"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Wednesday, July 27, 2016

துப்புரவுத் துறையைத் தனியாரிடம் ஒப்படைப்பதை முறியடி!


Volume 43 (File 414)
November 1991

பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகிய ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் கட்டளைகளை ஏற்று தொழிற்துறைகளையும் துப்புறவுத் துறை போன்ற சமூக சேவைகளையும் தனியாரிடம் தாரை வார்க்கும் முதலாளித்துவ அ.தி.மு.., .காங். அரசாங்கத்தின் முயற்சியை முறியடிக்கமுதலாளித்துவ ஆட்சியினைத் தூக்கிவீசிதொழிலாளர் விவசாயி அரசாங்கம் அமைக்கின்ற பொதுப் போராட்டத்தில் ஒன்றிணையுமாறு துப்புரவுத் தொழிலாளர்களை சோசலிசத் தொழிலாளர் கழகம் அறைகூவி அழைக்கின்றது.

கொத்தடிமை நிலையில் துப்புரவுத் தொழிலாளர்கள்

சுமார் 10,000க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் மாநகராட்சியின் கீழ் பணி புரிந்து கொண்டிருக்கின்றார்கள். சுமார் 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கின்றனர். இந்த தொழிலாளிகள் அனைவருமே அடிமைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வண்டியை தாங்களே ஓட்டி குப்பையை வாரிக் கொட்டுகிறார்கள். வண்டியில் குப்பை அதிகமாகும் பொழுது வண்டியின் குப்பையின் மேல் ஏறி மிதிக்கின்றார்கள். இதனால் அவர்களது கண்ணாடித் துண்டுகளால் கிழிக்கப்படுகின்றன. இவர்களுக்கு செருப்பு தரப்படுவது இல்லை, குப்பையில் பிறரால் எறியப்பட்ட கிழிந்த பழைய செருப்புகளை தேடி எடுத்து போட்டுக் கொள்கிறார்கள். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான செருப்பு, சோப்பு, டவல், கையுறை எண்ணெய் போன்றவை மறுக்கப்படுகின்றன. மெடிகல் லீவ் உண்டு ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது. பண்டிகை விடுமுறை என்பதெல்லாம் கிடையாது. வாரத்திற்கு சனிக்கிழமை ½ நாளும் விடுமுறை ஞாயிற்றுக்கிழமை ½ நாளும் விடுமுறை. ஆனால் முழு நாளும் வேலையை செய்து விட்டுத்தான் செல்ல வேண்டும். ஒருநாள் விடுமுறை தருவதாக ஒப்புக் கொள்ளப்பட்டு இன்னும் தரப்படவில்லை. மேலும் இவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்று செல்லும் பொழுது அவர்களுக்கு சேர வேண்டிய பணம் இழுத்தடிக்கப்பட்டு சில வருடங்கள் கழித்து தரப்படுகிறது.

அதிகாரிகளான Ciகள் தொழிலாளருக்கு சேர வேண்டிய எந்தப் பணமாக இருந்தாலும் கமிஷன் ஏஜென்ட் போல் 100க்கு 10 என்று எடுக்கிறார். தொழிலாளி யாராவது எதிர்த்து கேட்டால் அவரை வேறு இடத்திற்கு மாற்றுகிறார். இல்லையேல் வேலையே கொடுக்காமல் மேல் அதிகாரியைப் பார் என்று கூறி மாதக் கணக்கில் அலைய விடுகிறார்.

துப்புரவுத் தொழிலாளர்களுக்காக 'பெயரளவிற்கு' இருக்கக்கூடிய தொழிற்சங்கத் தலைமை சந்தா வசூல் செய்வதில் கண்ணும் கருத்துமாக செயல்படுகிறது. ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிலாளியை காட்டிக் கொடுத்தவரும் முதுபெரும் ஸ்டாலினிஸ்டுமான கே.டி.கே. தங்கமணி தான் இதன் கௌரவத் தலைவர். கருப்பண்ணனும் தங்கமணியும் அங்கம் வகிக்கும் இச்சங்கம் கார்ப்பரேஷன் நிர்வாகத்தின் ஏஜென்சியாக தொழிலாளர்களுக்குள் செயல்பட்டு வருகின்றது. கருப்பண்ணனை தொழிலாளர்கள் மடக்கிப் பிடித்து தங்கள் குறைகளைத் தீர்க்க போராடுமாறு நிர்பந்தித்தால், மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு கூழைக் கும்பிடு போட்டு, அவர்கள் பாதத்தை நக்கி தொழிலாளர்களின் வயிற்றிலடிப்பதே இவரது வாடிக்கையாகும். இது கருப்பண்ணனின் தனிப்பட்ட குணாம்சத்தோடு சம்பந்தப்பட்டதல்ல. மாறாக அவர் சார்ந்திருக்கும் சிபிஐ ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் எதிர்புரட்சிகர ஏஜென்சி பாத்திரத்தின் ஓர் அங்கமாகும்.

ஸ்டாலினிச மக்கள் முன்னணிக் கொள்கையை நிராகரி

CPI, CPI(M) ஸ்டாலினிச கட்சிகள் வர்க்கக்கூட்டு வைத்துக் கொண்டு மக்கள் முன்னணியை அமைத்து முதலாளித்துவ ஆட்சியை தக்க வைப்பதையே தனது வேலைத்திட்டமாக கொண்டுள்ளன. தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியினரின் போராட்டத்திலிருந்து மற்றொரு பகுதியைத் தனிமைப்படுத்தி ஒன்று சேரவிடாமல் முதலாளித்துவத்திற்கு முண்டு கொடுத்து வருகின்றன. ஏகாதிபத்தியத்தின் புதிய ஒழுங்கு முறையை சமன்படுத்த ஸ்டாலினிஸ்டுகள் முழு ஒத்துழைப்புடன் செயல்படுகின்றனர். வேலையின்மை விலைவாசி உயர்வு, சம்பள வெட்டு, ஆட்குறைப்பு இதிலிருந்து விடுபட தொழிலாள வர்க்கம் எழுச்சி கொண்டு வரும்பொழுது வருடத்திற்கு ஒருமுறை 'பாரத் பந்த்' என்று தொழிலாளர்களின் எழுச்சியை மட்டுப்படுத்துகின்றன. எனவே துப்புரவுத் தொழிலாளர்கள் இத்துரோகத் தலைமையிலிருந்து விடுபட வேண்டும். விடுபட்டு சீர்திருத்தவாத முதலாளித்துவ தலைமையைக் கட்டுவதன் மூலமும் (.தி.மு.. தி.மு.. காங்கிரஸ், ஜனதா, பா.ஜனதா தீர்வு காண முடியாது. மாறாக துப்புரவுத் தொழிலாளர்கள் புரட்சிகரத் தலைமையான டிராட்ஸ்கிச அணியைக் கட்ட வேண்டும். துப்புரவுத் துறையை தனியார் மயமாக்கலுக்கு எதிரான போராட்டமானது அ.தி.மு.. காங்கிரஸ் திமுக ஜனதா பா.ஜனதா போன்ற முதலாளித்துவ கட்சியின் ஆட்சிகளை தூக்கியெறிந்து தொழிலாளர்களின் ஆட்சியை அமைக்கும் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்ததாகும். “இன்றைய சகாப்தத்தில் தொழிற்சங்கங்கள் ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் புரட்சியைத் தடுப்பதற்காகத் தொழிலாளர்களை கீழ்ப்படியச் செய்து அடக்குவதற்கான இரண்டாம் உபகரணங்களாக மாற வேண்டும். அல்லது அதற்கு நேர்மாறாகத் தொழிற்சங்கங்கள் பாட்டாளி வர்க்க புரட்சி இயக்கத்தின் உபகரணங்களாக மாற வேண்டும்?' என்று டிராட்ஸ்கி கூறியது போல் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு புதிய புரட்சிகர வேலைத் திட்டமும் புரட்சிகரத் தலைமையுமே முதல் தேவை ஆகும். எனவே துப்புரவுத் தொழிலாளர்கள் பின்வரும் வேலைத்திட்டத்தின் கீழ் போராட வேண்டும் என டிராட்ஸ்கிச தொழிலாளர் அணி முன் வைக்கிறது.

ஃ அனைத்து ஊழியர்களும் நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

ஃ அடிப்படை வசதிகளான சோப்பு, செருப்பு, எண்ணெய், டவல், கையுறை போன்றவை அனைத்தும் வழங்கப்பட வேண்டும்!

ஃ தொழிலாளி உட்பட அவரது குடும்பத்திற்கு முழு மருத்துவ வசதியும் தொழிலாளி குடியிருப்பு வசதியும் அளிக்கப்பட வேண்டும்.

இவை அனைத்தும் பெற

ஃ அனைத்து தொழிற்துறைகளையும், வங்கிகளையும், முதலாளிக்கு ஒரு பைசா நஷ்ட ஈடின்றி தொழிலாள வர்க்க ஆதிக்கத்தின் கீழ் தேசிய மயமாக்க ஒரு காலவரையற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்ததின் மூலம் தொழிலாளர் விவசாய அரசாங்கம் அமைக்கப் போராட வேண்டும்.

சிபிஐ, சிபிஐ (எம்) ஸ்டாலினிசத் தலைமைகளை முதலாளித்துவக் கட்சிகளுடனான உறவைத் துண்டிக்குமாறு தொழிலாளர்கள் நிர்பந்திக்க வேண்டும். புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடும் சோசலிச தொழிலாளர் கழகத்தை பரந்த கட்சியாக கட்டியெழுப்ப முன்வருமாறு துப்புரவுத் தொழிலாளர்களை அழைக்கிறோம். எம்.கே.

No comments:

Post a Comment