"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Showing posts with label 1998-September. Show all posts
Showing posts with label 1998-September. Show all posts

Friday, November 23, 2018

இந்திய ஸ்டாலினிஸ்டுகள் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்க தயார்


Thozhilalar Paathai Volume 490
September 1998
பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டரசாங்கம் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வீழ்ச்சி காணும் அறிகுறிகள் ஏற்பட்டுள்ள ஒரு நிலையில் காங்கிரஸ் கட்சி முதலாளிகளின் அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்க இந்திய ஸ்டாலினிஸ்டுகள் முன்வந்துள்ளனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மேற்கு வங்காள முதலமைச்சருமான ஜோதி பாசு முன்னணியில் நின்று கொண்டுள்ளார். இவர் ஜூன் 28ம் திகதி ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பாரதீய ஜனதா கட்சி கூட்டரசாங்கம் வீழ்ச்சி காணும் நிலையில் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கும் தயார் நிலையை பின்வருமாறு வெளிப்படுத்தினார்: சீ.பீ.. (எம்) பா... அரசாங்கம் வீழ்ச்சி கண்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு () எதிராக வாக்களிக்கப் போவதில்லை என்பதை நாம் ஜனாதிபதிக்கு அறிவிப்போம்,” என்றுள்ளனர்.

இந்த பேட்டிக்கு சில தினங்களுக்கு முன்னர் தாம் புதுடில்லி சென்றதாகவும் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி அங்கத்தவர் குழுவின் தலைவரான மாஜி நிதி அமைச்சர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து இது பற்றிப் பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும் கூறிய ஜோதிபாசு அப்பேட்டியில் மேலும் கூறியதாவது: “பா... க்கு பதிலீடாக தோன்றக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் () கட்சி மட்டுமே என நான் திரு. மன்மோகன்சிங்கிடம் கூறினேன். அதனுள் சில இனவாதக் குழுக்கள் இருந்த போதிலும் காங்கிரசுக்கு மதச்சார்பற்ற தன்மை உள்ளது,” என்றுள்ளார். காங்கிரஸ் கட்சியை இந்து சோவினிச பா...வுக்கு எதிராக இருந்து கொண்டுள்ள ஒரே பதிலீடாகவும் மதச்சார்பற்ற சக்தியாகவும் தூக்கிப் பிடிக்கும் ஜோதிபாசு, பா... அரசாங்கம் வீழ்ச்சியடையும் நிலையில் முதலாளி வர்க்க ஆட்சியைக் கட்டிக் காப்பதில் தோள் கொடுக்கும் பொறுப்பு பற்றி காங்கிரஸ்முதலாளிகளுக்கு புரிய வைக்கும் கைங்கரியத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இந்திய முதலாளித்துவப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியுடன் நின்றுவிடாத ஜோதிபாசு அதே நாளில் இந்தியத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனுக்கும் பேட்டி அளித்துள்ளார். மேற்கு வங்காளம் திரும்பியதும் அவர் மாநில சபையைக் கூட்டி நிகழ்த்திய உரையில் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கும் பணி பற்றி கட்சியின் ஏனைய தலைவர்களுக்கு பின்வருமாறு கூறினார்: “பா... வளர்ச்சியால் தோன்றியுள்ள புதிய நிலைமையினுள் காங்கிரஸ் கட்சியுடன் ஐம்பது ஆண்டுகளாக இருந்து வந்த கோட்பாட்டு எதிர்ப்பை கைவிட எமக்கு நேரிடும்,” என்றுள்ளார்.

பா... அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முன்கூட்டியே காங்கிரஸ் அரசாங்கத்துக்கு தோள்கொடுக்கும் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள ஜோதிபாசு, அதை வெளிவெளியாகக் கூறும் பிரச்சார இயக்கத்தையும் மாநிலத்தில் முன்னெடுத்துள்ளார். இந்த நடவடிக்கை ஏதோ ஒரு வகையில் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களிடையே தாம் மேலும் அன்னியப்படுவதற்கான ஒரு காரணமாகிவிடுமோ என சீ.பீ.. (எம்) சீ.பீ.. கட்சிகளின் சில தலைவர்களும் இவர்களுடன் இடதுசாரி முன்னணி என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டுள்ள போர்வாட் புளொக் போன்ற மாஜி குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளும் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால் இவர்களில் ஒருவர் தன்னும் காங்கிரசுக்கு முண்டு கொடுக்கும் தீர்மானத்துக்கு எதிராக கருத்துத் தெரிவிக்காததோடு அத்தகைய ஒரு முடிவு தமது கட்சிகளின் மத்திய குழுக்களையும் இடதுசாரி முன்னணியையும் கூட்டி நடாத்தும் கலந்துரையாடலின் மூலம் எடுக்கப்பட வேண்டும் எனக் கூறிக் கொண்டுள்ளனர்.

ஜூலை 7ம் திகதி மேற்கு வங்காளத்தின் தலைநகரான கல்கத்தாவில் சீ.பீ.. (எம்) தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் பேசிய அதன் ஒரு தலைவரான வீமன் பாசு கீழ்கண்டவாறு கூறியதாக முதலாளித்துவப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன: “காங்கிரஸ் கட்சி () அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் எந்த ஒரு தீர்மானத்தையும் எமது கட்சி இதுவரை எடுக்கவில்லை. மத்திய குழு உறுப்பினர்கள் இம்மாதம் கூடி அது பற்றி முடிவு எடுப்பர்" என்றுள்ளார்.

'கடும் போக்காளர்' என முதலாளித்துவ வெகுஜனத் தொடர்புச் சாதனங்களால் தூக்கிப் பிடிக்கப்படும் சீ.பீ.. (எம்) தலைவரான சீதாராம் யெச்வுரி ஜூன் 29ம் திகதி பத்திரிகையாளர்களுக்கு வெளியிட்ட ஒரு அறிக்கையில் வார்த்தைகளைக் கவனமாகக் கையாண்டதன் மூலம் ஜோதிபாசுவின் அறிக்கைக்கு ஆதரவு வழங்கினார். 'பா... அரசாங்கம் வீழ்ச்சி காணும் வரை பொறுத்திருந்து நிலைமை அபிவிருத்தி காணும் தன்மைக்கு ஏற்ப அதற்கு பதிலளிப்பது தமது கட்சியின் நிலைப்பாடு' என அவர் கூறியுள்ளார். பா... அரசாங்கம் வீழ்ச்சி காணும் நிலையில் காங்கிரசுக்கு அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதில்லை என்று மட்டுமே ஜோதிபாசு கூறியதாகவும் அந்த விதத்தில் எதிராக வாக்களிக்காது இருப்பதற்கும் காங்கிரசுக்கு ஆதரவு வழங்குவதற்கும் இடையே வேறுபாடு இருப்பதாகவும் இவர் கூறினார். இதன் மூலம் காங்கிரசுக்கு முண்டு கொடுக்கும் தமது கடைகெட்ட கொள்கையை பூசிமறைக்க இவர் முயன்றுள்ளார்.

இதன் மூலம் இந்திய ஸ்டாலிஸ்டுகள் காங்கிரஸ் கட்சி உட்பட்ட முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டாக பொருளாதார நிகழ்ச்சிநிரலை நடைமுறைக்கிடுவதே திட்டம். காங்கிரஸ் பொருளாதாரக் கொள்கையை எதிர்ப்பதாகவும் தமது ஆதரவைப் பெற வேண்டுமானால் அந்தக் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் இந்தியன் ஸ்டாலினிஸ்டுகள் கூறிக் கொள்வது அவர்களின் அரசியல் மோசடியின் ஒரு பாகமாகும்.

Tuesday, June 14, 2016

சென்னை: பொலிசாரும் தொழிற்சங்கத் தலைவர்களும் தொழிலாளர்களுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டு

இதழ் 490 செப்டம்பர் 1998


தொழிற்சங்க அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் பின்னர் பொய்க்குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுத்துள்ள ஐந்து ஆடைக் கைத்தொழிலாளர்களைப் பாதுகாக்க இந்திய சோசலிசத் தொழிலாளர் கழகம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. சோசலிசத் தொழிலாளர் கழகம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியத்துடன் செயற்படும் ஒரு அமைப்பாகும்.

இந்தச் சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கைத்தொழில் தொழிலாளர் சங்க சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர்கள் தமக்கு எதிரான சங்க அங்கத்தவர்களைத் தாக்கப் போவதாகப் பயமுறுத்தியதோடு சோ.தொ.. ஆதரவாளராகப் பெயர்பெற்ற ஒரு தொழிலாளியையும் தாக்கினர்.

. ராமதாஸ், எச். ஆனந்தன், ஜே. சிறீனிவாசன், . லீலா நந்தபூசணம் ஆகியோரே இந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளனர். இந்த நால்வரும் கடந்த ஆண்டு சென்னை 'வெல் நிர்' ஆடைத் தொழிற்சாலையில் இடம்பெற்ற வேலைநிறுத்தத்தில் வேட்டைக்கு உள்ளான 14 தொழிலாளர்களுள் அடங்குவர். இந்தப் 14 தொழிலாளர்களையும் வேலையில் இருந்து இடைநிறுத்தம் செய்ததன் பின்னர் அவர்களை சேவையில் இருந்து அப்புறப்படுத்தவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யுடன் இணைந்த சீ.பீ.ரீ.யூ. தொழிற்சங்கவாதிகள் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவு வழங்கினர்.

கடந்த ஆண்டு வேலைநிறுத்தம் 60 தொழிலாளர்கள் பக்டரியில் இருந்து வெளியேறி, துண்டு வேலை முறைக்கான சம்பளத்தைக் கூட்டும்படி கோரி ஆரம்பமாகிறது. அது இரண்டு கிழமைகளின் பின்னர் 2000 தொழிலாளர்கள் பங்கு கொண்ட வேலைநிறுத்தமாக வளர்ச்சி கண்டது. ஹொங்கொங்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்தக் கம்பனி 23 தொழிலாளர்களை வேலை இடைநிறுத்தம் செய்தது. இதில் நால்வர் வேலைநிறுத்தத்தில் தாம் எவ்விதமான பாத்திரத்தையும் வகிக்கவில்லை எனக் கூறி மீண்டும் வேலையில் சேர்ந்து கொண்டனர்.

1997 ஜூலை தொடக்கம் இந்த ஆண்டு மே மாதம் வரை 14 தொழிலாளர்கள் தொடர்ந்து இடைநிறுத்தத்துக்கு உள்ளாகி இருந்தனர். 'வெல் நிட்' கம்பனியும் சீ..ரீ.யு.வும் புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் பின்னர் வேலைநிறுத்தத்துக்கு தலைமை தாங்கிய 14 தொழிலாளர்களையும் வேலைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆடைத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை மிகவும் அற்பமான ரூபா. 125ல் அதிகரிக்கும் இந்த உடன்படிக்கை ஒரு காட்டிக் கொடுப்பாகும் என வெல்நிட் தொழிலாளர்கள் கண்டனம் செய்தனர்.

ஆகஸ்ட் 1ம் திகதி 40 தொழிலாளர்கள் தொழிற்சங்கத் தேர்தல் நடைபெறும் தினத்தை அறியும் பொருட்டு சீ..ரீ.யூ. அலுவலகத்துக்கு சென்றனர். சங்க அமைப்பு விதிகளின்படி தேர்தல் கடந்த மே மாதத்தில் நடைபெற்று இருக்க வேண்டும். தொழிற்சங்க மகாநாட்டை நடாத்துவதாக இருந்தால் சகல தொழிலாளர்களும் ரூபா. 125 வீதம் செலுத்த வேண்டும் என்பது தொழிற்சங்க அதிகாரிகளின் பதிலாக விளங்கியது. சீ..ரீ.யு.வின் இணைச் செயலாளர் சிவக்குமார் பின்வருமாறு கூறினார்: “ரூபா. 125 செலுத்தாமல் எவரும் வாய் திறந்தால் உங்கள் சகலவரையும் உதைத்து விரட்டுவோம். சங்கத் தேர்தல் கிடையாது.” சீ.பீ.. (எம்) கட்சியின் தலைவர்களில் ஒருவரான இந்தச் சிவகுமார் அடுத்து சோ... ஆதரவாளர் பக்கம் திரும்பி "இந்தக் கரைச்சல்களுக்கு நீதான் காரணம்" எனக் கூறி முகத்தில் அறைந்ததோடு "இவனை ஓட்டோவில் போட்டு எமது மாவட்டத்துக்கு கொண்டு போ" என சங்க அதிகாரிகளுக்கு வெறிபிடித்த தொனியில் கட்டளையிட்டார். ஆனால் தொழிலாளர்கள் இதனால் ஈடாட்டம் கண்டுவிடவில்லை. அவர்கள் சோ.தொ.. ஆதரவாளருடன் வெளியேறினர்.

இரண்டு நாட்களுக்கு பின்னர் எதிரணி தொழிலாளர்களுக்கும் சிவகுமாருக்கும் இடையே மற்றொரு கலகம் ஏற்பட்டது. சீ..ரீ.யூ. அதிகாரிகள் இப்போது தொழிலாளர்களுக்கு எதிராக கொலை முயற்சி, கொள்ளை குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். ஐந்தாவது எதிரி கே. பக்ராஜ் என்ற தொழிலாளியாவார்.

பொலிசார் இந்தச் சம்பவத்தை பாவித்து வெல்நிட் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை இயக்கத்தை நடாத்த முயன்று வருகின்றனர். ஆகஸ்ட் 9ம் திகதி தாம்பரத்தில் கைது செய்யப்பட்ட சிறீனிவாசன் என்ற தொழிலாளி தாம்பரம் பொலிஸ் நிலையத்தில் மோசமாகத் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் இந்த பொலிஸ் நிலையத்தில் ஒரு பொலிஸ் கோஷ்டி வெல்நிட் கம்பனி தொழிலாளர்களைத் தாக்கியுள்ளது. அவர்கள் அந்தப் பக்டரியில் வேலை செய்பவர்கள் அல்ல என்பதை பொலிசார் தாக்குதலின் பின்னரே அறிந்துள்ளனர். இத்தாக்குதலினால் தொழிலாளர் காயமடைந்துள்ளனர்.

சோ.தொ.. வெல்நிட் பக்டரி தொழிலாளர்களின் சார்பில் தொழிலாளர் வர்க்கத்தின் ஆதரவை வென்றெடுக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. தொழிலாளர்கள் மீதான தாக்குதலை எதிர்க்குமாறும் அவர்களுக்கு எதிரான சகல குற்றச்சாட்டுக்களையும் வாபஸ் பெறுமாறும் நெருக்கி பொலிசுக்கு கடிதம் அனுப்பும்படியும் சோ.தொ.. வேண்டியுள்ளது.

கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி:
Inspector of Police,
Sugumaran,
Tambaram Police Station,
Tambaram, Madras – 3
Tamilnadu
India.