"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Wednesday, June 15, 2016

இந்திய "சுதந்திரத்தின்" 50 ஆண்டுகள்: உழைக்கும் மக்களின் கொதிக்கும் பிரச்சனைகள் பிரமாண்டமான சமூகக் கிளர்ச்சிகளுக்கு சமிக்கை செய்கின்றது

இதழ் 484 (file 483) 1997 அக்டோபர்


இந்திய சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் செயலாளர் அருண் குமார்

இந்திய முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இந்தியாவின் "முன்னேற்றத்தை" முன்னிட்டு மீண்டும் இந்தியாவுக்கு வருகை தருமாறு ஏகாதிபத்தியவாதிகளை வெட்கமின்றி கெஞ்சும் அதேவேளையில் "இந்திய சுதந்திரத்தின்" 50 ஆண்டு நிறைவுகளையும் கொண்டாடுகின்றது! இந்திய சுதந்திரத்தின் 50 ஆண்டு விழா கேடுகெட்ட மோசடிகளைக் குறித்து நிற்கின்றது. பெரும் ஆடம்பரங்களுடன் கூடிய இந்த விழாவின் பேரில் கோடிக் கணக்கான ரூபாக்களைக் கொட்டுவது, இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு காந்தியின் "அஹிம்சை" போராட்டத்தின் மூலம் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அவர்களுக்கு 'சுதந்திரம்" கிடைத்ததாக இந்தியாவின் பிரமாண்டமான பெரும்பான்மையினராக உழைகும் மக்களுக்கு "நினைவூட்டு" வதற்கேயாகும். ஏனெனில் எவரும் அதைப்பற்றி சட்டை செய்யாததால் ஆகும்! பொன்விழா கொண்டாட்டங்களில் இந்திய பொதுமக்களின் பெரும்பான்மையினர் இடையே நிலவுவது குதூகலம் அல்ல: துயரமும் வெறுப்பும் ஆத்திரமும். இதனை அரச உயர் பீடத்தினர் புரிந்து கொண்டுள்ளனர். அதன் பெறுபேறாக மத்திய, மாநில அரசாங்க அதிகாரிகள் பொதுமக்கள் இந்திய சுதந்திரம் பற்றிய தமது சுயாதீன சுதந்திர உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் சிரித்த முகத்துடன் அரசாங்க நிறுவனங்களினால் ஒழுங்கு செய்யப்படும் விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்றுள்ளார்கள். சுதந்திரம் பற்றி மேலும் என்ன பேச்சு?

சுதந்திர இந்தியாவின் சமூகத் துருவப்படுத்தல் எந்தளவுக்கு விரிந்து போயுள்ளது எனச் சொன்னால் ஒருவர் என்றும் பின்வரும் கேள்வியை எழுப்பும் வண்ணம் தள்ளப்படுகின்றார்: 1947ல் சுதந்திரம் பெற்று கடந்த 50 ஆண்டுகள் பூராவும் அதை அனுபவித்துள்ளது இந்தியாவின் எந்த பகுதியினர்? நன்கு தெளிவாகச் சொன்னால் அது இந்திய சமுதாயத்தின் எந்த தட்டினர்? இக்கேள்விக்குப் பதில் அளிக்கையில் எந்தவிதமான ஈடாட்டமும் இருக்க முடியாது. கடந்த 50 ஆண்டுகள் பூராவும் தமது செல்வத்தை நூறு மடங்குகளுக்கும் மேலாக அதிகரித்த விதத்தில் மலையெனக் குவித்துக் கொண்டுள்ளவர்கள். தேசிய முதலாளி வர்க்கத்தின் உயர் தட்டினர். டாட்டாக்களும் பிர்லாக்களும் இந்திய முதலாளி வர்க்கம் (இந்து, முஸ்லீம் என இரு தரப்பினரும்) இந்தியப் பொது மக்களின் புரட்சிகரக் கிளர்ச்சிகளைப் பிளவுபடுத்தி அடக்கி ஒடுக்குகையில் ஒத்துழைக்கும் பொருட்டு பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் அவர்களிடம் அரசியல் அதிகாரத்தை கையளித்தனர். இந்தியத் துணைக் கண்டத்தில் 1947ல் — யுத்தத்துக்கு பின்னைய ஏகாதிபத்திய சமரசம் — இந்திய முதலாளி வர்க்கம் இந்திய உழைக்கும் மக்களின் திட்டவட்டமான ஒடுக்குமுறையாளனாகவும் சுரண்டலாளனாகவும் மாறியது. ஏகாதிபத்தியவாதிகள் கூறியது என்ன? எமது தூதுப் பணி காலனித்துவ நாடுகளில் பொதுமக்களை நாகரீகமயமாக்குவதே! இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு 1947 ஆகஸ்ட் 14ம் திகதி நிகழ்த்திய உரையில் பின்வருமாறு குறிப்பிட்டா: “இந்தியாவுக்கு சேவை செய்வது என்பதன் அர்த்தம், வறுமை, படிப்பறிவின்மை, சமத்துவமின்மை சந்தர்ப்பங்களை போக்குவதாகும்.”

மேற்கண்ட கூற்று நேருவின் ஒரு வாக்குறுதியை பிரதிபலிக்கவில்லை: ரூஷ்யத் தொழிலாளர் வர்க்கப் புரட்சியின் மூலம் பிரமாண்டமான்ன சுவைகண்டு, தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட இந்திய உழைக்ககும் மக்களின் எதிர்பார்ப்புகளை தடுத்து வைக்கும் ஒரு சாகஜமாகும்.

நிஜ நிலைமை

வறுமை, கல்வியறிவின்மை, சமத்துவமின்மை நிலைமையைப் போக்குதல்" பற்றிய செவிப்பறையை கலங்க வைக்கும் பேச்சுக்களின் பின்னர் 50 ஆண்டுகள் கடந்து சென்றுவிட்டது. இந்தியாவின் நிஜ சமூக சித்திரம், “வறுமையும் படிப்பறிவின்மையும்" அகன்று போய்விடாது. முடிவுற்ற தோற்றப்பாடாக வளர்ச்சி கண்டுள்ளதற்குச் சாட்சி பகர்கின்றது. கீழ்க்காணும் புள்ளிவிபரங்கள் அதற்கு சாட்சி பகர்கின்றது: 1947ல் இந்தியாவின் முழுச் சனத்தொகை 320 மில்லியன். ஆனால் 50 ஆண்டுகளின் பின்னர் 320 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். 1993-94 ஆண்டில் வறுமை மட்டம் நூற்றுக்கு 37.27 ஆக உள்ளளதாக திட்டக் கமிஷன் (Planning Commission) ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த வறுமை மட்டம் கணக்கிடப்படுவது அடிப்படை உணவை மட்டும் அதாவது, இதை உண்ணும் போது குறைந்த பட்சக் கலோரி கிடைக்கும் விலைக்கு வாங்குவதற்கு அவசியமான வருமானத்தைக் கணக்கில் கொண்டதாகும். ஆதலால் வறுமை மட்டமானது படுமோசமான வறுமைக் கோட்டின் மட்டத்தில் இருந்து நாகரீகமான வாழ்க்கையை நடாத்துவதற்கு வேண்டிய ஏனைய பண்டங்கள், சேவைகள் சகலதையும் ஒதுக்கி, உயிர் வாழ்க்கைக்கு அவசியமான உணவுக்கு வேண்டிய செலவை மட்டும் கருத்தில் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது.

சுபீட்சமான வாழ்க்கையை நடாத்துவதற்கு அவசியமான செல்வத்தை சமூகத்தின் உயர்மட்டத்தை சேர்ந்த 10 சதவீதத்தினர் மட்டுமே கொடுள்ளனர். இந்த உயர் மட்ட 10 சதவீதத்தினர் நாட்டின் மொத்த செல்வத்தில் நூற்றுக்கு 90 வீதத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளனர். இப்போது உலகின் உயர் மட்டமான 130 மில்லியன்களை எட்டியுள்ள இந்தியாவின் சிறுவர் உழைப்பு வளர்ச்சியின் அதிர்ச்சி தரும் அபிவிருத்தியும் அகில இந்தியாவிலும் உள்ள மில்லியன் கணக்கிலான அடிமை உழைப்பாளிகள் பற்றிய அம்பலத்துக்கு வந்துள்ள தரவுகளும் "சுதந்திர இந்தியா"வின் உழைக்கும் மக்களின் பெரும்பான்மையினரின் சமூக தரித்திர நிலைமையை அம்பலமாக்குகின்றது.

இந்தியா புத்தாயிரம் ஆண்டுகளுக்குள் நுழைவது தனது ஜனத்தொகையில் கிட்டத்தட்ட சரி அரைப்பங்கினர் (நாட்டின் மக்களில் நூற்றுக்கு 60 வீதத்துக்கும் அதிகமானோர்) படிப்பறிவு இல்லாது இருந்து கொண்டுள்ள ஒரு நிலையாகும். ஆரம்பப் பாடசாலை செல்லும் வயதைக் கொண்டவர்களுள் (5 வயது தொடக்கம் 11 வயது வரை) பாடசாலை செல்லாது இருக்கும் இந்தியப் பிள்ளைகளின் எண்ணிக்கை 1995ல் 78 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டது. (புரன்ட் லைன் 1997 ஆகஸ்ட் 22)

ஒதுக்கீடு செய்யும் முறை (Reservation System) பதிவு செய்யப்பட்ட சாதி, குலம் ஆக வகுக்கப்பட்ட மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத் தொழில், கல்வி நிறுவனங்களில் மாணவர் வெற்றிடங்களில் ஒரு பகுதியை ஒதுக்கீடு செய்தல் முதலில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1920ல் அறிமுகம் செய்யப்பட்டாலும் இம்முறை சுதந்திர இந்தியாவின் உள்ளும் தொடர்ந்தும் கடைபிடிக்கப்பட்டது. இம்முறையின் அடிப்படை நோக்கம் காலனித்துவ ஆட்சிக்கு முக்கியமான முண்டு கோலாக மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே வசதி வாய்ப்புக்கள் கொண்ட ஒரு சமூக தட்டை அபிவிருத்தி செய்வதே. மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் அபிலாசைகளின் பேரில் போராடுவதாகக் கூறிக் கொண்ட அம்பேத்கார் இயக்கம், எந்த ஒரு காலத்திலும் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியை எதிர்த்ததே கிடையாது என்பது தற்செயலானது அல்ல. பிரித்து ஆளும் விதிமுறையில் உலகில் நிபுணர்களாக விளங்கிய பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் இந்து மக்களுக்கிடையே இருந்து வந்த சாதி பேதங்களை சுரண்டிக் கொள்வதன் மூலம் இந்தியாவின் உழைக்கும் மக்களிடையே பிளவுகளை உருவாக்க முயன்றனர். எனினும் தேசிய முதலாளி வர்க்க ஆட்சியின் கீழ் ஒதுக்கீட்டு முறையின் 50 ஆண்டு கால அனுபவங்கள் இந்திய முதலாளித்துவ அரசியலமைப்பு சட்ட வடிவினுள் ஒடுக்கப்படும் மக்களின் மீட்சிக்கு எதுவிதமான மார்க்கமும் இருக்கவில்லை என்பதை பலம் வாய்ந்த முறையில் நிரூபித்துக் கொண்டுள்ளது.

தொழில் வாய்ப்புக்களும், கல்வி நிறுவனங்களில் வெற்றிடங்களும் அதிகரித்ததும் இந்த ஒதுக்கீட்டு வீதாசாரங்களை அதிகரிக்கும் படி கோரும் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.

தேசிய முதலாளி வர்க்கத்தின் ஆட்சியின் 50 ஆண்டுகளுக்கு பின்னர் பொதுமக்களால் பிரமாண்டமான பெரும்பான்மையினர் சுத்தமான குடிநீர், மின்சாரம், நாகரீகமான வீட்டு வசதி, கல்வி, சுகாதார வசதிகள் இல்லாமலேயே இருந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள 5 இலட்சம் கிராமங்களில் நூற்றுக்கு 75 விதத்துக்கும் அதிகமானோர் இந்த வசதிகள் இல்லாமல் இருந்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மக்கள் அசுத்தமான நீர், அசுத்தமான சுற்றாடல், வறுமை காரணமாக உருவாகும் நோய்களால் உயிர் துறக்கின்றார்கள். காசம், மலேரியா, கொலரா போன்றவை வருடாந்தம் 15 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பலியெடுக்கும் தோற்றுநோய்களாகும். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி இந்தியாவில் 10 பேரில் இருவர் காச நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) அறிக்கையின்படி இந்திய பிள்ளைகளில் நூற்றுக்கு 53 வீதத்தினர் அல்லது 200 மில்லியன்களுக்கும் அதிகமானோர் போஷாக்கின்மையால் பீடிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் இந்தியாவில் 22 மில்லியன் குழந்தைகள் இறக்கின்றன.

தேசியக் கட்டிட அமைப்பின் மதிப்பீடுகளின்படி 1985ல் 25 மில்லியன்களாக இருந்த வீட்டுத் தட்டுப்பாடு 1988ல் 29 மில்லியன் வரை வளர்ச்சி கண்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2000 ஆண்டுகளில் 40 மில்லியன்களை எட்டும். பெரும் நகரங்களில் வேலை செய்யும் மக்களில் பெரும்பான்மையினர் சேரிகளிலேயே ஜீவிக்கின்றனர். 25 மில்லியன் நடைபாதைக் கடைகள் இந்திய மக்களின் வீடுகளாகி உள்ளன.

1951ல் வேலையில்லாதோர் எண்ணிக்கை மூன்று இலட்சம் என அறிக்கை செய்யப்பட்டது. ஆனால் இன்று இந்த எண்ணிக்கை 40 மில்லியன்களையும் தாண்டிவிட்டது. பதிவு செய்யப்படாத வேலையற்றோர் உட்பட வேலையில்லாதோர் எண்ணிக்கை 130 மில்லியன்களுக்கும் அதிகம்.

வேலையின்மையினதும் வறுமையினதும் அதிகரிப்பு காரணமாக தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை வளர்ச்சி கண்டுள்ளது. தேசிய குற்றவியல் அறிக்கை அலுவலகத்தின்படி 1994ல் தற்கொலை செய்து கொண்டோர் எண்ணிக்கை 89195. இது முன்னைய ஆண்டைக் காட்டிலும் 5000 அதிகம். ஸ்டாலினிஸ்டுகளின் ஆட்சியில் உள்ள மேற்கு வங்காளத்தில் மட்டும் 1994ல் 12389 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொள்வோர் வீதாசாரத்தை பொறுத்தமட்டில் மேற்கு வங்காளம் ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணியில் நின்று கொண்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுள் இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் மட்டும் தற்கொலை செய்து கொண்டோர் எண்ணிக்கை 300க்கும் அதிகம் (ஹிந்து-1997 மே 7)

பட்டினி மரணங்களில் பீஹார், ஒரிஸ்ஸா, ஹரியான மாநிலங்களின் கிராமங்களில் பேயாடுகின்றன. ஹரியான மாநில அரசாங்கம் வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வமான அறிக்கைகளின்படி புதுடில்லிக்கு மிகவும் அண்மையில் உள்ள சுரகோன் மாவட்டத்தில் சுமார் 470 கிராமங்களில் 3 மாத காலத்தினுள் 400 பேர் இறந்துள்ளனர். இந்த மாரணங்களுக்கான நெருங்கிய காரணம் மலேரியாவாக இருக்கலாம். என்றாலும் பிரதேச மக்கள் மோசமான போஷாக்கின்மையால் பீடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் அம்பலப்படுத்துகின்றன. பொதுவாக மனித இரத்தத்தில் ஹிமோக்லொபினின் அளவு நூற்றுக்கு 1 கிராமுக்கு குறையக் கூடாது எனினும் இப்பிரதேச மக்களின் ஹிமோக்லொபின் அளவு பொதுவாக நூற்றுக்கு 4 கிராமுக்கு குறைவாகும். (ஹிந்து 1996 நவம்பர் 28)

இந்திய ஜனத்தொகையில் நூற்றுக்கு 70வீதத்தினர் இன்னமும் கிராமங்களில் வாழ்கிறார்கள். விவசாய உற்பத்தி பொருட்களின் விலை வீழ்ச்சிக்கும் உர மற்றும் உற்பத்திக்கு அவசியமான பொருட்களின் விலை உயர்வுக்கும் முகம் கொடுக்கும் விவசாயிகள் பெரும் கடன் சுமையில் மூழ்கிப் போயுள்ளார்கள். இந்த ஏழை விவசாயிகள் நிலம் அற்ற விவசாய தொழிலாளர்களாகி வருகின்றார்கள். 19.. புள்ளிவிபரங்களின்படி 1986ல் .. மில்லியன்களாக இருந்த விவசாய தொழிலாளர் எண்ணிக்கை 1987ல் … மில்லியன்கள் வரை உயர்ந்துள்ளது. இவர்களில் நூற்றுக்கு 70வீதத்தினர் வாழ்வது வறுமைக் கோட்டின் கீழாகும். விவசாய தொழிலாளர்களின் நாட்சம்பளம் பொதுவாக ரூபா. 14.58 ஆகும். விவசாயக் கைத்தொழில் அல்லாத தொழிலாளியின் நாட் சம்பளம் ரூபா. 34.90 ஆகும்.

இன்று ஜனத்தொகையில் நூற்றுக்கு .. வீதத்தினர் நாட்டின் வருமானத்தில் … வீதத்தினை உழைக்கும் விவசாயக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆதலால் சாதாரண விவசாய கைத்தொழில் தொழிலாளியின் வருமானம் விவசாய கைத்தொழில் தொழிலாளி அல்லாதவரின் வருமானத்தில் சரி அரைப் பங்காகும். (இந்தியா ரூடே 1997 ஆகஸ்ட் 18)

350
மில்லியன்களைக் கொண்ட உழைப்புப்படையில் தொழிற்சங்கங்களில் இணைந்து கொண்டுள்ளோர் நூற்றுக்கு 10வீதத்தினர் மட்டுமே. அங்ஙனம் தொழிற்சங்கங்களில் உள்ள பகுதியினரை சார்புரீதியில் சலுகைகள் கொண்ட உழைப்புப் படை என அழைக்க முடியும். உழைப்புப் படையில் பிரமாண்டமான பெரும்பான்மையினர் வேலை செய்வதும், வசிப்பதும் பயங்கரமான நிலைமைகளின் கீழாகும். வறுமைக் கோட்டினை நிர்ணயிக்கையில் ரூபா. 18000க்கு குறையாத வருடாந்த வருமானம் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் பயிற்சி பெறாத தொழிலாளியின் இன்றைய குறைந்த பட்ச வருமானம் வருடாந்தம் ரூபா. 10000ஐத் தன்னும் எட்டுவது கிடையாது. 1960ல் கைத்தொழில் தொழிலாளர்களுக்கான நுகர்ச்சி விலைச் சுட்டெண்ணுக்குச் சார்பு ரீதியில் ரூபாவின் பெறுமதியை அளவிட்ட போது 1996 செம்டம்பரில் அது 5.90 பைசா(சதம்) இறங்கி இருந்தது. அந்தப் பெறுமானம் 1966ல் இருந்து தொடர்ந்து வீழ்ச்சி கண்டுள்ளது. அது 1970ல் 54.26 பைசாவும் 1980ல் 25.64 பைசாவும் 1990ல் 10.89 பைசாவும் 1995ல் 6.64 பைசாவும் ஆகியது. இன்று தனியார் வருமானம் சாதாரண வருடத்துக்கு ரூபா. 12240 (540 டாலர்) ஆகும்.

பெரிதும் அடிப்படையான பிரச்சினை

ஆதலால் தேசிய அரச வடிவத்தினுள் 50 வருடகால தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியின் பெறுபேறு, உழைக்கும் மக்களின் பெரும்பான்மையினர் மீது சமூகப் பேரழிவின் தாக்குதலை ஒன்றன்பின் ஒன்றாக நடாத்தியதேயாகும். சுதந்திர ஆட்சியின் தோல்வி பற்றி முதலாளித்துவப் பத்திரிகைகளில் கட்டுரைகள் பிரசுமாகி உள்ளன. எனினும் இந்தச் சகல முதலாளித்துவ விமர்சகர்களும் தோல்விக்கான காரணமாக அரசியல்வாதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையே இருந்து வரும் ஊழல்களையே காட்டுகின்றன்றார்கள். ஆனால் இதைக் காட்டிலும் பெரிதும் அடிப்படையான பிரச்சினை இருந்து கொண்டுள்ளது.

ஸ்டாலினிச அதிகாரத்துவம் சோவியத் பொருளாதாரத்துக்குப் பிரமாண்டமான அழிவுகளை உருவாக்கினாலும், இந்த அதிகாரத்துவம் இறுதியில் சோவியத் யூனியனை கலைத்து முதலாளித்துவத்தை புனருத்தாரணம் செய்ய வழிவகுத்தாலும் மனித இனத்தின் வரலாற்றில் மாபெரும் தொழிலாளர் வர்க்கப் புரட்சியின் மூலம் பிறந்த அரசான சோவியத் யூனியன் 74 ஆண்டுகளாக இந்தச் சகல நெருக்குவாரங்களுக்கும் முகம் கொடுத்து நீடிக்க முடிந்தது. இக்காலப் பகுதியினுள் சோவியத் யூனியன் சுதந்திரம் அடைந்ததாகக் கூறிக் கொண்ட ஏனைய சகல பின்தங்கிய நாடுகளுடன் ஒப்பிடும் போது பெரும் பாய்ச்சலில் முன்சென்றிருப்பது தனியார் சொத்துடையை ஒழித்து, உற்பத்தி சாதனங்களில் அரசுடைமை ஸ்தாபிதம் செய்ததன் புண்ணியத்தாலேயேயாகும்.

ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள கைத்தொழில் அபிவிருத்திகளுடன் இணைந்து உற்பத்தியில் பூகோளமயமாக்கமும் உலகில் பொருளாதாரத்தின் ஒருங்கு இணைப்பும் தேசிய ரீதியில் நிர்வகிக்கப்பட்ட சகல பொருளாதாரங்களின் மீதும் மரண அடி தொடுத்துள்ளது. மிகவும் பின்னேற்றமான தேசிய பொருளாதார வேலைத்திட்டங்களை கடைப்பிடித்த கிழக்கு ஐரோப்பாவினதும் சோவியத் யூனியனதும் ஸ்டாலினிச ஆட்சியாளர்கள் புதிய பூகோள யதார்த்தத்தின் திட்டவட்டமான பலிகடாக்கள் ஆகினர்.

சுதந்திர இந்தியாவின் 50 ஆண்டு விழாவின் மத்தியில் இந்தியாவின் தேசிய முதலாளி வர்க்க ஆட்சியாளர்கள் ஒன்றிணைந்த பூகோளமயமான உலகச் சந்தையின் மீது ஆதிக்கம் கொண்டுள்ள ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களதும் (சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி) ட்ரான்ஷ்நஷனல் கூட்டுத்தாபனங்களதும் கட்டளையின் கீழ் கடந்த காலத்தில் தடைகளின்றி கொள்ளையில் இருந்து தப்ப விதிக்கப்பட்டிருந்த உயர்மட்ட சுங்க வரிகளால் காக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தைத் திறந்துவிட்டுள்ளனர். தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பு உக்கிரம் காணாது இருந்திருக்குமேயானால் தேசிய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முழுத் துணைக் கண்டத்தையும் உலகின் பரந்த மலிவு உழைப்பு வலயமாக மாற்றியிருப்பார்கள். ஸ்டாலினிச சீ.பி.. (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) சீ.பி.. (எம்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சிகளின் திட்டவட்டமான ஒத்துழைப்புடன் இன்று நாட்டை ஆட்சி செய்யும் மத்திய அரசாங்கம் அரச துறையைச் சேர்ந்த கைத்தொழில்களுக்கு நிதி வழங்காமல் அவற்றை தலைமூழ்கச் செய்து, இறுதியில் இழுத்து மூட அல்லது தனியார்மயமாக்குவதற்கான நிலைமைகளைச் சிருஷ்டிக்கின்றது. உலக வங்கியின் கட்டளையின் கீழ் மத்திய, மாநில அரசாங்கங்கள் கல்வி, சுகாதார சேவைகள், மின்சாரம், நீர்ப்பாசனம், உரம் போக்குவரத்துக்கான உதவி மானியங்களை வெட்டுவதையும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. ஐக்கிய முன்னணி அரசாங்கம் உதவி மானியத்தை அடியோடு ஒழித்துக் கட்டும் இலக்குடன் உதவி மானியம் பற்றிய வெள்ளை அறிக்கையை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

பெற்றோலியம் பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தினை நடைமுறைக்கிடும் போது பணீக்கம் குதிரை வேகத்தில் அதிகரிக்கும். உழைக்கும் மக்கள் சகித்து கொள்ள முடியாத அளவுக்கு வாழ்க்கைத் தரம் ஆதாளபாதாளத்தில் தள்ளப்படும். இந்நடவடிக்கைகள் வெகு விரைவில் முன்னொரு போதும் இல்லாத விதத்தில் துயரில் மூழ்கியுள்ள மக்களின் சமூகக் கிளர்ச்சிகளை மூளச் செய்யும்.

ஏகாதிபத்தியவாதிகளினால் கட்டளையிடப்பட்ட "பொருளாதார மறுசீரமைப்பு"க்களை விரைவுபடுத்துவது நாட்டை தமது பிடியில் கொண்டுள்ள ஸ்டாலினிஸ்டுகள் உட்பட்ட இந்தியாவின் தேசிய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் என்போரை ஏகாதிபத்திய எசமானர்களினதும் தமதும் பாதுகாப்புக்களின் பேரில் வீதிகளில் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் அலுகோசுக்களாக கோடானுகோடி மக்களின் கண்களின் எதிரில் அம்பலமாக்கும்.

1975 ஜூன் மாதத்தில் அவசரகாலச் சட்டம் விதிக்கப்பட்டது. பொருளாதார முன்னணியில் தோல்வியும் அதனால் நாடு பூராவும் பரவிய அமைதியின்மையினாலும் ஆகும்.” (பிஸ்னஸ் டுடே - 1997 மே19-ஜூன் 1)

நிதி அமைச்சர் சிதம்பரம் செய்த நினைவூட்டலை தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும். சோவியத் யூனியனதும் சீனாவினதும் வீயட்னாமினதும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளதும் தலைவிதியையும் யுத்தத்துக்க பின்னர் அமைக்கப்பட்ட சுதந்திர அரசுகள் எனப்பட்டவற்றின் தலைவிதியையும் நோக்கும் போது ரூஷ்யத் தொழிலாளர் வர்க்க புரட்சியின் இணைத் தலைவரும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியொன் ட்ரொட்ஸ்கியின் அனைத்துலகவாத பார்வையும் முன்னோக்கும் தொழிலாளர் வர்க்கத்துக்கு நம்பிக்கையையும் எதிர்காலப் பாதையையும் வழங்குகின்றது.

ட்ரொட்ஸ்கி அன்று கூறியவை

ட்ரொட்ஸ்கி இந்தியத் தொழிலாளர்களுக்கு வரைந்த பகிரங்கக் கடிதத்தில் இந்திய முதலாளி வர்க்கத்தின் தொழிற்பாட்டை பின்வருமாறு அம்பலமாக்கினார்: “இந்திய முதலாளி வர்க்கத்தினால் புரட்சிகரப் போராட்டத்தை வழிநடாத்த இயலாது உள்ளது. அவர்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுடன் நெருக்கமாக இணைந்து கொண்டுள்ளனர். அவர்கள் தமது சொத்துக்களின் பேரில் அஞ்சி நடுங்குகின்றார்கள். அவர்கள் என்ன விலை கொடுத்தென்றாலும் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுடன் சமரசம் செய்து கொள்ள முயன்று, மேலிருந்து வரும் சீர்திருத்தங்கள் பற்றிய எதிர்பார்ப்புக்கள் ஊடாக இந்தியப் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றார்கள். இந்த முதலாளி வர்க்கத்தின் தலைவரும் எதிர்கால பேச்சாளரும் காந்தி. குள்ளமான தலைவரும் போலி எதிர்காலப் பேச்சாளரும்! காந்தியும் அவரின் சகாக்களும் அபிவிருத்தி செய்துள்ள கோட்பாடு இதுதான்: “இந்தியாவின் நிலைமை தொடர்ந்து முன்னேற்றம் காணும். அதன் சுதந்திரம் தொடர்ந்து பரந்துபடும். இந்தியா படிப்படியாக சமாதான சீர்திருத்த வழியில் டொமினியன் அரசாக மாறும். பின்னர் பூரண சுதந்திரத்தைக் கூடக் கைப்பற்றிக் கொள்ளும். இந்த முழு முன்னோக்கும் அடியோடு தவறாது....”

இக்கடிதத்தின் இறுதியில் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “நாம் தவறான எதிர்பார்ப்புக்களை வீசிவிட்டு போலி நண்பர்களை துரத்தியடிக்க வேண்டும். நாம் எதிர்பார்ப்புக்களை எம் மீதும் எமது புரட்சிகர சக்திகள் மீதும் மட்டுமே கொண்டிருக்க வேண்டும். தேசிய சுதந்திரத்துக்கான சுதந்திர இந்தியக் குடியரசுக்கான போராட்டம் பிரிக்க முடியாத விதத்தில் விவசாயப் புரட்சியுடனும் வங்கிகளையும் ட்ரஸ்டுகளையும் தேசியமயமாக்குவதுடனும் இணைந்து கொண்டுள்ளது. நாட்டின் வாழ்க்கைத் தர மட்டத்தினை உயர்த்துகின்றதையும் உழைக்கும் மக்களை சுய தலைவிதியின் எஜமானர்கள் ஆக்குகின்றதுமான இலக்குடன் நடைமுறைக்கிடும் ஒரு தொகை பொருளாதார நடவடிக்கைகளுடனாகும். விவசாயிகளுடன் கூட்டுக்குச் செல்லும் தொழிலாளர் வர்க்கம் மட்டுமே இந்த பணியை இட்டு நிரப்புவதில் வெற்றி பெறும்..”

இந்தியா சம்பந்தமாக மட்டுமல்ல யுத்தத்தின் பின்னைய காலப்பகுதியில் ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் அமைக்கப்பட்ட அந்தச் சகல "சுதந்திர" அரசுகளுக்கும் தேசிய முதலாளி வர்க்க ஆட்சியின் கீழ்மு தேசிய அரச அமைப்பினுள்ளும் சுதந்திரம் தொடர்பாக உரிமை கோருவதன் முழுத் தோல்வியையும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி முன்நோக்கு நிரூபிக்கின்றது.

ட்ரொட்ஸ்கி உலக வரலாற்று கருத்துப்பாட்டின் அடிப்படையில் காலூன்றி நின்று, ரூஷ்யாவினுள் முதலாளி வர்க்கம் தனது முதலாளித்துவப் புரட்சியை நடாத்துவதில் மேலும் இலாயக்கற்றது என்பதை ஊர்ஜிதம் செய்தார். அவர்கள் புரட்சிகரத் தொழிலாளர் வர்க்கத்தை ஸார்வாத சர்வாதிகாரத்துக்கு அல்லது வெளிநாட்டு ஏகாதிபத்தியத்துக்கு இறுதியில் அவர்கள் சார்ந்து கொண்டிருந்ததும் வெளிநாட்டு ஏகாதிபத்தியத்தின் மீதே—பெரும் அச்சுறுத்தலாகக் கண்டனர்.

ஆதலால் இரண்டு கட்டப் புரட்சி பற்றிய மெனிஷிவிக்வாத, ஸ்டாலினிச கோட்பாட்டுக்கும் நான்கு வர்க்கங்களின் முன்னணி பற்றிய மார்ட்டி நோவ்வாத கோட்பாட்டுக்கும் எதிராக ட்ரொட்ஸ்கி தொழிலாளர் வர்க்கம் விவசாயிகளின் தலைமையை கைப்பற்றி கிராமப்புற நிலமானித்துவ உறவுகளைக் கொண்ட பழைய அமைப்பினைத் தூக்கி வீசி, ஜனநாயகப் புரட்சியின் பாத்திரத்தினை இட்டு நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினார். இப்பணியை நிலைவேற்றுகையில் எவ்வாறெனினும் தொழிலாளர் வர்க்கம் ஜனநாயக குடியரசினை ஸ்தாபிதம் செய்வதுடனும் நிலமானித்துவத்துக்கு முடிவு கட்டுவதுடனும் நிறுத்திக் கொள்ள முடியாது.

அதற்குப் பதிலாக தொழிலாளர் வர்க்கம் ஆட்சியை தனது கைக்குள் கொணர்ந்து உற்பத்தியின் சமூக சாதனங்களின் தனியுடமையைத் திட்டவட்டமாகச் சவால் செய்யும். சோசலிச தன்மை கொண்ட நடவடிக்கையை எடுக்கும் வண்ணம் தள்ளப்படுகின்றது.

1905 புரட்சியின் பின்னர் ட்ரொட்ஸ்கியினால் அபிவிருத்தி செய்யப்பட்ட இந்த முன்நோக்கு 1917 அக்டோபரில் அதன் பூரண நிரூபணத்தை கைவரப் பெற்றது. புரட்சி மறு அர்த்தத்தில் நிரந்தரமாகியது. சோசலிசப் புரட்சி ரூஷ்யாவில் ஆரம்பிக்கக் கூடும் என்றாலும் அது அனைத்துலகக் கிளர்ச்சியின் அடிப்படையில் மட்டுமே பூரணமாகும்.

1942ல் அமைக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் இந்தியத் துணைகண்டப் பகுதியான இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி 1951ல் பப்லோவாதிகளால் கரைக்கப்படுவதற்கு முன்னர் இந்திய உழைக்கும் மக்களுக்கு புரட்சிகரப் பாதையை காட்டிய ஒரே கட்சியாக விளங்கியது. மிகவும் குறுகிய காலத்தினுள் அது சென்னை, கல்கத்தா, பம்பாய் தொழிலாளர்களிடையே கணிசமான அளவு ஆதரவை வெற்றி கொண்டது.

பிரித்தானிய காலனித்துவத்தினதும் நிலமானித்துவத்தினதும் தேசிய முதலாளித்துவ ஆட்சியினதும் அரை நூற்றாண்டுகால பேரழிவுகளில் உரித்துக்களில் இருந்து, தலையெடுப்பதற்கான ஒரே வேலைத்திட்டம் சோசலிச அனைத்துலக வேலைத்திட்டமே. தொழிலாளர் வர்க்க அனைத்துலகவாத ஐக்கியத்திற்கான போராட்டத்தின் ஒரு பாகமாக இந்தியத் துணைக்கண்ட சோசலிசக் குடியரசு ஒன்றை ஸ்தாபிதம் செய்யும் பொருட்டு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா, நேபாளம், பூட்டான், இலங்கை முதலான பல்வேறு முதலாளித்துவ அரசுகளினுள் வாழும் இந்தியத் துணைக் கண்டத்தின் தொழிலாளர்கள் ஒன்றுபடுவதன் மூலம் இந்தியத் துணைக் கண்ட முதலாளித்துவ ஆட்சிகளின் இராணுவ சப்பாத்துக்களினால் நசுக்கப்படும் சிறுபான்மை தேசிய இனங்கள் உட்பட்ட முழு ஒடுக்கப்படும் மக்களும் அவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ள விலங்குகளின் பிடியில் இருந்து நிஜமாக விடுதலை பெறுவர். இந்தியாவின் சோசலிசத் தொழிலாளர் கழகம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டு இந்த புரட்சிகர முன்நோக்கின் அடிப்படையில் போராடுகின்றது.

Tuesday, June 14, 2016

சோசலிசத் தொழிலாளர் கழகத்தில் சேருங்கள்!

இதழ் எண் 29
பிப்ரவரி 1990

தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர டிராட்ஸ்கிசத் தலைமையைக் கட்டுங்கள். சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் கொண்ட இந்தியாவில் உள்ள டிராட்ஸ்கிச இயக்கமாகிய சோசலிசத் தொழிலாளர் கழகத்தில் உறுப்பினர் ஆகுங்கள்!

பெயர் ….
முகவரி …

நிரப்பியபின் அனுப்ப வேண்டிய முகவரி: தபாற் பெட்டி எண் 968, பெரம்பூர் பாராக்ஸ் சென்னை - 600 012.

சென்னை: பொலிசாரும் தொழிற்சங்கத் தலைவர்களும் தொழிலாளர்களுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டு

இதழ் 490 செப்டம்பர் 1998


தொழிற்சங்க அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் பின்னர் பொய்க்குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுத்துள்ள ஐந்து ஆடைக் கைத்தொழிலாளர்களைப் பாதுகாக்க இந்திய சோசலிசத் தொழிலாளர் கழகம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. சோசலிசத் தொழிலாளர் கழகம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியத்துடன் செயற்படும் ஒரு அமைப்பாகும்.

இந்தச் சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கைத்தொழில் தொழிலாளர் சங்க சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர்கள் தமக்கு எதிரான சங்க அங்கத்தவர்களைத் தாக்கப் போவதாகப் பயமுறுத்தியதோடு சோ.தொ.. ஆதரவாளராகப் பெயர்பெற்ற ஒரு தொழிலாளியையும் தாக்கினர்.

. ராமதாஸ், எச். ஆனந்தன், ஜே. சிறீனிவாசன், . லீலா நந்தபூசணம் ஆகியோரே இந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளனர். இந்த நால்வரும் கடந்த ஆண்டு சென்னை 'வெல் நிர்' ஆடைத் தொழிற்சாலையில் இடம்பெற்ற வேலைநிறுத்தத்தில் வேட்டைக்கு உள்ளான 14 தொழிலாளர்களுள் அடங்குவர். இந்தப் 14 தொழிலாளர்களையும் வேலையில் இருந்து இடைநிறுத்தம் செய்ததன் பின்னர் அவர்களை சேவையில் இருந்து அப்புறப்படுத்தவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யுடன் இணைந்த சீ.பீ.ரீ.யூ. தொழிற்சங்கவாதிகள் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவு வழங்கினர்.

கடந்த ஆண்டு வேலைநிறுத்தம் 60 தொழிலாளர்கள் பக்டரியில் இருந்து வெளியேறி, துண்டு வேலை முறைக்கான சம்பளத்தைக் கூட்டும்படி கோரி ஆரம்பமாகிறது. அது இரண்டு கிழமைகளின் பின்னர் 2000 தொழிலாளர்கள் பங்கு கொண்ட வேலைநிறுத்தமாக வளர்ச்சி கண்டது. ஹொங்கொங்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்தக் கம்பனி 23 தொழிலாளர்களை வேலை இடைநிறுத்தம் செய்தது. இதில் நால்வர் வேலைநிறுத்தத்தில் தாம் எவ்விதமான பாத்திரத்தையும் வகிக்கவில்லை எனக் கூறி மீண்டும் வேலையில் சேர்ந்து கொண்டனர்.

1997 ஜூலை தொடக்கம் இந்த ஆண்டு மே மாதம் வரை 14 தொழிலாளர்கள் தொடர்ந்து இடைநிறுத்தத்துக்கு உள்ளாகி இருந்தனர். 'வெல் நிட்' கம்பனியும் சீ..ரீ.யு.வும் புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் பின்னர் வேலைநிறுத்தத்துக்கு தலைமை தாங்கிய 14 தொழிலாளர்களையும் வேலைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆடைத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை மிகவும் அற்பமான ரூபா. 125ல் அதிகரிக்கும் இந்த உடன்படிக்கை ஒரு காட்டிக் கொடுப்பாகும் என வெல்நிட் தொழிலாளர்கள் கண்டனம் செய்தனர்.

ஆகஸ்ட் 1ம் திகதி 40 தொழிலாளர்கள் தொழிற்சங்கத் தேர்தல் நடைபெறும் தினத்தை அறியும் பொருட்டு சீ..ரீ.யூ. அலுவலகத்துக்கு சென்றனர். சங்க அமைப்பு விதிகளின்படி தேர்தல் கடந்த மே மாதத்தில் நடைபெற்று இருக்க வேண்டும். தொழிற்சங்க மகாநாட்டை நடாத்துவதாக இருந்தால் சகல தொழிலாளர்களும் ரூபா. 125 வீதம் செலுத்த வேண்டும் என்பது தொழிற்சங்க அதிகாரிகளின் பதிலாக விளங்கியது. சீ..ரீ.யு.வின் இணைச் செயலாளர் சிவக்குமார் பின்வருமாறு கூறினார்: “ரூபா. 125 செலுத்தாமல் எவரும் வாய் திறந்தால் உங்கள் சகலவரையும் உதைத்து விரட்டுவோம். சங்கத் தேர்தல் கிடையாது.” சீ.பீ.. (எம்) கட்சியின் தலைவர்களில் ஒருவரான இந்தச் சிவகுமார் அடுத்து சோ... ஆதரவாளர் பக்கம் திரும்பி "இந்தக் கரைச்சல்களுக்கு நீதான் காரணம்" எனக் கூறி முகத்தில் அறைந்ததோடு "இவனை ஓட்டோவில் போட்டு எமது மாவட்டத்துக்கு கொண்டு போ" என சங்க அதிகாரிகளுக்கு வெறிபிடித்த தொனியில் கட்டளையிட்டார். ஆனால் தொழிலாளர்கள் இதனால் ஈடாட்டம் கண்டுவிடவில்லை. அவர்கள் சோ.தொ.. ஆதரவாளருடன் வெளியேறினர்.

இரண்டு நாட்களுக்கு பின்னர் எதிரணி தொழிலாளர்களுக்கும் சிவகுமாருக்கும் இடையே மற்றொரு கலகம் ஏற்பட்டது. சீ..ரீ.யூ. அதிகாரிகள் இப்போது தொழிலாளர்களுக்கு எதிராக கொலை முயற்சி, கொள்ளை குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். ஐந்தாவது எதிரி கே. பக்ராஜ் என்ற தொழிலாளியாவார்.

பொலிசார் இந்தச் சம்பவத்தை பாவித்து வெல்நிட் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை இயக்கத்தை நடாத்த முயன்று வருகின்றனர். ஆகஸ்ட் 9ம் திகதி தாம்பரத்தில் கைது செய்யப்பட்ட சிறீனிவாசன் என்ற தொழிலாளி தாம்பரம் பொலிஸ் நிலையத்தில் மோசமாகத் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் இந்த பொலிஸ் நிலையத்தில் ஒரு பொலிஸ் கோஷ்டி வெல்நிட் கம்பனி தொழிலாளர்களைத் தாக்கியுள்ளது. அவர்கள் அந்தப் பக்டரியில் வேலை செய்பவர்கள் அல்ல என்பதை பொலிசார் தாக்குதலின் பின்னரே அறிந்துள்ளனர். இத்தாக்குதலினால் தொழிலாளர் காயமடைந்துள்ளனர்.

சோ.தொ.. வெல்நிட் பக்டரி தொழிலாளர்களின் சார்பில் தொழிலாளர் வர்க்கத்தின் ஆதரவை வென்றெடுக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. தொழிலாளர்கள் மீதான தாக்குதலை எதிர்க்குமாறும் அவர்களுக்கு எதிரான சகல குற்றச்சாட்டுக்களையும் வாபஸ் பெறுமாறும் நெருக்கி பொலிசுக்கு கடிதம் அனுப்பும்படியும் சோ.தொ.. வேண்டியுள்ளது.

கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி:
Inspector of Police,
Sugumaran,
Tambaram Police Station,
Tambaram, Madras – 3
Tamilnadu
India.

Monday, June 13, 2016

சென்னை துப்புரவு தொழிலர்களின் அடிப்படை உரிமைகளை வெல்ல ஏஐடியுசி, சிஐடியுவின் முழு பலத்தையும் அணி திரட்டப் போராடு!


இதழ் எண் 25 செப்டம்பர் 1989

சென்னை மாநாகராட்சி அதன் 300 ஆண்டு நிறைவை கோலாகலமாக கொண்டாடும் அதே சமயம் அதில் பணியும் 6,000 துப்புரவு தொழிலாளர்கள் வாரம் ஒருநாள் கூட விடுமுறை இல்லாதவர்களாக வருடம் 365 நாட்களும் வேலை செய்ய வேண்டிய கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இப்படியாக தொடர்ந்து கோரமாக சுரண்டும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் அதன் ஏஜண்டுகளான கார்ப்பரேசன் நிர்வாக அதிகாரிகளுக்கும், அதேபோல் இதற்கு கடந்தையாக 40 வருடங்களுக்கும் மேலாக செயற்படும் கார்ப்பரேசன் லேபர் யூனியனின் துரோக ஸ்டாலினிசத் தலைமைகளுக்கும் எதிராக துப்புரவு தொழிலாளர்கள் கிளர்ந்தெழ தொடங்கி இருக்கின்றார்கள்.

துப்புரவு தொழிலாளர்களின் பொரும்பான்மையினர் மத்தியில் இருக்கும் கல்வி அறிவின்மையை மேலும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு அதிகாரிகளும் அதற்கு ஒத்துழைக்கும் தொழிற்சங்கத் தலைமையும், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும், வேலை நிலைமைகளையும் பன்மடங்கு மோசமாக்கி சாதனங்களும் தொழில்நுட்பங்களும் மிகவும் வளர்ச்சியடைந்த இன்றைய காலக்கட்டத்திலே முறையாக தீனிகூட போடாத எலும்பும் தோலுமான கால்நடைகளை பயன்படுத்துவதாலும், மேலும் வண்டி ஓட்டும் வேலையையும் குப்பை அகற்றும் வேலையையும் ஒரே தொழிலாளியே செய்ய வேண்டி இருப்பதாலும் அது அத்தொழிலாளிக்கு பெரும் கஷ்டத்தை உண்டு பண்ணுவது மட்டுமல்லாமல் அதன் விளைவாக பொது மக்களிடமிருந்து அனாவசியமான அவச் சொற்களையும் கேட்க வேண்டிய நிலைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடி, உலகளவில் தொழிலாளர்களின் வேலைகளில் அழிப்பையும், வேலைப்பளு அதிகரிப்பையும், வாழ்க்கைத் தர சீரழிவையும் உண்டு பண்ணி வருகிறது. முதலாளித்துவ வர்க்கமும் சுரண்டப்படும் தொழிலாள வர்க்கமும் தீராபகை கொண்ட வர்க்கங்களாக போராட்டத்தை நடத்துகின்றன. நீண்ட காலத்திற்கு முன்பே ஸ்தாபனமயப்படுத்தப்பட்டு போர்க்குணமிக்க போராட்டங்களின் மூலம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு கணிசமான பகுதியினர் வென்றெடுத்த அடிப்படை உரிமைகள் யாவும் துரோக ஸ்டாலினிச மற்றும் இடைநிலைவாத தொழிற்சங்கத் தலைமைகளின் காட்டிக்கொடுப்புகளின் காரணமாக படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றன. அனைத்துத் தொழிலாளர்களின் வேலைகளை பாதுகாப்பதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் நடைமுறை சாத்தியமில்லை என்றவாறு தொழிலாளர்கள் மத்தியில் முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளாக செயற்படும் ஸ்டாலினிச சி.பி.(எம்) சி.பி.. யுசிபி தலைமைகளும் மாவோவாத இந்திய மக்கள் முன்னணி போன்ற தலைமைகளும் முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடிக்கு திவால்நிலைக்கு தொழிலாளர்களை 'பலி' கொடுக்கின்றனர்.

இவ்வாறான நிலைமைகளிலேயே போராட்டக்களத்தில் குதித்து புதிய உரிமைகளை வென்றெடுக்க சென்னைத் துப்புரவு தொழிலாளர்கள் நடத்தும் போராட்டமும், போராடிப் பெற்ற உரிமைகளை தொடர்ந்து பேணுவதற்காக தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பகுதியினர் நடத்தும் போராட்டமும் ஒன்றிணைகின்றன.

..டி.யு.சி, சி..டி.யு. தொழிற்சங்கத் தலைமையின் அரசியல் குருக்களான ஸ்டாலினிச சிபிஐ சிபிஐ (எம்) தலைமைகள் என்ன விலை கொடுத்தும் இன்று மரண வேதனையில் மூச்சு திணறும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு உயிர் கொடுக்க அயராது உழைக்கின்றனர். தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களினால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்படும் டாட்டா பிர்லாக்களின் ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக, வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளை ஆட்சியில் அமர்த்தி முதலாளித்துவ ஆட்சியைத் தொடர்ந்து பேணும், அவர்களுடைய அரசியல் வேலைத்திட்டங்களின் காரணமாக சோசலிச வேலைத்திட்டத்திற்கு மற்றும் தொழிலாளர்களின் ஆட்சி அதிகாரத்திற்காக போராடுவது 'ஆகாசக்கோட்டை' என்று கூறுகின்றனர்.

இன்று தொழிலாள வர்க்கத்தின் எந்த ஒரு பிரிவினரின் முக்கியமான கோரிக்கைகளையும் பூரணமாக வென்றெடுக்க நடத்தும் போராட்டம், முதலாளித்துவ சுரண்டல் அமைப்பை தூக்கி வீசி தொழிலாள வர்க்கத்தின் சர்வாதிகாரத்தின் மூலம் உழைக்கும் வர்க்கத்தின் தேவையின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட சோசலிசப் பொருளாதாரத்திற்காக போராட வேண்டியதன் அவசியத்தையும் முன் வைத்துள்ளது. இதற்காக தொழிலாள வர்க்கத்தின் முழு வர்க்க பலத்தையும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் அணிதிரட்டி போராட, உலக டிராட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் ஐக்கியம் கொண்டு இந்தியாவில் சோசலிசத் தொழிலாளர் கழகம் போராடுகின்றது. அதன் தொழிற்சங்கப் பிரிவான சோசலிசத் தொழிலாளர் அணி பின்வரும் வேலைத்திட்டங்களை வைத்து துப்புரவு தொழிலாளர்களை அணிதிரட்ட போராடுகின்றது.

  1. வாரத்தில் இரு நாள் விடுமுறைக்கு போராடு!
  2. முன் அறிவிப்பின்றி தற்காலிக வேலை நிறுத்தம் செய்வதை உடனே நிறுத்து!
  3. ஏனைய தொழிலாளர்களுக்கு உள்ளது போன்று பண்டிகை மற்றும் தேசிய விடுமுறைகளுக்கு போராடு!
  4. கால்நடைகள் மூலம் குப்பை அகற்றுவதை நிராகரி! மினிலாரிகளை பயன்படுத்து!
  5. தற்காலிக தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்!
  6. வேலையின் போது உடல்நலக்கேடு ஏற்படாமல் தடுக்க மருத்துவ வசதிகளை உறுதி செய்! அதற்கு அவசியமான அணிகளை (கையுறை, பூட்ஸ், மழைக்கோட்டு போன்றவை) வழங்கு!
  7. அனைத்து தொழிலாளர்களுக்கும் வீட்டுவசதியை உறுதி செய்!
  8. விலைவாசி ஏற்றத்திற்கு தகுந்தவாறு சம்பள உயர்வு வழங்கு!
  9. அனைத்து ஆலைகளையும் டெப்போகளையும், டிவிசன்களையும், வங்கிகளையும் தொழிலாளர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்போடு!
  10. வேலைப்பளு அதிகரிபை தோற்கடி! வேலை அதிகரிப்புக்கு ஏற்ப புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்து!
  11. அனைத்து விதமான லஞ்சத்தையும் ஒழி!
  12. மேற்கூறிய கோரிக்கைகளுக்காக போராட சென்னை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களை காலவரையற்ற பொதுவேலை நிறுத்தத்தில் இறக்கு!
  13. அதற்கு ஆதரவாக ஏஐடியுசி, சிஐடியுவை மாநில அளவிலும், நாடு பரந்த அளவிலும் பொது வேலை நிறுத்தத்தில் இறக்கு!
  14. சிபிஐ (எம்), சிபிஐ தலைமைகள் முதலாளித்துவ கட்சிகளுடன் உறவை துண்டித்து சோசலிச மற்றும் தீர்க்கப்படாத ஜனநாயக வேலைத்திட்டங்களை நிறைவேற்றப் போராடும் ஒரு தொழிலாளர், விவசாயிகள் அரசாங்கம் அமைக்க போராட நிர்பந்தி!
  15. 40 வருடங்களுக்கு மேலாக தொழிற்சங்க ஜனநாயக நெறிமுறைகளை கொன்று தொழிலாளர்களை கோரமாக சுரண்டுவதற்கு உடந்தையாக செயல்பட்டு வருபவர்களை சங்கத்திலிருந்து வெளியேற்று!
  16. உடனடியாக சங்க பொதுச் சபையை கூட்டி தேர்தலை நடத்து!
  17. கழகத்தின் ஒவ்வொரு டிவிஷன் மற்றும் டெப்போ கிளைக் கூட்டங்களை உடனடியாக கூட்டு!
  18. பாட்டாளி வர்க்க ஜனநாயகமும் பாட்டாளி வர்க்க சர்வதேசியமும் ஓங்குக!

Saturday, June 11, 2016

பி & சி. மில்லில் தொழிலாளர்களுக்கு எதிரான நிர்வாகத்தின்-குசேலர் தலைமையின் கூட்டுச்சதியை தோற்கடி!

இதழ் 20, டிசம்பர் 1988
 
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஐக்கியம் கொண்ட, இந்திய டிராட்ஸ்கிச இயக்கமான சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தொழிற் சங்கப்பிரிவான சோசலிசத் தொழிலாளர் அணியின் பி&சி மில் கிளையின் வாயிற் கூட்டங்கள் நவம்பர் 16,17 தேதிகளில் பி அண்டு சி மில்லின் இரு வாயில்களிலும் நடைபெற்றது. வாயிற்கூட்டங்களுக்கு சோசலிசத் தொழிலாளர் அணியின் செயலாளர் தோழர் மோசஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார். மேலும் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தலைமை உறுப்பினர்களான தோழர் பிரகாஷ், தோழர் ராம் ஆகியோர் உரையாற்றினார்கள்.

'உலக முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியும் பி அண்டு சி ஆலை நிலைமையும் என்ற தலைப்பின் கீழ் வாயிற் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. பி அண்டு சி தொழிலாளர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் என்ற தலைப்பில் சிறு துண்டு பிரசுரம் சோசலிசத் தொழிலாளர் கழகத்தினால் வெளியிடப்பட்டு, ஆயிரக் கணக்கில் தொழிலாளர்கள் மத்தியில் விற்பனையாகியது. அந்நூலில் சோசலிசத் தொழிலாளர் கழகத்தினால் முன்வைக்கப்பட்ட புரட்சிகர வேலைத்திட்டங்களையும் முன்நோக்குகளையும் விளக்கும் அடிப்படையிலும், துரோக குசேலர் தலைமைக்கும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் ஸ்டாலினிச 'ஐக்கிய குழு' மாவோவாத 'தொழிலாளர் முன்னணியின் காட்டிக் கொடுப்புகளை அம்பலப்படுத்தி, புரட்சிகர டிராட்ஸ்கிசத் தலைமையை கட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் கூட்டத்திற்கு தலைமை வகித்த தோழர் மோசசும் மற்றைய தோழர்களும் பேசினார்கள்.

தோழர் மோசஸ் உரையின் ஒரு பகுதி "1981 இல் இதே குசேலர் MLU வின் தலைவராக இருந்த போது வேலைப் பளுவை தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் மில்லை மூடிவிடப் போவதாக அச்சுறுத்தியதை நினைவுபடுத்திப் பாருங்கள். குசேலர் அப்பொழுது ஆட்டோக்கள், டாக்சிகள், பஸ்கள் எல்லாம் ஓடாது முழு அரச நிர்வாகமும் ஸ்தம்பிக்க நேரிடும் என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்தார். இவ்வகையான ஆவேசப் பேச்சுக்கள் இருந்த போதினும் நாம் 6 மாதப் பட்டினிக்கு உள்ளாக்கப்பட்டது மட்டுமல்லாமல் குசேலரால் கையெழுத்திடப்பட்ட அடிமை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைக்குத் திரும்புமாறு நிர்பந்திக்கப்பட்டோம். இந்த ஒப்பந்தம் பல தசாப்தங்களான போராட்டத்தில் நாம் வென்றெடுத்திருந்த உரிமைகளைப் பறித்தது. இந்த ஒப்பந்த அடிப்படையில், 'கமலரத்தினம் அவார்டை' மில்லில் அமுல் செய்வதை ஏற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் அன்வருக்கு சிபிஐ யில் இருந்த கல்யாண சுந்தரம் சிபிஎம் ஐச் சேர்ந்த ராமமூர்த்தி போன்ற ஸ்டாலினிசத் தலைவர்களால் கையொப்பமிடப்பட்டது.” (*அடுத்த இதழில் தொடரும்)

Thursday, June 9, 2016

இந்திய சோசலிசத் தொழிலாளர் கழகம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பகிரங்கக் கடிதம்


தொகுப்பு இலக்கம் - 15

தேதி- 16.1.1996


நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவுடன் ஐக்கியம் கொண்ட இந்தியாவில் உள்ள ட்ரொட்ஸ்கிசக் கட்சியான சோசலிசத் தொழிலாளர் கழகம் யூலை 10ம் திகதி காலை பத்து மணி முதல், பன்னிரெண்டு மணிவரை சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னால் மறியல் செய்ய அனுமதி கோரியது. இந்த அனுமதி, தமிழ்நாடு பொலீஸ் மற்றும் சென்னை பொலீஸ் கமிஷனர் ஆகியோரின் கட்டளைப்படி நிராகரிக்கப்பட்டது. இந்த நிராகரிப்பை சோசலிசத்தொழிலாளர்கழகம் வன்மையாக எதிர்க்கின்றது. அனுமதியை நிராகரித்த பொலீஸ் ஆணை "கிரிமினல் சட்டத்தின் கீழ் மறியல் செய்யும் செயல் குற்றங்களைக் கவரும்" ஆதலால் மறியல் செய்ய அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றது.



உங்களது உத்தரவின் கீழ் தமிழ்நாடு பொலீஸ் கூறியுள்ள காரணம் எதை வெளிப்படுத்துகின்றது என்றால், “ஜனநாயக" அரசாங்கம் எனப்படும் உங்களது அரசாங்கத்தின் ஜனநாயக விரோதத் தன்மையையேயாகும். இதன் பின் பதினெட்டு நாட்கள் கழித்து ஆயிரம் விளக்கு பொலீஸ் நிலையத்தின் பொலீஸ் அலுவலர்கள் ஒருபடி முன்னேறியுள்ளனர். அவர்கள் "இலங்கையில் இனவாதயுத்தமும், இந்திய முதலாளித்துவமும்" என்ற தலைப்பின் கீழ் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தலைமை உறுப்பினர்களில் ஒருவர் உரையாற்ற இருந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களிடம் சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் பேச்சாளர் ஆற்ற இருந்த உரையை எழுத்தில் முழுமையாக, கூட்டம் நடத்துவதற்கான அனுமதி விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்று கோரினர். இது மிதக்கும் பனிப்பாறையின் உச்சியின் நுனியை ம்மட்டும் கண்ணுக்குக் காட்டுகின்றது. மிகவும் அடிப்படையான உரிமைகளை அடக்கி, ஒடுக்குவதற்கு முதலாளித்துவ ஜனநாயகத்தினைத் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்ட முன் முகப்பின் இடிபாடுகளின் கீழ் உங்களது அரசாங்கம் ஆற்றிவரும் தயாரிப்புகளின் முன்னேறிய நிலையைத் தான் இது வெளிப்படுத்தியுள்ளது.



மத்திய அரசாங்கத்தால்ல நிறுவப்பட்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம் என்று அழைக்கப்படும் அமைப்பு கூட அது ஆரம்பிக்கப்பட்டு பதினெட்டு மாதங்களுள் காவல் கைதிகள் மற்றும் சிறைக் கைதிகளின் மரணங்கள், பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அட்டூழியங்கள், மற்றும் பொலீஸ் நடத்திய சித்திரைவதைகள் பற்றிய 7,000 முறையீடுகளை (மே 31 வரை) பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இவற்றுள் ஏழில் ஒரு பகுதி அல்லது எட்டில் ஒரு பகுதி முறையீடுகள் தமிழ்நாட்டில் இருந்து பெற்றப்பட்டவை என்று அது குறிப்பிட்டுள்ளது. (இந்து பத்திரிகை, யூலை 17, 1995 பக்கம் 6)



உண்மை எதுவென்றால் நீங்கள் தொழிலாளவர்க்கத்தின் கட்சியான சோசலிசத் தொழிலாளர் கழகம் அதன் அடிப்படை ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த அதற்குள்ள உரிமையை மறுத்துள்ளீர்கள். சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தோழமைக் கட்சியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் நடத்திய பகிரங்கக்கூட்டத்தில் அதற்கு எதிராக பாசிஸ்டுகள் மற்றும் இலங்கையின் அரச படையினர் ஒன்றாகத் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இதை எதிர்த்து இலங்கைத் தூதரகத்தின் முன் மறியல் செய்து இலங்கையிலுள்ள தனது தோழமைக் கட்சியினுடனான தனது சர்வதேச ஐக்கியத்தை வெளிப்படுத்தச் சோசலிசத் தொழிலாளர் கழகத்திற்கு உள்ள அடிப்படை உரிமையை நீங்கள் மறுத்துள்ள அதே மூச்சில் வெறும் நான்கு நாட்கள் கழித்து யூலை 14ம் திகதி, தமிழ் வகுப்புவாத முதலாளித்துவக் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இலங்கைத் தூதுவரகத்தின் முன் மறியல் செய்ய நீங்கள் அனுமதித்துள்ளீர்கள். இதற்குப்பின் ஒன்றன்பின் ஒன்றாக ஏறக்குறைய பத்து, பன்னிரெண்டு முதலாளித்துவக் கட்சிகளுக்கு அவை இலங்கைத் தூதுவரகத்தின் முன் மறியல் செய்ய நீங்கள் அனுமதி கொடுத்துள்ளீர்கள். வேறு வார்த்தைகளில் கூறினால் நீங்களும் உங்களது பொலீசும் எழுத்துமூலம், மற்றும் செயல்மூலம் எதைக்கூற முயற்சிக்கின்றீர்கள் என்றால், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி, அது இலங்கையில் உள்ள தனது தோழமைக்கட்சியின் பாதுகாப்பிற்காக இலங்கைத் தூதரகத்தின் முன் மறியல் செய்யும் உரிமையைப் பயன்படுத்துமாயின், அது "கிரிமினல் சட்டத்தின் கீழ் குற்றங்களைக் கவரும்" என்பதையே. ஆனால் அதேநேரத்தில் உங்களது சக முதலாளித்துவ வகுப்புவாதக் கட்சிகளுக்கு அதே இலங்கைத் தூதுவரகத்தின் முன்னால் அக்கட்சிகளுக்கு உங்களால் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது உங்களது வார்த்தைப்படி அது எந்தவிதத்திலும் "கிரிமினல் சட்டத்தின் கீழ் குற்றங்களைக் கவராது" என்று அர்த்தமாகிறது.



அது எதை அர்த்தப்படுத்துகின்றது என்றால், நீங்கள் உங்களது முதலாளித்துவ வர்க்கத்தை, மற்றும் முதலாளித்துவக் கட்சிகளை அவை மறியல் செய்யும் உரிமையை செயலிற் பயன்படுத்த மட்டுமல்லாது, அவை மறியல் செய்வதற்கு முன்னர், ஆர்ப்பாட்டம் செய்யும் மற்றும் கூட்டங்கள் நடத்தும் உரிமையை கூட பயன்படுத்த இடமளிப்பீர்கள் என்பதையே ஆகும். ஆனால் தொழிலாளர் வர்க்கம் மற்றும் அதன் கட்சியான சோசலிசத் தொழிலாளர் கழகம், அவை இலங்கைத் தூதரகத்தின் முன்னால் மறியல் செய்ய உங்களிடம் அனுமதி கோருவனவாயின் நீங்கள் உடனே அனுமதியை நிராகரிப்பதோடு, சோசலிசத் தொழிலாளர் கழகம் மற்றும் தொழிலாளர்வர்க்கம் மட்டும் மறியல் செய்தால் அச்செயல் "கிரிமினல் சட்டத்தின் கீழ் குற்றங்களைக் கவரும்" என்று மிரட்டும் உங்களதுஉ கட்டளை உங்களது கிரிமினல் சட்டங்களின் வர்க்க தன்மையை வெளிப்படுத்துகின்றது.



நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துடன் சோசலிசத் தொழிலாளர் கழகம் நெருக்கமாக உழைத்து வருவது உங்களது அரசாங்கத்திற்கு நன்கு தெரியும். இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் இனவெறி அரசியலுக்கு எதிராக கொள்கை மாறாது பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தின் அடிப்படையில் தொடர்ந்து போராடி வந்த பெருமை மிக்க வரலாறு தான் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் வரலாறு. அது இந்திய உபகண்டத்தின் தொழிலாளர் வர்க்கத்தை உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியாக கொழும்பு அரசாங்கத்தின் சிங்கள இனவெறிக்கு எதிராகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு எதிராக ஐக்கியப்படுத்த சோசலிசத் தொழிலாளர் கழகத்தோடு ஒத்துழைத்து வருகின்றது. வடகிழக்கிலிருந்து இலங்கைத் துருப்புகளை வாபஸ் வாங்க புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் போராடி வருகின்றது. அது தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்துவரும் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக சந்திரிக்கா குமாரதுங்காவின் மக்கள் கூட்டணி அரசாங்கம் தொடுத்துவரும் இனவாத யுத்தத்தின் அச்சம் தரும் விளைபயன்களை அம்பலப்படுத்தப் போராடுகின்றது. முழுமையாக இக்காரணங்களினாலேயே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், பாசிஸ்டுகளால் மற்றும் அரச படைகளால் தாக்கப்பட்டது.



இலங்கை விமானப்படை விமானங்கள் யாழ்பாணத்தில் நூற்றுக் கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேல் தாறுமாறாகக் குண்டுகள் போடுவதற்கு எதிராக தமிழீழப் போராட்டத்தை நசுக்க இந்திய முதலாளித்துவம் தனது துருப்புகளை அனுப்பியதற்கான்ன வர்க்க தேவைகளை மூடிமறைக்க நீங்கள் 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன்பும், பின்பும் முதலைக்கண்ணீர் விட்டீர்கள். ஆனால் இம்முறை நீங்கள் அந்த முதலைக்கண்ணீரைக் கூட விடவில்லை. இது பொதுவாக இந்திய முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிராகவும், குறிப்பாக உங்களது அ...தி.மு.. அரசாங்கத்திற்கு எதிராகவும் வெறுப்பு உண்டாக்குகின்ற நீங்காப்பழியைச் சுமத்தியுள்ளது. இன்று தமிழ்ச் சிறுபான்மையினருக்கு எதிராகக் கொழும்பு அரசாங்கம் இனவாத யுத்தத்தை தொடுத்து வருகின்றது. அதேநேரத்தில் அது பத்திரிகைச் சுதந்திரத்தை ஒடுக்குகின்றது. தொழிலாளர்களை மற்றும் தென்னிலங்கையின் இரணவிலவில் உள்ள அமெரிக்க தளத்தை எதிர்ப்பவர்களை அது சுட்டுப் பொசுக்குகின்றது. இவை அனைத்தையும் நீங்கள் முழுமையாக உள்ளம் உவர்ந்து ஆதரிக்கின்றீர்கள்.



நீங்கள் கொழும்பு அரசாங்கத்திற்கு அளிக்கும் ஆதரவு பொதுவாக முதலாளித்துவ வர்க்கத்தின் வர்க்க நலன்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில் அது இந்திய மூலதனம் இலங்கையில் செய்துள்ள முதலீடுகள் மற்றும் இந்திய ஏற்றுமதிக் கம்பனிகள் இலங்கையுடன் நடத்தும் வர்த்தகம் முதலியவற்றைப் பாதுகாக்கும் நோக்கினைக் குறிப்பாகக் கொண்டுள்ளது. இந்த நலன்களைத் தான் நீங்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றீர்கள், பாதுகாக்கின்றீர்கள். இலங்கையின் இனவாதயுத்தத்திலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்களை நீங்கள் அரசியல் கைதிகளாகப் பல பாதுகாப்பு முகாம்களில் சிறைப்படுத்தி துன்புறுத்தி வருகின்றீர்கள். இவர்களைத் தவிர இலங்கையிலிருந்து இலட்சக்கணக்கான தமிழீழ அகதிகள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். இவர்களுக்குத் தேவையான மிகவும் அடிப்படையான உ..., மருத்துவ, கல்வி, கலாச்சார மற்றும் வீட்டுவசதிகளைக் கூட நீங்கள் மறுத்து வருகின்றீர்கள். இந்தியப் பேரின வெறியின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் விரோத பிரச்சாரத்தை உண்மையில் தமிழீழத் தமிழர் விரோத பிரச்சாரத்தை நீங்கள் தொடுத்து வருகின்றீர்கள். இது வேறொன்றும் அல்ல. இந்தியாவில் … தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஒடுக்கப்படும் … மக்கள் சிறீலங்காவில் மற்றும் தமிழீழத்தில் … தமது வர்க்க சகோதரர்களுடன், சகோதரிகளுடன் கொண்டுள்ள வர்க்க ஐக்கியத்தை உடைப்பதற்கு இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் மற்றும் … திராவிடப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி... மேற்கொண்டுள்ள ஆற்றொணாத மற்றும் வெறுக்கத்தக்க முயற்சியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் என்றழைக்கப்படும் "அபாயத்தை" எதிர்த்துப் போ... என்ற கந்தலாய்ப்போன மூடுதிரையின் கீழ் அதி... ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் வாகனங்கள் வாங்கி மாநிலப் பொலிசை உங்களது அரசாங்கம் நவீனமயமாக்கியுள்ளது. அதோடு அது பெரும்படையை மேலும் "நவீனமயமாக்க" பெரும் நிதியை டில்லியிடம் கோரியுள்ளது. இது … எதற்குமல்ல, ஏனைய மாநில அரசாங்கங்களுடன் போட்டிபோட்டு ஏகாதிபத்திய நாடு கடந்த கம்பனிகளுக்கு அதிமலிவான கூலிஉழைப்பை வழங்க இந்த அதிநவீனமயமாக்கப்பட்ட பெரும்படையைத் தமிழ்நாட்டின் தொழிலாள வர்க்கத்திற்கு மற்றும் ஒடுக்கப்படும் பரந்த மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கே ஆகும்.



சோசலிசத் தொழிலாளர் கழகமும் … உலகக் கட்சியான அனைத்துலகக் குழுவினால் வழிநடாத்தப்படும் நான்காம் அகிலமும் தமிழீழ விடுதலைப்புலிகள் சம்பந்தமாகக் கொண்டுள்ள நிலைப்பாட்டை நாம் தெளிவாக மற்றும் வெளிப்படையாக கூற விரும்புகின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு முதலாளித்துவ தேசியவாத இயக்கம் என்று கருதுவதை இ... சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஒடுக்கப்படும் தமிழ் மக்களை, தமிழீழ விடுதலைப் புலிகள் முதலாளித்துவ தேசியவாத வேலைத்திட்டத்திற்கு எதிராக, நமது பாட்டாளிவர்க்க சர்வதேச ம... சர்வதேச சோசலிசப் பதாகையின் கீழ் அணித்திரட்ட நாம் போராடி வருகின்றோம்.



சோசலிசத் தொழிலாளர் கழகம் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தோழர்களுக்கு எதிரான பாசிச மற்றும் அரச தாக்குதலை எதிர்த்து இந்திய தொழிலாள வர்க்கத்தின் மத்தியிலும், ஒடுக்கப்படும் பரந்த மக்கள் மத்தியிலும் தனது அரசியல் பிரச்சார இயக்கத்தை மேலும் அதிகப்படுத்தும். … பேச்சுரிமை, பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் … செய்யும் உரிமை ஆகியவற்றிற்கு எதிராக உங்கள் அரசாங்கத்தின், பொலீசின் எந்த ஒரு அத்துமீறல் எவ்விதத்திலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்பதை நீங்கள் எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி நம்பி இருக்கலாம்.



அருண்குமார்

தேசிய செயலாளர்,

சோசலிசத் தொழிலாளர் கழகம்