"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Wednesday, June 29, 2016

சென்னையில் தோழர் கீர்த்தி பாலசூரியாவின் நினைவுக் கூட்டம்

தோழர் கீர்த்தி மிகப்பெரும் பாட்டாளி வர்க்க சர்வ தேசிய போராளிகளில் ஒருவர்: தோழர் பழனி உரை

இதழ் 385
1988 ஜூலை 15

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட டிராட்ஸ்கிச இயக்கமான சோசலிசத் தொழிலாளர் கழகம், அதனைக் கட்டுவதற்காக அயராடு போராடிய ஒரு பாட்டாளி வர்க்க சர்வ தேசியவாதியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஒரு தலைவரும், இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலாளருமான தோழர் கீர்த்தி பாலசூரியாவின் புரட்சிகர வாழ்க்கையையும் வேலையையும் கௌரவிக்கும் முகமாக சென்னையில் மார்ச் 13, 1988 இல் பெரம்பூர் பொம்மைக் கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் தொழிலாளர்களும், இளைஞர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு தோழர் பழனி தலைமை தாங்கினார். கூட்டத்தின் ஆரம்ப்த்தில் தோழர் கீர்த்திக்கு இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் தலைவர் பழனியின் உரையை தொடர்ந்து அருண்குமாரும் இறுதியாக சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினரான லாரன்சும் உரையாற்றினார்கள்.

தோழர் பழனி, கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் சார்பில் வரவேற்றார். அதைத் தொடர்ந்து அவர் தலைமை உரை ஆற்றினார்:

தோழர் கீர்த்தி பாலசூரியா, அவருடைய பள்ளிப்பருவத்த்தில், 16 வயதில் புரட்சிகர அரசியலில் ஈடுபட்டார். அன்று முதல், அவரது கடைசி மூச்சு உள்ள வரை, சிறிதும் விட்டுக் கொடுப்பின்றி மார்க்ஸிசத்திற்காக போராடினார். 1964ல் இலங்கையில் சமசமாஜக் கட்சியின் மாபெரும் காட்டிக் கொடுப்புக்கு எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் தலையீட்டினால் உருவாக்கப்பட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலாளராக 19 வயதில் பொறுப்பேற்றார். தோழர் கீர்த்தியின் போராட்டம் இலங்கைத் தீவுக்குள் மட்டுப்படுத்தப்படவில்லை. அவர் உலகத் தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்ப்பதில் தீர்க்கமான பங்கு வகித்தார். பாப்லோவாத திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் முழு படிப்பினையையும் உறிஞ்சி எடுத்தார்.

1971ல் பங்களாதேஷில் இந்திய ராணுவத் தலையீட்டை ஆதரித்து பண்டா எடுத்த நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்தார். இந்திய முதலாளித்துவத்தின் ராணுவம் அங்கு சென்றது. அங்குள்ள தொழிலாள, ஒடுக்கப்படும் மக்களின் சார்பில் அல்ல, ஆனால் அதற்கு எதிராக அங்கு மீண்டும் முதலாளித்துவ ஆட்சி முறையை தக்க வைப்பதற்காகத் தான் என எச்சரித்தார். அந்த எச்சரிக்கை எவ்வளவு ஆழமானதும், சரியானதும் என்று வரலாறு இன்று நிரூபித்துள்ளது. இன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்திய ராணுவம், தமிழ் ஈழத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை குரூரமாக முறியடிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளது. இதனை பண்டாவும், இங்குள்ள ஸ்டாலினிச கம்யூனிசக் கட்சித் தலைமைகளும் ஆதரிக்கின்றனர்.

இந்நிலையில் ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை பேணவும் இந்திய ராணுவத்தை உடனடியாக வாபஸ் வாங்கவும், அதன் தோல்விக்காகவும் போராடும் ஒரே ஒரு அரசியல் இயக்கம் சோசலிசத் தொழிலாளர் கழகமாகும். இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தமிழ் ஈழ, சிறிலங்க ஐக்கிய சோசலிச குடியரசுகள் என்ற புரட்சிகர முன்னோக்கின் அடிப்படையில் போராடுகிறது. தோழர் கீர்த்தி, குட்டி முதலாளித்துவ தலைமைகளின் திவாலான வேலைத்திட்டத்திற்கு எதிராக புரட்சிகர பாட்டாளி வர்க்க தலைமையின் கீழ் சோசலிசத்திற்கான போராட்டத்தையும், ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தையும் முன்னெடுக்கப் போராடினார்.

தோழர் கீர்த்தி பலவிதமான கஷ்டங்களின் மத்தியில், இந்தியாவில் ஒரு புரட்சிகர டிராட்ஸ்கிசக் கட்சியை கட்டுவதற்காக தொடர்ச்சியாகப் போராடினார். குறிப்பாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவிலிருந்து வெளியேற்றப்பட்ட, அதன் முன்னைய பிரிட்டிஷ் பகுதியின் தலைவர்களான ஹீலி, பண்டா, சுலோட்டரின் பெரும் துரோகங்களுக்கு எதிராகப் போராடினார். W.R.P. பிரிட்டிஷ் தேசியவாதத்திற்கு அடிபணிந்து, பாட்டாளி வர்க்கப் புரட்சிகர பங்கை நிராகரித்து, குட்டி முதலாளித்துவ தலைமைகளை மார்க்சிஸ்டுகளாக சித்தரித்த திரிபுவாதத்திற்கு எதிராக ஒர்க்கர்ஸ் லீக்கும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் 1985-1987 நடத்திய போராட்டத்தில் தோழர் கீர்த்தி அந்த W.R.P. ஓடுகாலிகளை தோற்கடிக்க ஆக்ரோஷத்துடன் போராடினார்.

பின்தங்கிய நாடுகளில் தொழிலாள வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலமே, அங்கு பூர்த்தி செய்யப்படாத ஜனநாயகப் புரட்சியின் கடமைகள் பூர்த்தியாக்கப்படும் என்ற டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தையும், மேலும் நொறுங்கி வீழ்ந்து கொண்டிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடியும், அதனால் ஏகாதிபத்தியங்களுக்கு இடையே வர்த்தக யுத்தமும், பின் தங்கிய நாடுகளின் திவாலான தன்மையும், சுரண்டலும், சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறையும் அதிகரிக்கும் என்றும், இவை அனைத்துக்கும் இடையேயான உட்தொடர்புகளையும் ஆராய்ந்த கீர்த்தி எந்த ஒரு நாட்டிலும் அது தேசிய விடுதலைப் போராட்டம் என்றாலும் சரி, சோசலிசப் புரட்சிக்கான போராட்டமானாலும் சரி அது பாட்டாளி வர்க்க தலைமையின் கீழேயே பூர்த்தி செய்யப்படுமென்று தீர்க்கமாக எடுத்துரைத்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய தோழர் அருண்குமார், நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பேண தோழர் கீர்த்தி முன் எடுத்த போராட்டத்தைப் பற்றியும் தொழிலாளர் புரட்சி ஓடுகாலி சுலோட்டரின் பொய்களையும், திரித்துக் கூறுவதையும் தாக்கினார்.

தோழர் கீர்த்தியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தை புரிந்து கொள்ள, அவர் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த விஞ்ஞான சோசலிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை அறிந்து கொள்வது அவசியமாகும். ஏனெனில் மார்க்ஸ் காலம் முதல் இன்று வரைக்கும், விஞ்ஞான சோசலிசம் பல விதமான திரிபுவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திரிபுவாதங்கள் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல், தத்துவார்த்த ஆதிக்கத்தின் கீழ் உட்படுத்துவதையே அதன் சாராம்சமாக கொண்டதாகும். தொழிலாள வர்க்கம், அதன் உயர்ந்த வர்க்க நனவுடைய நடவடிக்கைகளினால் மட்டுமே தன்னை சுரண்டல் அமைப்பிலிருந்து விடுவித்து, தன்னை உற்பத்தி சாதனங்களின் எஜமானனாக்கி கொள்ள முடியும், தொழிலாள வர்க்கம், அதன் வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்ற கிளர்ந்து எழுவது, மார்க்சிஸ் கோட்பாடுகளை சிறிதளவும் விட்டுக் கொடுக்காமல் போராடும் ஒரு புரட்சிக் கட்சியின் வழி காட்டல் இன்றி சாத்தியமற்றதாகும். இதற்கு அவசியமானது தொழிலாள வர்க்கம் மத்தியில் உள்ள சந்தர்ப்பவாத துரோகத் தலைமைகளுக்கும் மற்றும் குட்டி முதலாளித்துவ மிதவாத சாகஸவாத அரசியலுக்கும் எதிரான ஒரு நீண்ட, தொடர்ச்சியான ஈவிரக்கமற்ற அரசியல் தத்துவார்த்த, போராட்டமாகும்.

தோழர் கீர்த்தியின் போராட்டம் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சோசலிசப் புரட்சிக்கு தலைமை தாங்க வல்லமையுடைய ஒரே ஒரு தொடர்ச்சியான புரட்சிகர வர்க்கமான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர வர்க்க நனவை உயர்த்துவதற்காக, பலவிதமான அழுத்தங்களுக்கு எதிராக விட்டுக்கொடுக்காமல் போராடி வந்ததாகும். அத்துடன் அவர் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் ஒரு சிறந்த போராளியாகும் இருந்தார்.

தோழர் கீர்த்தியின் அரசியல் பரிணாமம், சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியை கட்டுவதற்கு அவர் ஆற்றிய பங்கும், எமது சர்வதேச டிரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் ஏகாதிபத்திய அழுத்தங்களுக்கு அடிபணிந்த பப்லோவாத திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

பப்லோவாதம், எதிர்புரட்சிகர ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் அரசியல், சமூக வளர்ச்சி பற்றிய டிராட்ஸ்கியின் ஆழமான ஆய்வை நிராகரித்தது மட்டுமல்லாமல், சோசலிசப் புரட்சியானது தொழிலாள வர்க்க மத்தியில் நீண்ட, தொடர்ச்சியான மார்க்சியத்திற்கான போராட்டம் இன்றி சாத்தியமாகும் என்றது, அதாவது முதலாளித்துவத்தின் பிடியில் இருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல், தத்துவார்த்த சரீரரீதியான விடுதலை, குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் கெரில்லாவாதம் மூலம் அடையக்கூடியது என பப்லோவாதிகள் கூறினர்.

இந்த பப்லோவாதிகள் தான் இலங்கையில் 1964இல் இலங்கையில் லங்கா சம சமாஜக் கட்சி (L.S.S.P) சிறிமாவோ பண்டார நாயக்காவின் (S.L.F.P.) கூட்டரசாங்கத்தில் சேர்வதை ஆதரித்தனர். இந்த மாபெரும் பப்லோவாத காட்டிக்கொடுப்புக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு தொடுத்த போராட்டத்தின் விளைவாக, 1966 இல் அமெரிக்காவில் ஓர்க்கர்ஸ்லீக்கும், 1968ல் இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், அதைத் தொடர்ந்து சர்வதேச ரீதியாக மேலும் பல நாடுகளிலும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பகுதிகள் கட்டப்பட்டன.

இங்கு நாம் நன்றாக கவனிக்க வேண்டியது—1964ல் சுமார் 70 லட்சம் உறுப்பினர்களை அதன் பரந்த இயக்கங்களில் கொண்டிருந்த லங்கா சமசமாஜக் கட்சி உலகத்தில் மிகப் பெரும் டிராட்ஸ்கிச கட்சி என கருதப்பட்ட, (உண்மையில் அதுவொரு இடைநிலைவாத கட்சியாக அப்போது இருந்தது) அந்த பெரும் இயக்கத்திலிருந்து, தனிமைப்படுத்தப்பட்டு, விடுவோம் என்ற அச்சமின்றி ஒரு சிறு குழுவினர் அதன் காட்டிக் கொடுப்பை கண்டித்து அதிலிருந்து வெளியேறி நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் உறவு கொண்டு புரட்சிக்கர டிராட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் என்ற அமைப்பின் மூலமாக முன்னெடுத்தனர்.

ஆம், அந்த சிறிய எண்ணிக்கை கொண்ட உண்மையான புரட்சிகர டிராட்ஸ்கிஸ்டுகள், அந்த பெரும் எண்ணிக்கையை கொண்டிருந்த இயக்கத்தின் துரோகத் தலைமையிலிருந்து தனிமைப்பட்டிருக்க விரும்பினர். அதே போல் நாம் பல்வேறு விதமான துரோகத் தலைமைகளிலிருந்து தனிமைப்பட்டு இருக்க விரும்புகிறோம். ஆனால் இதன் மூலம் தான் மார்க்ஸிய கோட்பாடுகளுக்கான தொழிலாள வர்க்க மத்தியில் பொறுமையாக இடைவிடாது, ஸ்டாலிஸ்டுகளுக்கும்: சந்தர்ப்பவாதிகளுக்கும் எதிராக நடத்தும் அரசியல், தத்துவார்த்த போராட்டத்தின் மூலமாக இறுதியில் தொழிலாள வர்க்கத்தின் பெரும்பான்மையினரை நம் பக்கம் வென்றெடுக்க முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எமக்கு உண்டு. எனவே தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று கடமைகளை நிறைவேற்ற, அதனை தயார் படுத்தும் எமது இறுதி குறிக்கோளை அடைவதற்காக நாம் தற்காலிகமாக "தனிமைப்பட்டிருக்க" அஞ்சவில்லை.

இந்த தற்காலிக "தனிமைப்படுத்தலை" கண்டு அஞ்சிய, மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று புரட்சிப் பங்கை நிராகரித்த பொறுமை இழந்த குட்டி முதலாளித்துவ பகுதியினர் மிதவாத, சாகஸவாத அரசியல் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு ஆயுதப் போராட்டமே, அதி உயர்ந்த முன்னோக்காக மாறுகிறது. இவ்வாறான பகுதியினரை உலகின் பல பாகங்களில் நாம் பார்க்கிறோம். ஈழத்தில், தமிழ் முதலாளித்துவ தேசிய வாதிகள், இந்தியாவில் நக்சல் பாரிகள், 1949ல் நான்கு வர்க்க கூட்டுக் கொள்கையுடன் ஆட்சிக்கு வந்த மாவோசேதுங்குகள், கியூபாவில் காஸ்ட்ரோகளும் சேகுவாராக்களும் மேலும் பலரும் இந்த வகையறாக்களே.

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஓடுகாலிகளான ஹீலி, பண்டா, சுலோட்டர்கள் ஏகாதிபத்திய அழுத்தங்களுக்கு அடிபடிந்து கேவலமான முறையில் டிராட்ஸ்கிச கோட்பாடுகளை காட்டிக்கொடுத்ததற்கு எதிராக ஒர்க்கர்ஸ் லீக் தலைமையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பெரும்பான்மையினர் தொடுத்த போராட்டத்தில் அந்த ஓடுகாலிகளை முறியடிப்பதற்கான போராட்டத்தில் தோழர் கீர்த்தி தீர்க்கமான பங்கு வகித்தார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு திவாலானது என பிரகடனம் செய்த பண்டா இன்று எங்கே? மிக இழிவான முறையில் எதிர் புரட்சி ஸ்டாலினிசத்தை அரவணைத்துள்ளார். ஹீலி எங்கே? ஸ்டாலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான அரசியல் புரட்சியை நிராகரித்து, அதனுடன் குலாவுகின்றனார்.

சுலோட்டர், ஸ்டாலினிசத்தின் மக்கள் முன்னணி கொள்கையை ஆதரிக்கின்றார். லண்டனில், தோழர் கீர்த்தி … (தொடர்ச்சி கிடைக்கவில்லை)

No comments:

Post a Comment