"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Thursday, July 28, 2016

முதலாளித்துவ மக்கள் முன்னணி வேண்டாம்! யூ.என்.பி.யை வெளியேற்ற பொது வேலைநிறுத்தத்துக்கு தயார் செய்!


தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்துக்கு போராடு!

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அரசியல் குழுவின் அறிக்கை


[RCL statement announces that the RCL, Sri Lankan section of ICFI, and its fraternal movement SLL-India were struggling to establish revolutionary proletariat program and party in Sri Lanka-Eelam and Indian sub-continent.]
 
Thozhilalar Pathai Volume 414
November 1991

இலங்கை-தமிழ் ஈழம் பிராந்தியங்களிலும் இந்தியத் துணைக் கண்டப் பிராந்தியத்திலும் பாட்டாளி வர்க்கப் புரட்சிகர வேலைத்திட்டத்தினையும், கட்சியையும் நிர்மானிக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் இந்தியாவில் அதன் சகோதர இயக்கமான சோசலிச தொழிலாளர் கழகமும் மட்டுமே போராடுகின்றன. பாட்டாளி வர்க்கத்துக்குப் புரட்சிகர முன்நோக்கினை அனைத்துலகக் குழுவின் கிளைகள் மட்டுமே வழங்குகின்றனபுரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் சேருமாறும் அதன் பத்திரிகைகளான 'தொழிலாளர் பாதை', 'கம்கறு மாவத்த' பத்திரிகைகளை வாசிக்குமாறும் நாம் தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்கள், இளைஞர்களை வேண்டுகின்றோம். பலம் வாய்ந்த இளைஞர் இயக்கங்களை கட்டி எழுப்புவதன் மூலம் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினை உறுதி செய்ய 'இளம் சோஷலிஸ்டுகள்' இயக்கத்தில் சேருங்கள்.

அனைத்துலக ரீதியில் ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் காலனித்துவத்திற்கும் எதிராக உலகத் தொழிலாள வர்க்கத்தினை அணிதிரட்டும் நடவடிக்கையின் ஒரு பாகமாக 1991 நவம்பர் 16-17ம் திகதிகளில் அனைத்துலக குழு பேர்ளினில் கூட்டும் உலக மகாநாட்டுக்கு ஆதரவளிக்கும்படியும் அதன் வெளியீடுகளை ஆய்வு செய்யும்படியும் நாம் சகல தொழிலாளர்களையும், ஒடுக்கப்படும் மக்களையும் வேண்டுகின்றோம்.

No comments:

Post a Comment