"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Wednesday, August 24, 2016

இந்தியாவில் ரொக்சியிஸ்டுக்களின் மீதான துன்புறுத்தல்களை கண்டனம் செய்


Thozhilalar Paathai Volume 405 (File 039)
April 1991

சர்வதேசரீதியாக தொழிலாளர் இயக்கம் கட்டாயமாகவும், உடனடியாகவும் இந்திய ரொக்சியிச கட்சியான சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் மீது தற்போது பொலிசினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட துன்புறுத்தல் நடவடிக்கைகளை கண்டனம் செய்ய வேண்டும்.

 
இந்தியாவில் அலைமோதிக் கொண்டிருக்கும் அரசியல் கொந்தளிப்புக்களின் மத்தியில் அரச படைகள் நான்காவது அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் மீது இலக்கு வைத்திருக்கின்றன.

சமூக நெருக்கடிகள் மோசமாகிக் கொண்டிருக்கும் வேளையில் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் அங்கத்தவர்களை வாயடைக்கப் பண்ணும் நோக்கத்தில் அவர்கள் மீது பொலீசாரினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ந்த பயமுறுத்தல் முயற்சிகள் முழுமையாக தோல்வியடைந்துள்ளன. ... மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாமல் வளர்ச்சியடையும் பாரிய சமூக நெருக்கடியை தவிர்க்க முடியாத தங்களது கையாலாகாத்தனத்தை மூடிமறைப்பதற்காக முதலாளித்துவ அரசியல்வாதிகள் இனவாதத்தையும், சாதி வெறியையும் மேலும் மேலும் தூண்டிவிடுகையில், சோசலிசத் தொழிலாளர் கழகம் மட்டும் ... தொழிலாளர் இயக்கத்திற்குள், இந்திய தொழிலாள வர்க்கத்தை ஸ்ரீலங்காவினதும், தமிழீழத்தினதும் தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்துவதற்காக போராடும் ஒரேயொரு சக்தியாகும்.
தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலைமைகளில் பொலீசார் இந்திய ரொக்சியிஸ்ட்டுக்களின் மேல் கவனம் செலுத்துவது மிகவும் மோசமான பயங்கரங்களுக்கான அறிகுறியாகும்.

... வட-கிழக்கு மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் 1000 ... தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு மேல் பொலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததினால் 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுடன் 60 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தொழிலாளர்கள் அரசிற்கு சொந்தமான டாலா (Dalla) சீமெந்து தொழிற்சாலை தல்மியா (Dalmia) தொழில் நிறுவனக் குழுவிற்கு கையளிக்கப்படுவதை தடை செய்வதற்காக தொழிற்சாலை வாசலில் மறியல் செய்தனர். புது டெல்லிக்கு 340 மைல்கள் கிழக்காக புனித இந்து நகரமான வாரணாசிக்கு அருகாமையில் சுனம்பாத்ரா (Sunebhadra) நகரத்தில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை உத்தரப் பிரதேச சீமெந்துக் கூட்டு ஸ்தாபனத்திற்கு சொந்தமானதாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசாங்கம் இந்த தொழிற்சாலையை அதனது புதிய தனியார் சொந்தக்காரர்களுக்கு கையளிக்கவிருந்தது.

பொலீசாரின் இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக அருகில் உள்ள ஒப்ரா (Obra) அனல் மின்சார நிலையத்தைச் சேர்ந்த 7000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியதனால் இப்பிரதேசம் பாரிய மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு உட்பட்டது.

இத்தொழிற்சாலையை தனியார் துறைக்கு மாற்றுவதற்கான தீர்மானம் தேசிய மாநில அரசுகளின் தனியார் மயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். தனியார் மயப்படுத்தலின் போது வேலைக்கான உத்தரவாதம் இல்லா தொழிலாக்கப்படுவதுடன் வேலை நிலைமைகள் பாரியளவில் தாழ்த்தப்படும். இந்த வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்தின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது.

Dalla தொழிற்சாலையைப் பொறுத்தளவில் வேலைநிறுத்தங்களும் உற்பத்தி குறைவும் குறைந்த லாபத்தை ஏற்படுத்தியது தான் தனியார்மயப்படுத்தலுக்கு காரணமென அரசு நியாயப்படுத்தியது.

அசோசியேட்டன் பிரஸ் செய்தி நிறுவனம் இந்தியாவின் சீமெந்து தொழிற்சாலை தொழிலாளர்களின் மாதாந்த சம்பளம் 75 இலிருந்து 100 டொலர்கள் வரையென அறிவித்துள்ளது.

சோசலிசத் தொழிலாளர் கழகம் இரண்டு வேட்பாளர்களை இந்த தேர்தலில் நிறுத்தி உள்ளது. தென் மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் புக்கிங்காம் கர்நாட்டிக் புடவை ஆலையின் தொழிலாளியான தோழர் மோசஸ் ... வேட்பாளராக போட்டியிடுகின்றார். ஸ்டாண்டர்ட் மோட்டார் தொழிற்சங்கத்தின் முன்னை நாள் நிர்வாகக் குழு அங்கத்தவரான தோழர் கைலாசம் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் ... வேட்பாளராவார்.

மே 21 இல் ராஜீவ்காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பிருந்தே, இந்திய ரொக்சியிஸ்டுக்கள் அரசின் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்டனர். ஏப்ரல் 23 இல் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் பத்திரிகையான "தொழிலாளர் பாதையின் ஆசிரியரான தோழர் S. ராம் சென்னையில் "சிறீலங்காவில் இனவாத யுத்தத்தினதும், கிராமத்துப் படுகொலைகளினதும் பின்னணியும் தீர்வும்" என்ற தலைப்பில் ஒரு பகிரங்க சொற்பொழிவாற்றிய இரண்டு நாட்களுக்கிடையில் பொலீஸ் ஒருவித அதிகாரமுமற்ற வகையில் பாரியளவில் புலனாய்வுகளையும், விசாரணைகளையும் மேற்கொண்டது. ஏப்ரல் 25 ம் திகதி நாலு மணிக்கு பொலீஸ் அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த குருசாரி எனத் தன்னை அடையாளம் காட்டிய பொலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சென்னையில் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தோழர் ராமை சந்திக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார். இதனை அடுத்த நாட்களில் இதே பொலீஸ் உத்தியோகஸ்தர் தோழர் மோசஸ் இன் உறவினர்கள் வீட்டிற்கு சென்று அவரது கடந்த காலம், தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை தொடர்பாக விசாரணை நடத்தினார். பின்னர் மே மாதம் 12 ம் திகதி குருசாமி தோழர் மோசஸ் இன் வீட்டிற்குச் சென்றதுடன் அதேதினத்தில் பெரம்பூர் பராக்டுகள் தெருவில் B&C ஆலை தொழிலாளர்களின் குடியிருப்பு விடுதிகளின் வாசலில் தோழர் மோசஸ் இனை நேருக்கு நேர் சந்தித்தார். குருசாமி அவரிடம் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் ஏனைய அங்கத்தவர்களைப் பற்றியும், கட்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தமொன்றில் தலையிட இருக்கின்றதா என்பது பற்றியும் விசாரணை செய்தார்.

மே 16ம் திகதி காலையில் அண்ணாநகர் மேற்கு விசேட பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலீஸ் சேவகர் சிவலிங்கம் (PC 2479) தோழர் கைலாசத்தின் வீட்டிற்கு விஜயம் செய்தார். தோழர் கைலாசத்தை வீட்டில் காணாததால் இந்த உத்தியோகஸ்தர் அன்று மாலை திரும்பவும் சென்று கைலாசம் கண்டிப்பாக தன்னை திருமங்கலம் பொலீஸ் நிலையத்தில் சந்திக்க வேண்டுமென ஒரு தகவலையும் கொடுத்திருந்தார்.

மே 24 இல் இந்த பொலீஸ் துன்புறுத்தல்களை ஒரு முடிவிற்கு கொண்டு வரும்படி சோசலிச தொழிலாளர் கழகம் கோரிக்கை விடுத்தது. சென்னைப் பொலீசின் பொது நிர்வாகிக்கு தோழர் மோசஸ் பின்வருமாறு எழுதினார்: “விசாரணை செய்வதும், குறுக்கு விசாரணைக்கு உட்படுத்துவதுமான மேலே கூறப்பட்ட முயற்சிகள் சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான எங்களது ஸ்தாபனத்தின் அங்கத்தவர்களதும், ஸ்தாபனத்தினதும் அரசியல் உரிமைகள் மீதும் சிவில் உரிமைகள் மீதும் சட்ட விரோதமான அத்துமீறல்களை உருவாக்குகின்றது. இந்த நடவடிக்கைகள் சோசலிசத் தொழிலாளர் கழகம் தனது கொள்கைகளையும், வேலைத்திட்டங்களையும் பிரச்சாரம் செய்யும் சட்டரீதியிலான உரிமையுள்ள நடவடிக்கைகளுக்கும், அத்துடன் வட சென்னை லோக்சபா தொகுதிக்கும் வில்லிவாக்கம் சட்டசபைத் தொகுதிக்குமான அதனது வேட்பாளர்களுக்கான தேர்தல் பிரச்சார வேலைகளை மேற்கொள்ளுவதற்கும் ஒரு இடையூறாகும்.

தொழிலாளர் இயக்கத்தின் புரட்சிகர குரலை அடக்குவதற்கான இவர்களது முயற்சிகளில் சென்னை தொழிற்சங்கத்தின் (MTU) ஸ்ராலினிச தொழிற்சங்க அதிகாரத்துடன் பொலீஸ் பகிரங்கமாக இணைந்து செயற்படுகின்றது. கடந்த வருடம் டிசம்பரல் 13 இல் சென்னை தொழிற்சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட B&C மில் தொழிலாளர்களின் கூட்டமொன்றின் போது தோழர் ராம் தொழிற்சாலை வாசலில் வைத்து 30 குண்டர்களினால் தாக்கப்பட்டார்.

இந்த குண்டர்களை ஒழுங்கு செய்வரான வரதராஜன் MLUவின் தலைவரும், ஸ்டாலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் அங்கத்தவராவார். 1989 இல் இவருக்கெதிராக தோழர் ராம் தொழிற்சங்கத் தலைவர் பதவிக்காக போட்டியிட்டார். ராம் மீது தாக்கியவர்களுக்கு தலைமை தாங்கிய குமரேசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) அங்கத்தவரும், MLUவின் நிர்வாகக் குழு அங்கத்தவருமாவார்.

இத்தாக்குதலின்போது அருகாமையிலுள்ள புளியந்தோப்பு பொலீஸ் நிலையத்தின் பொலீஸ்காரர்கள் ஒருவித தலையீடும் செய்யாது முடமாகி நின்றதுடன் தாக்குதல் முடிந்தவுடன் தோழர் ராமை கைது செய்து அவருக்கெதிராக குற்றச்சாட்டுக்களையும் சோடித்தனர்.

சோசலிசத் தொழிலாளர் கழகம் அவர்களிற்கெதிரான தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் துன்புறுத்தல் நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டு வரும்படியும், தோழர் ராமிற்கு எதிரான பொய்க் குற்றச்சாட்டுக்களை வாபஸ் வாங்கும்படியும் நிர்பந்தம் செய்கின்றது.

சோசலிசத் தொழிலாளர் கழகத்திற்கு மேலான தாக்குதல்கள் தொழிலாள வர்க்கம் முழுமைக்குமான தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்.

கண்டனக் கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-

THE DIRECTOR GENERAL OF POLICE
TAMIL NADU
STATE POLICE HEADQUARTERS
DR. RADAKRISHNAN SALAI,
MADRAS 600 004, INDIA.

பிரதிகள் அனுப்ப வேண்டிய முகவரி:-

Tholilalar Pathai,
POSTFACH 1609
71020 BIETIGHEIM.

No comments:

Post a Comment