"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Friday, November 23, 2018

இந்திய வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்


Thozhilalar Paathai Volume 448 (File no 011)
May 1994

மே 11ம் திகதி இந்திய வங்கி ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தத்தினால் அகில இந்தியா பூராவும் வங்கித்துறை ஸ்திம்பித்தது. வங்கிகள் தனியார்மயமாக்கத்தை எதிர்த்தும், சம்பள உயர்வு கோரியும் இந்த வேலைநிறுத்தம் இடம் பெற்றது.

இந்திய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் சமீபத்தில் சமர்பித்த வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ட்ரான்ஸ்நஷனல் கம்பனிகள் இந்தியாவினுள் பரந்த அளவிலான முதலீடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதோடு மிகவும் குறைந்த மட்டச் சம்பளத்தில் உழைப்பைச் சுரண்டுவதற்கான வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஓர் அங்கமாக வங்கிகள் தனியார்மயமாக்கத்தில் நரசிம்மராவ் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தினை உலகச் சந்தைக்குத் திறந்து விடுவதானது தேசியக் கைத்தொழில்களில் வேலை செய்யும் இலட்சோப லட்சம் தொழிலாளர்களை வேலையற்றோர் படையில் தள்ளும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நெய்யப்பட்ட நூல் இறக்குமதி மீதான சுங்க வரி தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து குஜராத், டட்ரா, நாகாகாஸ் போன்ற இடங்களில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் மார்ச் 3ம் திகதியில் இருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கியது தெரிந்ததே.

No comments:

Post a Comment