவின் முழு ஆசன எண்ணிக்கையான 545ல் மூன்றில் ஒன்றுக்கு சற்று அதிகமானதாகும். பீ.ஜே.பீ.-சிவசேனா கூட்டு ஜனாதிபதி சங்கர் தயாள் ஷர்மாவின் அழைப்பின் பேரில் லோக் சபாவில் அதிக எண்ணிக்கை கொண்ட கட்சியாக அரசாங்கத்தை அமைத்துக் கொண்டுள்ள போதிலும் அரசாங்கத்தில் இருந்து கொள்ள இன்னும் 76 எம்.பீ.களின் முண்டுகோலை தேடிக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தை அமைத்துக் கொண்டுள்ள பீ.ஜே.பீ.க்கு முழு வாக்காளர் எண்ணிக்கையில் நூற்றுக்கு 20 வீதம் மட்டுமே கிடைத்துள்ளது.

தேசிய முன்னணி-இடது முன்னணி முதலாளித்துவக் கூட்டுக்கு 117 ஆசனங்கள் கிடைத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ற ஸ்டாலினிசக் கட்சிகள் இந்த முதலாளித்துவ கூட்டின் இடதுசாரி முன்னணியில் உள்ளன. இம்முன்னணிகள் இன்று மக்களால் தோற்கடிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முண்டுகோலுடன் ஒரு அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கின்றனர். முதலில் இக்கூட்டின் சீ.பீ.எம் தலைவரான ஜோதி பாசுவை பிரதமர் பதவியில் இருத்தி முதலாளித்துவ ஆட்சியின் பொறுப்பை ஏற்க எண்ணிய போதிலும் நெருக்கடியின் ஆழம் காரணமாக இத்தருணத்தில் நேரடியாக ஆட்சி அதிகாரத்துக்கு தோள் கொடுக்காமல் கர்நாடகத்தின் முதலாளித்துவ ஜனதா தளத்தின் தலைவர் தேவ கவுடாவுக்கு பிரதமர் பதவியைக் கையளிக்க எண்ணப்பட்டுள்ளது.

பீ.ஜே.பீ.-சிவசேனா கூட்டரசாங்கம் தமக்கு லோக் சபாவில் பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்கவே 30ம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்பேரில் கட்சிகள், கூட்டுக்கள், சுயேட்சைக் குழுக்களின் அங்கத்தவர்களை விலைக்கு வாங்கும் இயக்கம் திரைக்குப் பின்னால் நடைபெற்று வருகின்றது. இதில் வாக்குகளைக் கறந்து கொள்ள முடியாது போனால் இரண்டு கிழமை வயதான பீ.ஜே.பீ.-சிவசேனா அரசாங்கம் வீழ்ச்சி காணும். இதன் பின்னர் தேசிய முன்னணி-இடது முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் முன்னைய முன்னணியைப் போலவே இதுவும் இழுபறி முதலாளித்துவ குழுக்களின் ஒரு முன்னணியாதலால் இதன் ஆயுழும் சொற்பம். ஸ்டாலினிஸ்டுகளைக் கொண்ட அத்தகைய ஒரு அரசாங்கத்தை தற்காலிகமாக ஆட்சியில் வைத்திருப்பது என்பது தொழிலாளர்கள்-ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடாத்த அதைப் பயன்படுத்த முதலாளித்துவ வர்க்கம் எடுக்கும் தீர்மானத்திலேயே அது தங்கியுள்ளது.

இந்தியப் பொதுத் தேர்தலில் நூற்றுக்கு 60 வீதத்தினரே வாக்களித்துள்ளனர். இது வழக்கமான ஒரு போக்கு அல்ல. இது முதலாளித்துவ ஆட்சி தொடர்பாக பொதுமக்களிடையே வளர்ச்சி கண்டு வரும் வெறுப்பினை எடுத்துக் காட்டுகின்றது. எந்த ஒரு கட்சிக்கும் மக்கள் அடிப்படை இல்லாமல் ஒரு அரசாங்கத்தை அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையிலான ஆசனங்கள் கிடைக்காமை காங்கிரஸ் கட்சி நடாத்திய ஏகாதிபத்தியச் சார்பு ஆட்சி முறை தொடர்பாக பொதுஜன எதிர்ப்பும் அவ்வாறே இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவில் திணித்த அரசியல் அமைப்பு தொடர்பாக மக்களின் நம்பிக்கையீனமும் எதிர்ப்பும் வளர்ச்சி கண்டு வருவதைச் சுட்டிக் காட்டுகின்றது.

111 ஆண்டுகள் வயதுகள் படைத்த இந்திய தேசிய காங்கிரஸ் வீழ்ச்சி கண்டம் முன்னொருபோதும் இல்லாத ஒரு நிலைமையாகும். 1947ம் ஆண்டின் சுதந்திரம் எனப்படுவதன் பின்னர் 4 ஆண்டுகள் தவிர்த்த முழுக் காலத்தையும் ஆட்சி செய்தது இந்திய காங்கிரஸ் கட்சியேயாகும். இந்திய முதலாளி வர்க்கத்தின் இக்கட்சி பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போதும் அதன் பின்னரும் 1950களிலும் 1960களிலும் ஏகாதிபத்திய உலக அமைப்பினுள் பொதுமக்களை கட்டுப்படுத்தி வைக்கும் முக்கிய ஏகாதிபத்திய உபகரணமாக விளங்கியது. இக்கட்சி 1975ல் இந்திரா காந்தி காலத்தில் தோல்வி கண்டது. அந்த தோல்வி காங்கிரஸ் நாற்றமெடுப்பின் ஒரு கட்டமாக இருந்த போதிலும் இன்று நரசிம்மராவ் அரசாங்கத்தின் தோல்வி முற்றிலும் அதற்குச் சமானமானதல்ல.

நரசிம்மராவ் அரசாங்கத்தின் தோல்வியும் அனைத்துக் கட்சிகளதும் நெருக்கடியின் பின்னாலும் உள்ளவை இந்தியாவிலுள் கட்டவிழ்க்கப்பட்டுள்ள உலகப் பொருளாதாரத்தின் பூகோளமயத்துடன் ஒன்றிணைந்து கொள்ளும் வேலைத் திட்டத்தினால் வர்க்க உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரமாண்டமான மாற்றமாகும். காங்கிரசின் வீழ்ச்சியானதுஉ யுத்தத்தின் பின்னைய பொருளாதார, அரசியல் உறவுகள் பூகோளரீதியில் வீழ்ச்சி கண்டதைக் குறித்து நிற்கின்றது.

ஏகாதிபத்தியத்தின் கீழ் இடம் பெற்றுவரும் பூகோளமயத்துடன் இணைந்து கொள்ளும் பொருட்டு ராவோ, அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்தியாவை திறந்துவிடவும் அரசாங்கத் துறையை கரைத்துவிடவும் ஆரம்பித்தது. இந்தியத் தேசியக் கைத்தொழில்கள் வெளிநாட்டு முதலீடும் இறக்குமதியும் பெருக்கெடுத்து வரும்ந இலையில் அடியுண்டு போயிற்று! தொழிலாளர்களுக்கும் விவசாயிகள் உட்பட்ட ஒடுக்கப்படும் மக்களுக்கும் கிடைத்து வந்த உதவிமானிய வெட்டு ஆரம்பமாகியது. கடந்த நான்கு ஆண்டுகளுள் இடம்பெற்ற பொருளாதார மறுசீரமைப்பின் கீழ் ஒழிக்கப்பட்ட தொழில்களின் எண்ணிக்கை ஒரு கோடியெனக் கணக்கிடப்பட்டுள்ளது. வேலையற்றோர் எண்ணிக்கை 10 கோடிக்கு அதிகமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. முதலாளிகள் ஏகாதிபத்தியக் கம்பனிகளுடன் சோர்ந்து கோடிக்கணக்கான ரூபாக்களை கமிஷனாகச் சுருட்டிக் கொள்கிறார்கள். நாட்டினுள் உயர்ந்த வருமானம் பெறும் நூற்றுக்குப் 10 வீதத்தினர் நாட்டின் முழு வருமானத்தில் நூற்றுக்கு 90 வீதத்தை கட்டுப்பாட்டுக்கள் கொண்டு இருக்கும் அளவுக்கு சமூகத் துருவப்படுத்தல் உக்கிரம் கண்டுள்ளது. கடந்த நான்கு வருடங்களுள் இந்தியாவின் உத்தியோகப்பூர்வமான வறுமை வீதம் சனத்தொகையின் 36 வீதத்தில் இருந்து 48 வீதமாக உயர்ந்துள்ளது. பூகோளமயமாக்கலின் ஒரு வெளிப்பாடாக இந்தியா முழுவதும் குழந்தை உழைப்பு எண்ணிக்கை 4 கோடிகளைத் தாண்டியுள்ளது. இந்தியா சமூக ரீதியில் இரண்டு நாடாக பிளவுண்டு போயுள்ளது; அதாவது முதலாளிகளின் இந்தியா, தொழிலாளர்கள்-ஒடுக்கப்படும் மக்களின் இந்தியா.

தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் பயணம்

இந்திய பொதுத் தேர்தல் முடிவுகள் ஏகாதிபத்தியவாதிகளதும் ஏகாதிபத்தியச் சார்பு முதலாளிகளதும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் மேற்கொண்டுள்ள பயணத்தை எடுத்துக் காட்டுகின்றது. எனினும் இந்தியாவின் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் தாம் முகம் கொடுக்கும் ஆபத்துக்களைப் புரிந்து கொண்டாக வேண்டும். தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் முதலாளித வர்க்கத்தின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க பதிலீடு இல்லாமல் செய்யப்பட்டுள்ள ஒரு நிலைமையில் இதன் 'இலாபத்தை பிற்போக்காளர்கள் சுரண்டிக் கொள்கிறார்கள். பீ.ஜே.பீ.-சிவசேனா கூட்டு நொண்டி அரசாங்கம் அமைக்கும் அளவுக்கு ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அவர்கள் மக்களின் குழப்பநிலையை மதவாதம், இனவாதம் போன்றவற்றைப் பயன்படுத்திச் சூறையாடிக் கொள்கிறார்கள். பாசிச சக்திகளைப் பயன்படுத்திக் கொள்ளுவதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தைத் திருப்பித் தாக்கத் தயாராகி வருகின்றார்கள். இந்திய ஆளும் வர்க்கத்தின் நீண்ட காலக் கருவியான காங்கிரஸ் கட்சி பொருளாதார பூகோளமயமாக்கத்தின் எதிரில் சிதறுண்டு போகத் தொடங்கியுள்ளது. இது ஆளும் வர்க்கம் தமது ஏகாதிபத்திய அவசியங்களின் பேரில் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை நிர்வகிக்க பெரிதும் வலதுசாரி இ,ஆணுவ-பாசிச அமைப்புகளை கட்டி எழுப்பும் திசையில் வேகமாகத் தள்ளப்பட்டுள்ளதைக் காட்டிக் கொண்டுள்ளது. இந்தியாவினுள் வளர்ச்சி கண்டுள்ள நெருக்கடி இந்தியத் துணைக் கண்டத்தின் சகல நாடுகளின் உள்ளும் வளர்ச்சி கண்டுள்ள நிலைமைகளுடன் இணைந்து கொண்டுள்ளது. இந்நெருக்கடியின் தாற்பரியங்களை விளக்கித் தீர்வுக்கான முன்னோக்கினை நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் பூண்ட சோசலிசத் தொழிலாளர் கழகம் மட்டுமே முன் வைத்துள்ளது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் சோ.தொ.. மட்டுமே இந்திய துணைக் கண்ட சோசலிசக் குடியரசை அமைக்கும் மாற்று வேலைத் திட்டத்தின் கீழ் மூன்று வேட்பாளர்களை நிறுத்தியது.

Friday, September 30, 2016

இந்திய தேர்தல் முடிவுகள்: இந்தியத் துணைக்கண்டத்தை பிடித்துக் கொண்டுள்ள அரசியல் நெருக்கடியை காட்டுகின்றது


Thozhilalar Paathai 470
May 1996

இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் இந்திய ஆளும் வர்க்கத்தையும் முழு இந்தியத் துணைக் கண்டத்தையும் பற்றிப் பிடித்துக் கொண்டு வளர்ச்சி பெறும் பிரமாண்டமான அரசியல் நெருக்கடியைக் காட்டுகின்றது. இந்த அரசியல் நெருக்கடி இந்தியத் துணைக் கண்டத்தில் சோசலிச குடியரசு ஒன்றியத்துக்காகப் போராடும் அவசியத்தை கோடானுகோடி தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் முன்னிலையில் தோற்றுவித்துள்ளது.


 
வெளியான சமீபத்திய பொதுத் தேர்தல் முடிவுகளின்படி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி செலுத்திய காங்கிரஸ் கட்சி படுமோசமான தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 136 இடங்களையே கைப்பற்றியுள்ளது. முன்னர் அதற்கு லோக் சபாவில் 260 இடங்கள் இருந்தன.

படுபிற்போக்கு இனவாதக் கட்சியான பாரதீய ஜனதா கட்சியும் பாசிச சிவசேனாவும் கூட்டாக 195 இடங்களைக் கைப்பற்றிக் கொண்டுள்ளன. இது லோக் சபாவின் முழு ஆசன எண்ணிக்கையான 545 ல் மூன்றில் ஒன்றுக்கு சற்று அதிகமானதாகும். பீ.ஜே.பீ-சிவசேனா கூட்டு ஜனாதிபதி சங்கர் தயாள் ஷர்மாவின் அழைப்பின் பேரில் லோக்சபாவில் அதிக எண்ணிக்கை கொண்ட கட்சியாக அரசாங்கத்தை அமைத்துக் கொண்டுள்ள போதினும் அரசாங்கத்தில் இருந்து கொள்ள இன்னும் 76 எம்.பீ.களின் முண்டுகோலைத் தேடிக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தை அமைத்துக் கொண்டுள்ள பீ.ஜே.பீ.க்கு முழு வாக்காளர் எண்ணிக்கையில் நூற்றுக்கு 20 வீதம் மட்டுமே கிடைத்துள்ளது.

தேசிய முன்னணி-இடது முன்னணி முதலாளித்துவக் கூட்டுக்கு 117 ஆசனங்கள் கிடைத்துள்ளத.உ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ற ஸ்டாலினிசக் கட்சிகள் இந்த முதலாளித்துவ கூட்டின் இடதுசாரி முன்னணியில் உள்ளன. இம்முன்னணிகள் இன்று மக்களால் தோற்கடிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முண்டுகோலுடன் ஒரு அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கின்றனர். முதலில் இக்கூட்டின் சீ.பீ.எம். தலைவரான ஜோதி பாசுவை பிரதமர் பதவியில் இருத்தி முதலாளித்துவ ஆட்சியின் பொறுப்பை ஏற்க எண்ணிய போதிலும் நெருக்கடியின் ஆழம் காரணமாக இத்தருணத்தில் நேரடியாக ஆட்சி அதிகாரத்துக்கு தோள் கொடுக்காமல் கர்நாடகத்தின் முதலாளித்துவ ஜனதாதளத்தின் தலைவர் தேவ கவுடாவுக்கு பிரதமர் பதவியைக் கையளிக்க எண்ணப்பட்டுள்ளது.

பீ.ஜே.பீ-சிவசேனா கூட்டரசாங்கம் தமக்கு லோக் சபாவில் பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க மே 31 ம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்பேரில் கட்சிகள், கூட்டுக்கள், சுயேட்சைக் குழுக்களின் அங்கத்தவர்களை விலைக்கு வாங்கும் இயக்கம் திரைக்குப் பின்னால் நடைபெற்று வருகின்றது. இதில் வாக்குகளைக் கறந்து கொள்ள முடியாது போனால் இரண்டு கிழமை வயதான பீ.ஜே.பீ-சிவசேனா அரசாங்கம் வீழ்ச்சி காணும். இதன் பின்னர் தேசிய முன்னணி-இடது முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் முன்னைய முன்னணியைப் போலவே இதுவும் இழுபறி முதலாளித்துவ குழுக்களின் ஒரு முன்னணியாதலால் இதன் ஆயுளும் சொற்பம். ஸ்டாலினிஸ்டுகளைக் கொண்ட அத்தகைய ஒரு அரசாங்கத்தை தற்காலிகமாக ஆட்சியில் வைத்திருப்பது என்பது தொழிலாளர்கள்-ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடாத்த அதைப் பயன்படுத்த முதலாளித்துவ வர்க்கம் எடுக்கும் தீர்மானத்திலேயே அது தங்கியுள்ளது.

இந்தியப் பொதுத் தேர்தலில் நூற்றுக்கு 60 சதவீதத்தினரே வாக்களித்துள்ளனர். இது வழக்கமான ஒரு போக்கு அல்ல. இது முதலாளித்துவ ஆட்சி தொடர்பாக பொது மக்களிடையே வளர்ச்சி கண்டு வரும் வெறுப்பினை எடுத்துக்காட்டுகின்றது. எந்த ஒரு கட்சிக்கும் மக்கள் அடிப்படை இல்லாமல் ஒரு அரசாங்கத்தை அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையிலான ஆசனங்கள் கிடைக்காமை காங்கிரஸ் கட்சி நடாத்திய ஏகாதிபத்தியச் சார்பு ஆட்சி முறை தொடர்பாக பொதுஜன எதிர்ப்பும் அவ்வாறே இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாஇல் திணித்த அரசியல் அமைப்பு தொடர்பாக மக்களின் நம்பிக்கையீனமும் எதிர்ப்பும் வளர்ச்சி கண்டு வருவதைச் சுட்டிக் காட்டுகின்றது.

111 ஆண்டுக்கள் வயதுகள் படைத்த இந்திய தேசிய காங்கிரஸ் வீழ்ச்சி கண்டமை முன்னொருபோதும் இல்லாத ஒரு நிலைமையாகும். 1947ம் ஆண்டின் சுதந்திரம் எனப்படுவதன் பின்னர் 4 ஆண்டுகள் தவிர்த்த முழுக் காலத்தையும் ஆட்சி செய்தது இந்திய காங்கிரஸ் கட்சியேயாகும். இந்திய முதலாளி வர்க்கத்தின் இக்கட்சி பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போதும் அதன் பின்னரும் 1950களிலும் 1960களிலும் ஏகாதிபத்திய உலக அமைப்பினுள் பொதுமக்களை கட்டுப்படுத்தி வைக்கும் முக்கிய ஏகாதிபத்திய உபகரணமாக விளங்கியது. இக்கட்சி 1975ல் இந்திராகாந்தி காலத்தில் தோல்வி கண்டது. அந்த தோல்வி காங்கிரஸ் நாற்றமெடுப்பின் ஒரு கட்டமாக இருந்த போதிலும் இன்று நரசிம்மராவ் அரசாங்கத்தின் தோல்வி முற்றிலும் அதற்குச் சமானமானதல்ல.

நரசிம்மராவ் அரசாங்கத்தின் தோல்வியும் அனைத்துக் கட்சிகளதும் நெருக்கடியின் பின்னாலும் உள்ளவை இந்தியாவினுள் கட்டவிழ்க்கப்பட்டுள்ள உலகப் பொருளாதாரத்தின் பூகோளமயத்துடன் ஒன்றிணைந்து கொள்ளும் வேலைத் திட்டத்தினால் வர்க்க உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரமாண்டமான மாற்றமாகும். காங்கிரசின் வீழ்ச்சியானது யுத்தத்தின் பின்னைய பொருளாதார, அரசியல் உறவுகள் பூகோளரீதியில் வீழ்ச்சி கண்டதைக் குறித்து நிற்கின்றது.

ஏகாதிபத்தியத்தின் கீழ் இடம் பெற்றுவரும் பூகோளமயத்துடன் இணைந்து கொள்ளும் பொருட்டு ராவோ, அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்தியாவை திறந்துவிடவும் அரசாங்கத் துறையை கரைத்துவிடவும் ஆரம்பித்தது. இந்திய தேசியக் கைத்தொழில்கள் வெளிநாட்டு முதலீடும் இறக்குமதியும் பெருக்கெடுத்து வரும் நிலையில் அடியுண்டு போயிற்று. தொழிலாளர்களுக்கும் விவசாயிகள் உட்பட்ட ஒடுக்கப்படும் மக்களுக்கும் கிடைத்து வந்த உதவிமானிய வெட்டு ஆரம்பமாகியது. கடந்த நான்கு ஆண்டுகளுள் இடம் பெற்ற பொருளாதார மறுசீரமைப்பின் கீழ் ஒடுக்கப்பட்ட தொழில்களின் எண்ணிக்கை ஒரு கோடியெனக் கணக்கிடப்பட்டுள்ளது. வேலையற்றோர் எண்ணிக்கை 10 கோடிக்கு அதிகமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. முதலாளிகள் ஏகாதிபத்தியக் கம்பனிகளுடன் சேர்ந்து கோடிக்கணக்கான ரூபாக்களை கமிஷனாகச் சுருட்டிக் கொள்கிறார்கள். நாட்டினுள் உயர்ந்த வருமானம் பெறும் நூற்றுக்குப் 10 வீதத்தினர் நாட்டின் முழு வருமானத்தின் நூற்றுக்கு 90 வீதத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு இருக்கும் அளவுக்கு சமூகத் துருவப்படுத்தல் உக்கிரம் கண்டுள்ளது. கடந்த நான்கு வருடங்களுள் இந்தியாவின் உத்தியோகப்பூர்வமான வறுமை வீதம் சனத்தொகையின் 36 வீதத்தில் இருந்து 48 வீதமாக உயர்ந்துள்ளது. பூகோளமயமாக்கலின் ஒரு வெளிப்பாடாக இந்தியா முழுவதும் குழந்தை உழைப்பு எண்ணிக்கை 4 கோடிகளைத் தாண்டியுள்ளது. இந்தியா சமூக ரீதியில் இரண்டு நாடாக பிளவுண்டு போயுள்ளது; அதாவது - முதலாளிகளின் இந்தியா, தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் இந்தியா.

தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் பயணம்

இந்திய பொதுத் தேர்தல் முடிவுகள் ஏகாதிபத்தியவாதிகளதும் ஏகாதிபத்தியச் சார்பு முதலாளிகளதும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் மேற்கொண்டுள்ள பயணத்தை எடுத்துக் காட்டுகின்றது. எனினும் இந்தியாவின் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் தாம் முகம் கொடுக்கும் ஆபத்துக்களைப் புரிந்து கொண்டாக வேண்டும். தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்கள் முதலாளி வர்க்கத்தின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க பதிலீடு இல்லாமல் செய்யப்பட்டுள்ள ஒரு நிலைமையில் இதன் இலாபத்தை பிற்போக்காளர்கள் சுரண்டிக் கொள்கிறார்கள். பீ.ஜே.பீ-சிவசேனா கூட்டு நொண்டி அரசாங்கம் அமைக்கும் அளவுக்கு ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அவர்கள் மக்களின் குழப்பநிலையை மதவாதம், இனவாதம் போன்றவற்றைப் பயன்படுத்திச் சூறையாடிக் கொள்கிறார்கள். பாசிச சக்திகளைப் பயன்படுத்திக் கொள்ளுவதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தைத் திருப்பித் தாக்குத் தயாராகி வருகின்றார்கள். இந்திய ஆளும் வர்க்கத்தின் நீண்ட கால கருவியான காங்கிரஸ் கட்சி பொருளாதார பூகோளமயமாக்கத்தின் எதிரில் சிதறுண்டு போகத் தொடங்கியுள்ளது. இது ஆளும் வர்க்கம் தமது ஏகாதிபத்திய அவசியங்களின் பேரில் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை நிர்வகிக்க பெரிதும் வலதுசாரி இராணுவ-பாசிச அமைப்புகளை கட்டி எழுப்பும் திசையில் வேகமாகத் தள்ளப்பட்டுள்ளதைக் காட்டிக் கொண்டுள்ளது. இந்தியாவினுள் வளர்ச்சி கண்டுள்ள நெருக்கடி இந்தியத் துணைக் கண்டத்தின் சகல நாடுகளின் உள்ளும் வளர்ச்சி கண்டுள்ளள நிலைமைகளுடன் இணைந்து கொண்டுள்ளது. இந்நெருக்ககடியின் தாற்பரியங்களை விளக்கித் தீர்வுக்கான முன்னோக்கினை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் பூண்ட சோசலிசத் தொழிலாளர் கழகம் மட்டுமே முன்வைத்துள்ளது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் சோ.தொ.. மட்டுமே இந்திய துணைக் கண்ட சோசலிசக் குடியரசை அமைக்கும் மாற்று வேலைத்திட்டத்தின் கீழ் மூன்று வேட்பாளர்களை நிறுத்தியது.

Thursday, June 9, 2016

இந்தியத் தேர்தலில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் - இந்திய சோ.தொ.க. தேர்தல் விஞ்ஞாபனம்


இதழ் 470, 1996 மே 31

நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவுடன் ஐக்கியம் பூண்ட இந்திய ட்ரொட்ஸ்கிசக் கட்சியான சோசலிசத் தொழிலாளர் கழகம் இந்தியப் பொதுத் தேர்தலில் ஒரு சோசலிசப் பதிலீட்டுக்காகப் போராட மூன்று வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஜோற்றன் றோயும் கே. பழனியும் முறையே கல்கத்தாவிலும் வட சென்னையிலும் லோக்சபாவுக்குப் போட்டியிடுகின்றார்கள். எம். கைலாசம் சென்னை-வில்லிவாக்கம் தொகுதியில் தமிழ்நாடு சட்டசபைக்குப் போட்டியிடுகின்றார்.

இந்தப் பொதுத் தேர்தல் சமூகத் துருவப்படுத்தலும் வேலையில்லாத் திண்டாட்டமும் உக்கிரம் கண்டுள்ள நிலையில் நடைபெறுகின்றது. கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்திய முதலாளித்துவத்தின் மைய ஆணியாக விளங்கிய காங்கிரஸ் கட்சி ஆழமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. 74 வயது நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசாங்கத் துறைத் தொழில்களை வெட்டிச் சரித்துள்ளது. அரசுடமைக் கைத்தொழில்களை தனியார்மயமாக்கியுள்ளது. விவசாயிகளுக்கான அரசாங்க மானியங்களில் பெரும் வெட்டு இடம் பெற்றுள்ளது. இது இலட்சக் கணக்கான ஏழை விவசாயிகளை வறுமையினதும் பட்டினியினதும் கொடும் பிடிக்குள் தள்ளியுள்ளது.

பூகோளமயமான முதலாளித்துவ உற்பத்தியின் எதிரில் காங்கிரஸ் கட்சி அதன் பாரம்பரியமான தேசியவாத சுயபூர்த்திக் கொள்கைகளைக் கைவிட்டுள்ளது. பொருளாதாரத்தை ட்ரான்ஸ்நஷனல் கூட்டுத்தாபனங்கள் சுரண்டுவதற்குத் திறந்துவிட்டுள்ளது. அவ்வாறே பல்வேறு ஸ்டாலினிசக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தொழில்களையும் வாழ்க்கை நிலைமைகளையும் ஒழிப்பதை அங்கீகரித்துள்ளன. சோசலிசத் தொழிலாளர் கழகம் அதனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மூன்று முதலாளித்துவ முன்னணிகளையும்--காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி, தேசியவாத-இடதுசாரி முன்னணி—நிராகரிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தேசிய முன்னணி-இடதுசாரி முன்னணி எனப்படுவது ஸ்டாலினிஸ்டுகளுக்கும் பல்வேறு பிராந்தியக் கட்சிகளுக்கும் ஜனதாக் கட்சிக்கும் இடையேயான ஒரு கூட்டாகும்.

இந்தச் சகல கட்சிகளும் இந்தியாவில் இருந்து வரும் வறுமையை ஆதரிக்கின்றன. இந்தியாவில் எந்தக் கோஷ்டி அடுத்த அரசாங்கத்தை அமைத்தாலும் அது இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தாக்குதலை நடாத்துவது உறுதி.

ஊழல்

இன்றைய பொதுத் தேர்தல் 115 அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் 43 மில்லியன் ரூபாக்களை 1989க்கும் 1991க்கும் இடையே இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒரு நிலையில் நடைபெறுகின்றது. இதில் ஏழு காங்கிரஸ் அமைச்சர்கள், பாரதீய ஜனதாக் கட்சியின் சிரேட்ட புள்ளிகள் ஆகியோர் அடங்குவர். காங்கிரசின் பேரிலான ஆழமான எதிர்ப்பும் இந்திய பாராளுமன்ற அரசியல் முறையுடனான வெறுப்பும் பாரதீய ஜனதாக் கட்சியினாலும் மற்றும் இனவாதக் கட்சிகளினாலும் இந்து சோவினிச, பிரிவினைத் திசைகளில் திசை திருப்பப்பட்டுள்ளது.

சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் இந்த பிற்போக்கு அணிதிரள்விற்கு ஸ்டாலினிசக் கட்சிகளே முக்கிய காரணம் எனச் சுட்டிக் காட்டியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜோதிபாசு தலைமையிலான ஒரு இடதுசாரி முன்னணி மூலம் ஆட்சி செலுத்துகின்றது. இவரே இன்றைய தேசிய முன்னணி-இடதுசாரி முன்னணியின் தலைவர். இவரது ஆட்சி தொழிலாளர்களுக்கு எதிராக முறைமுறையான தாக்குதல்களை நடாத்தி உள்ளது. இதனது புதிய கைத்தொழில் கொள்கையின் கீழ் 28 அரச உடமை கைத்தொழில்கள் மூடப்பட்டுள்ளதோடு 140000 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய தொழிற்சங்க சம்மேளனத்தின் உதவியுடன் ஜோதிபாசு அரசாங்கம் ரெலனிபாராவில் வேலைநிறுத்தம் செய்த சணல் ஆலைத் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸ் படையைத் திரட்டியது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கோலார் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் இந்திய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர்களால் தாக்கப்பட்டனர். இதில் பொலிஸ் படையும் சேர்ந்து கொண்டது. ஜோதிபாசு தமது சமீபத்திய அமெரிக்க விஜயத்தின் போது இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொருளாதாச் சீர்திருத்தங்கள் அரசாங்க மாற்றத்தினால் பாதிக்கப்பட்டு விடாது என உத்தரவாதமளித்தார்.

சகல வகையறாவைச் சேர்ந்த தேசியவாதங்களையும் பிரிவினைவாதங்களையும் நிராகரிக்கையில் சோ.தொ.. தேர்தல் விஞ்ஞாபனம் கூறுவதாவது: … சோசலிசத் தொழிலாளர் கழகம் அனைத்துவிதமான தேசியவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் நிராகரிக்கின்றது. இந்தியாவிலுள்ள தொழிலாளர்களுக்கும் சர்வதேச ரீதியாக உள்ள அவர்களது வர்க்க சகோதரர்களுக்கு இடையிலும் இந்தியாவிலுள்ள தொழிலாளர்களுக்கும் சர்வதேச ரீதியாக உள்ள அவர்களது வர்க்க சகோதரர்களுக்கு இடையிலும் இந்தியாவினுள் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ மற்றும் பல்வேறு மொழிகள் பேசும் தொழிலாளர்களுக்கு இடையிலும் பகைமையை தூண்டிவிடும் அனைத்து முயற்சிகளையும் எதிர்க்கின்றது.

பாகிஸ்தான், நேபாளம், இலங்கை போன்ற அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள அகிதகள் குடிபெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்று நடாத்தப்படும் தேசியவெறிப் பிரச்சாரத்தை சோசலிசத் தொழிலாளர் கழகம் வன்மையாக எதிர்க்கின்றது.”

காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான முன்னோக்கு இலாப முறையை ஒழிக்கும் ஒரு தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை அமைக்கும் சோசலிச வலைத்திட்டத்துக்கான ஒரு போராட்டத்தின் மூலம் மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட முடியும். சோ.தொ.. வேட்பாளர்கள் கைத்தொழில் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் இடையே ஒரு புரட்சிகரக் கூட்டுக்கு அழைப்பு விடுக்கின்றனர். அதன் மூலம் சமூக சமத்துவத்துக்கும் அனைத்து ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கும் போராட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கட்சியின் வேலைத்திட்டம் கண்ணியமான தொழில், வீட்டு வசதி, சகலருக்கும் கல்வி, சுகாதார வசதி, சகல அரசியல் கைதிகளுக்கும் விடுதலை, மரண தண்டனையை ஒழித்தல், மகளிருக்கு எதிரான சகல பாகுபாடுகளையும் ஒழித்தல், வெளிநாட்டு தொழிலாளருக்கும் அகதிகளுக்கும் எதிராக நெறிப்படுத்தப்பட்டுள்ள சகல சட்டங்களையும் நீக்குதல் என்பவற்றை உள்ளடக்கிக் கொண்டுள்ளது.

சோ.தொ.. மதச் சிறுபான்மையினருக்கு எதிரான சகல அரச இடர்பாடுகளுக்கும் முடிவு கட்டுப்டியும் காஷ்மீர், பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து இந்திய இராணுவத்தை நிபந்தனையின்றி உடனடியாக வாபஸ் பெறும்படியும் கோருகின்றது.

தேசிய ஒடுக்குமுறைக்கு முதலாளித்துவத்தை ஒழித்துக் கொட்ட நடாத்தும் ஒரு போராட்டத்தின் மூலமே முடிவு கட்டமுடியும் என்பதை அங்கீகரிப்பதன் அடிப்படையில் சோ.தொ.. வேட்பாளர்கள் இந்திய முதலாளித்துவ அரசையும் பிரிவினைவாதத்தையும் எதிர்க்கிறார்கள். அவர்கள் ஒரு இந்தியத் துணைக்கண்ட ஐக்கிய சோசலிச அரசை அமைக்கப் போராடுகின்றார்கள்.