[RCL exile group expresses its hope that the struggle initiated
by the RCL along with Indian sub-continent
Indian Socialist Labour League
comrades will renew and enrich the historical traditions.]
Thozhilalar Paathai Volume 40 (File no 041)
July,
1991
ஏகாதிபத்திய யுத்தத்துக்கும்,
காலனித்துவத்துக்கும்
எதிராக நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழு 1991
நவம்பர்
16ம்
17ம்
திகதிகளில் பேர்ளினில் நடாத்த
அழைப்பு விடுத்துள்ள உலகத்
தொழிலாளர் மகாநாட்டினை
வெற்றிகரமாக்க DM
4000 நிதி
திரட்டுவதென புரட்சிக்
கம்யூனிஸ்ட் கழகத்தின்
வெளிநாட்டுக் கிளை தீர்மானித்துள்ளது.
நான்காம்
அகிலத்தின் இலங்கைக் கிளையான
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்,
இம் மகாநாட்டினை
கட்டியெழுப்பும் அனைத்துலகப்
பொறுப்புக்கும்,
தோள் கொடுக்கும்
பொருட்டு இலங்கை-தமிழ்
ஈழம் தொழிலாள,
ஒடுக்கப்படும்
மக்கள் கிளர்ந்து எழுவார்கள்
என்பதில் உறுதியான நம்பிக்கை
கொண்டுள்ளது.
இதனை
அம்பலாங்கொடை கூட்டுறவு
தொழிலாளர் மகாநாடு (அறிக்கை
18ம்
பக்கம்)
நிரூபித்துள்ளது.
வரலாற்று
ரீதியில் நோக்கின் 1939-1944
இரண்டாம்
உலக யுத்தத்தின் போது நான்காம்
அகிலத்தின் இந்தியக் கிளையான
போல்ஷ்விக் லெனிஸ்ட் கட்சி
ஏகாதிபத்திய யுத்தத்துக்கு
ஒரு ஆளோ,
அல்லது ஒரு
சதமோ, அல்லது
ஒரு கருவியோ வழங்காதே என்ற
நிலைபாட்டினைக் கடைப்பிடித்தது.
இந்நிலைப்பாட்டுக்கு
இலங்கைத் தொழிலாள,
ஒடுக்கப்படும்
மக்களிடமிருந்து பேராதரவு
கிடைத்தது.
இப்போராட்டம்
தீவின் எல்லையையும் தாண்டிச்
செல்லுமோ என பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியவாதிகள் கிலி
கொண்டிருந்ததை அவர்களின்
அன்றைய தஸ்தாவேசுக்கள்
ருசுப்படுத்தி உள்ளன.
இந்தியத்
துணைக்கண்டத்தில் இந்திய
சோசலிசத் தொழிலாளர் கழகத்தின்
தோழர்களுடன் இணைந்து பு.க.க.
ஆரம்பித்துள்ள
இப்போராட்டம் இந்த வரலாற்று
பாரம்பரியங்களை மீண்டும்
புதுப்பிக்கும்,
மெருகூட்டும்
என்பதில் எமக்கு உறுதியான
நம்பிக்கை உண்டு.
உங்களிடன்
நிதி திரட்ட வரும் புரட்சி
கம்யூனிஸ்ட் கழக அங்கத்தவர்களுக்கு
நிதி வழங்குவதுடன்,
தபால் மூலமாக
அனுப்புவதாயின் பின்வரும்
கணக்கு இலக்கத்திற்கு
அனுப்புங்கள்.
No comments:
Post a Comment