"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Thursday, June 9, 2016

இந்தியத் தேர்தலில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் - இந்திய சோ.தொ.க. தேர்தல் விஞ்ஞாபனம்


இதழ் 470, 1996 மே 31

நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவுடன் ஐக்கியம் பூண்ட இந்திய ட்ரொட்ஸ்கிசக் கட்சியான சோசலிசத் தொழிலாளர் கழகம் இந்தியப் பொதுத் தேர்தலில் ஒரு சோசலிசப் பதிலீட்டுக்காகப் போராட மூன்று வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஜோற்றன் றோயும் கே. பழனியும் முறையே கல்கத்தாவிலும் வட சென்னையிலும் லோக்சபாவுக்குப் போட்டியிடுகின்றார்கள். எம். கைலாசம் சென்னை-வில்லிவாக்கம் தொகுதியில் தமிழ்நாடு சட்டசபைக்குப் போட்டியிடுகின்றார்.

இந்தப் பொதுத் தேர்தல் சமூகத் துருவப்படுத்தலும் வேலையில்லாத் திண்டாட்டமும் உக்கிரம் கண்டுள்ள நிலையில் நடைபெறுகின்றது. கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்திய முதலாளித்துவத்தின் மைய ஆணியாக விளங்கிய காங்கிரஸ் கட்சி ஆழமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. 74 வயது நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசாங்கத் துறைத் தொழில்களை வெட்டிச் சரித்துள்ளது. அரசுடமைக் கைத்தொழில்களை தனியார்மயமாக்கியுள்ளது. விவசாயிகளுக்கான அரசாங்க மானியங்களில் பெரும் வெட்டு இடம் பெற்றுள்ளது. இது இலட்சக் கணக்கான ஏழை விவசாயிகளை வறுமையினதும் பட்டினியினதும் கொடும் பிடிக்குள் தள்ளியுள்ளது.

பூகோளமயமான முதலாளித்துவ உற்பத்தியின் எதிரில் காங்கிரஸ் கட்சி அதன் பாரம்பரியமான தேசியவாத சுயபூர்த்திக் கொள்கைகளைக் கைவிட்டுள்ளது. பொருளாதாரத்தை ட்ரான்ஸ்நஷனல் கூட்டுத்தாபனங்கள் சுரண்டுவதற்குத் திறந்துவிட்டுள்ளது. அவ்வாறே பல்வேறு ஸ்டாலினிசக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தொழில்களையும் வாழ்க்கை நிலைமைகளையும் ஒழிப்பதை அங்கீகரித்துள்ளன. சோசலிசத் தொழிலாளர் கழகம் அதனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மூன்று முதலாளித்துவ முன்னணிகளையும்--காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி, தேசியவாத-இடதுசாரி முன்னணி—நிராகரிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தேசிய முன்னணி-இடதுசாரி முன்னணி எனப்படுவது ஸ்டாலினிஸ்டுகளுக்கும் பல்வேறு பிராந்தியக் கட்சிகளுக்கும் ஜனதாக் கட்சிக்கும் இடையேயான ஒரு கூட்டாகும்.

இந்தச் சகல கட்சிகளும் இந்தியாவில் இருந்து வரும் வறுமையை ஆதரிக்கின்றன. இந்தியாவில் எந்தக் கோஷ்டி அடுத்த அரசாங்கத்தை அமைத்தாலும் அது இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தாக்குதலை நடாத்துவது உறுதி.

ஊழல்

இன்றைய பொதுத் தேர்தல் 115 அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் 43 மில்லியன் ரூபாக்களை 1989க்கும் 1991க்கும் இடையே இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒரு நிலையில் நடைபெறுகின்றது. இதில் ஏழு காங்கிரஸ் அமைச்சர்கள், பாரதீய ஜனதாக் கட்சியின் சிரேட்ட புள்ளிகள் ஆகியோர் அடங்குவர். காங்கிரசின் பேரிலான ஆழமான எதிர்ப்பும் இந்திய பாராளுமன்ற அரசியல் முறையுடனான வெறுப்பும் பாரதீய ஜனதாக் கட்சியினாலும் மற்றும் இனவாதக் கட்சிகளினாலும் இந்து சோவினிச, பிரிவினைத் திசைகளில் திசை திருப்பப்பட்டுள்ளது.

சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் இந்த பிற்போக்கு அணிதிரள்விற்கு ஸ்டாலினிசக் கட்சிகளே முக்கிய காரணம் எனச் சுட்டிக் காட்டியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜோதிபாசு தலைமையிலான ஒரு இடதுசாரி முன்னணி மூலம் ஆட்சி செலுத்துகின்றது. இவரே இன்றைய தேசிய முன்னணி-இடதுசாரி முன்னணியின் தலைவர். இவரது ஆட்சி தொழிலாளர்களுக்கு எதிராக முறைமுறையான தாக்குதல்களை நடாத்தி உள்ளது. இதனது புதிய கைத்தொழில் கொள்கையின் கீழ் 28 அரச உடமை கைத்தொழில்கள் மூடப்பட்டுள்ளதோடு 140000 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய தொழிற்சங்க சம்மேளனத்தின் உதவியுடன் ஜோதிபாசு அரசாங்கம் ரெலனிபாராவில் வேலைநிறுத்தம் செய்த சணல் ஆலைத் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸ் படையைத் திரட்டியது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கோலார் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் இந்திய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர்களால் தாக்கப்பட்டனர். இதில் பொலிஸ் படையும் சேர்ந்து கொண்டது. ஜோதிபாசு தமது சமீபத்திய அமெரிக்க விஜயத்தின் போது இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொருளாதாச் சீர்திருத்தங்கள் அரசாங்க மாற்றத்தினால் பாதிக்கப்பட்டு விடாது என உத்தரவாதமளித்தார்.

சகல வகையறாவைச் சேர்ந்த தேசியவாதங்களையும் பிரிவினைவாதங்களையும் நிராகரிக்கையில் சோ.தொ.. தேர்தல் விஞ்ஞாபனம் கூறுவதாவது: … சோசலிசத் தொழிலாளர் கழகம் அனைத்துவிதமான தேசியவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் நிராகரிக்கின்றது. இந்தியாவிலுள்ள தொழிலாளர்களுக்கும் சர்வதேச ரீதியாக உள்ள அவர்களது வர்க்க சகோதரர்களுக்கு இடையிலும் இந்தியாவிலுள்ள தொழிலாளர்களுக்கும் சர்வதேச ரீதியாக உள்ள அவர்களது வர்க்க சகோதரர்களுக்கு இடையிலும் இந்தியாவினுள் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ மற்றும் பல்வேறு மொழிகள் பேசும் தொழிலாளர்களுக்கு இடையிலும் பகைமையை தூண்டிவிடும் அனைத்து முயற்சிகளையும் எதிர்க்கின்றது.

பாகிஸ்தான், நேபாளம், இலங்கை போன்ற அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ள அகிதகள் குடிபெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்று நடாத்தப்படும் தேசியவெறிப் பிரச்சாரத்தை சோசலிசத் தொழிலாளர் கழகம் வன்மையாக எதிர்க்கின்றது.”

காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான முன்னோக்கு இலாப முறையை ஒழிக்கும் ஒரு தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை அமைக்கும் சோசலிச வலைத்திட்டத்துக்கான ஒரு போராட்டத்தின் மூலம் மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட முடியும். சோ.தொ.. வேட்பாளர்கள் கைத்தொழில் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் இடையே ஒரு புரட்சிகரக் கூட்டுக்கு அழைப்பு விடுக்கின்றனர். அதன் மூலம் சமூக சமத்துவத்துக்கும் அனைத்து ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கும் போராட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கட்சியின் வேலைத்திட்டம் கண்ணியமான தொழில், வீட்டு வசதி, சகலருக்கும் கல்வி, சுகாதார வசதி, சகல அரசியல் கைதிகளுக்கும் விடுதலை, மரண தண்டனையை ஒழித்தல், மகளிருக்கு எதிரான சகல பாகுபாடுகளையும் ஒழித்தல், வெளிநாட்டு தொழிலாளருக்கும் அகதிகளுக்கும் எதிராக நெறிப்படுத்தப்பட்டுள்ள சகல சட்டங்களையும் நீக்குதல் என்பவற்றை உள்ளடக்கிக் கொண்டுள்ளது.

சோ.தொ.. மதச் சிறுபான்மையினருக்கு எதிரான சகல அரச இடர்பாடுகளுக்கும் முடிவு கட்டுப்டியும் காஷ்மீர், பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து இந்திய இராணுவத்தை நிபந்தனையின்றி உடனடியாக வாபஸ் பெறும்படியும் கோருகின்றது.

தேசிய ஒடுக்குமுறைக்கு முதலாளித்துவத்தை ஒழித்துக் கொட்ட நடாத்தும் ஒரு போராட்டத்தின் மூலமே முடிவு கட்டமுடியும் என்பதை அங்கீகரிப்பதன் அடிப்படையில் சோ.தொ.. வேட்பாளர்கள் இந்திய முதலாளித்துவ அரசையும் பிரிவினைவாதத்தையும் எதிர்க்கிறார்கள். அவர்கள் ஒரு இந்தியத் துணைக்கண்ட ஐக்கிய சோசலிச அரசை அமைக்கப் போராடுகின்றார்கள்.

Wednesday, June 8, 2016

இந்திய ட்ரொட்ஸ்கிச சோசலிச தொழிலாளர் கழகம் ஆதரவு


இதழ் 439, 1993 ஆகஸ்ட் 18
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட

சோசலிசத் தொழிலாளர் கழகம்
87, 2வது மாடி,
நாராயண் மஸ்திரி வீதி,
ஒட்டேரி, சென்னை.
1993 ஜூலை 24

விலானி பீரிஸ்,
தலைவி,
சுயாதீனத் தொழிலாளர் விசாரணைக் குழு,
90, 1வது மாளிகாகந்த ஒழுங்கை,
கொழும்பு - 10, இலங்கை.

அன்பின் தோழி,

பிரேமலால் ஜயக்கொடியின் மரணம் பற்றியும் சுதந்திர வர்த்தக வலயத்தின் சேவை நிலைமைகள் பற்றியும் ஆராயும் தொழிலாளர் விசாரணைக் குழு 1993 ஜூலை 25ம் திகதி கூடுவதாக பு... பொதுச் செயலாளர் தோழர் விஜே டயசிடம் அறிந்தோம்.

துக்கத்தில் ஆழ்ந்த ஜயக்கொடியின் குடும்பத்தினருக்கும், தாம் சேவை செய்து வந்த 5 தொன் எடை கொண்ட நெரிக்கும் இயந்திரத்தினுள் நசுங்குண்டு ஜயக்கொடி இறந்து போகும் வரை அவருடன் ஒன்றாக சேவை செய்த கொரியா-சிலோன் பாதணி கம்பனியின் தொழிலாளர்களுக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட இந்திய டிரொட்ஸ்கிச சோசலிசத் தொழிலாளர் கழகம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. உங்களின் விசாரணைக் கமிட்டிக்கு ஆதரவு தர சோசலிசத் தொழிலாளர் கழகம், இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் உள்ளே பிரச்சார இயக்கத்தினைத் தொடுக்க உறுதி பூண்கிறது.

தோழமையுடன்
அருண்குமார்
பொதுச் செயலாளர்,
சோசலிசத் தொழிலாளர் கழகம்

சோசிசத் தொழிலாளர் கழக உறுப்பினர் மேலான போலீசாரின் பொய் வழக்கையும் தொந்தரவுகளையும் உடனே நிறுத்து!

Thozhilalar Pathai Volume 039
June 1991

சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் உறுப்பினர்கள், தேர்தல் வேட்பாளர்களை போலீஸ் இலாகாவை சேர்ந்தவர்கள் தொந்தரவு செய்வதை உடனடியாக நிறுத்தும்படி கோர நாம் இக்கடிதத்தை எழுதுகின்றோம்.

சோசலிசத் தொழிலாளர் கழகம் (Socialist Labour League) ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் இயக்கமும், இந்தியாவிலுள்ள டிரொட்ஸ்கிச அமைப்புமாகும். இலங்கையில் அரசு ஒடுக்குமுறைக்கு எதிராக நடைபெற்ற ஒரு கூட்டத்தில் சோ.தொ.. (SLL-India) வின் உறுப்பினர் ஒருவர் பேசிய பின்னரே இது தொடங்கியது.

  1. ஏப்ரல் 25, பிற்பகல் 4 மணிக்கு சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் அலுவலகத்திற்கு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து குருசாமி என்று தன்னை அடையாளம் காட்டிய அதிகாரி ஒருவர் விஜயம் செய்தார். அவர் சோ.தொ.. வின் முன்னணி உறுப்பினரும், அதன் மாத இதழான 'தொழிலாள பாதை' ஆசிரிய குழுவின் உறுப்பினருமான S. ராமை விசாரிக்க விரும்புவதாக கூறினார்.
போலீஸ் இலாகாவினால் S. ராமை விசாரணை செய்யவும், கேள்விகள் கேட்கவும் எடுக்கும் முயற்சிகள் S. ராம் ஏதோ குற்றம் செய்துவிட்டார் என்பதால் அல்ல, இது "இலங்கையில் நாட்டுப்புற படுகொலையும், இனவாத யுத்தமும்—பின்னனணியும் தீர்வும்" என்ற தலைப்பில் S. ராம் ஒரு சொற்பொழிவை நிகழ்த்திய பின்னர் தொடங்கப்பட்டது. இந்த சொற்பொழிவு ஏப்ரல் 23ல், அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலகக் கட்டிடத்தில் சமூக அறிவியல் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

சட்டரீதியாகவும், ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவும் செயற்படும் எமது அமைப்பின் உறுப்பினர்களின் அரசியல் மற்றும் ஜீவாதார உரிமைகள் மீது நியாயமற்ற முறையிலும் சட்டவிரோதமாகவும் மேற்குறிப்பிட்ட விசாரணைகளும் கேள்விகள் கேட்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சோ.தொ.. (SLL-India) இன் உரிமையுள்ள, சட்டரீதியான வேலைகளில் அதன் கொள்கைகளையும், வேலைத்திட்டகளையும் விளக்கி பிரச்சாரம் செய்வதையும், அதே போல் வட சென்னை பாராளுமன்ற தொகுதிக்கும், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கும் நிறுத்தப்பட்டுள்ள அதன் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வதிலும் தலையீடு செய்வதாக உள்ளது.

  1. மே, 12 ல் மேலே குறிப்பிட்ட குருசாமி என்ற போலீஸ் அதிகாரி, வட சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு சோ.தொ.. யின் வேட்பாளரும் பி அண்டு சி மில் தொழிலாளியுமான P. மோசஸின் உறவினர்கள் வீடுகளுக்கும் விஜயம் செய்து மோசஸின் கடந்த காலம் பற்றியும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும், அவரது அரசியல் வேலை பற்றியும் விசாரணைகள் நடத்தியுள்ளார்.

அதே நாள் 5 மணிக்கு, பி அண்டு சி. மில் தொழிலாளர்களின் பெரம்பூர் பேரக்ஸ் குடியிருப்பு வாசலில் அதே போலீஸ் அதிகாரி குருசாமி மோசசை சந்தித்து சோ.தொ.. வின் இதர உறுப்பினர்கள் பற்றியும், சோ.தொ.க பஸ் வேலை நிறுத்தத்தில் தலையீடு செய்கின்றதா என்பது பற்றியும் கேள்விகள் கேட்டார்.

  1. மே 16ல் திருமங்கலம் போலீஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட அண்ணாநகர் மேற்கு விஷேச போலீஸ் பிரிவைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் சிவலிங்கம் (பி.சி. 2179), வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு சோ.தொ..வின் வேட்பாளரும் ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிற்சங்கத்தின் முன்னாள் கமிட்டி உறுப்பினருமான எம். கைலாசத்தின் வீட்டுக்கு காலையும், மாலையும் இரு தடவைகள் விஜயம் செய்திருந்தார். பின்னர் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் வந்து தன்னை தொடர்பு கொள்ளும் படி கைலாசத்திற்கு ஒரு செய்தியை அவரது வீட்டில் விட்டுச் சென்றார்.
  2. S. ராமுக்கு எதிராக புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் ஒரு பொய் வழக்கை தொடர்ந்துள்ளனர். டிசம்பர் 13, 1990ல் பி & சி மில் தொழிலாளர்களின் வாயில் கூட்டம் சென்னை தொழிலாளர் சங்கத்தினால் நடத்தப்பட்டது. அதற்கு தற்போது தலைவராக இருப்பவர் சி.பி.. (எம்) தொழிற்சங்கத் தலைவரே, 1989 சங்கத்தேர்தலில் வரதராஜனுக்கு எதிராக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட S. ராம் சோ.தொ..வின் பத்திரிகையான "தொழிலாள பாதை"க்கு செய்தி திரட்டுவதற்காக அக்கூட்டத்தில் பங்கு கொண்டார். அப்போது வரதராஜனால் வெளியேயிருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 30 குண்டர்கள் சிபிஐ (எம்) உறுப்பினரும் எம்.எல்.யு.வின் கமிட்டி உறுப்பினருமான குமரேசனின் தலைமையில் S ராம் மேல் ஒரு கொலைவெறி தாக்குதலை நடத்தினார்.

    இந்த தாக்குதல் நடந்த போது பக்கத்திலுள்ள புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ் அங்கே நின்றது. அவர்கள் கொலை வெறித்ததாக்குதல் நடத்திய குண்டர்களையோ அல்லது அவர்களுக்கு தலைமை தாங்கிய குமரேசனையோ கைது செய்யவில்லை. ஆனால் கூட்டத்தின் ஓரமாக நின்று கவனித்துக் கொண்டு நின்றவரும் குண்டர்களினால் தாக்கப்பட்டவருமான S. ராமை கைது செய்தனர். அவர்கள் S. ராமை கைது செய்ததுடன் நிறுத்தவில்லை. ஒருபடி மேலே சென்று அவருக்கு எதிராக இ.பி.கோ. வின் 75 வது பிரிவின்கீழ் எழும்பூர் பெருநகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த சம்பவம் சம்பந்தமாக, நாம் கோருவது உடனடியாக இந்த பொய் வழங்கை வாபஸ் பெறப்பட வேண்டும். போலீசார் தகுந்த விசாரணை நடத்தி S. ராமை தாக்கியவர்களை கைது செய்து அவர்கள் செய்த குற்றத்துக்கு அவர்கள் மேல் வழக்குத் தொடர வேண்டும்.

    இங்ஙனம்
    P.மோசஸ்

    (
    சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் சார்பில்)சோசலிசத் தொழிலாளர் கழக உறுப்பினர்கள் மேல் பொய் வழக்குகள் தொடுப்பதையும், அதன் அரசியலாளர்கள் மீது தாக்குதல் செய்வதையும் கண்டனம் செய்து தொழிற்சங்கங்களிலும், தொழிலாளர் வர்க்க அமைப்புகளிலும் கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றி இன்ஸ்பெக்டர் ஜெனரல் சப் போலீஸ் அலுவலகத்திற்கும் அதன் பிரதி ஒன்றை சோசலிசத் தொழிலாளர் கழகம், தபால் பெட்டி எண் 968, பெரம்பூர் பாரக்ஸ், சென்னை - 12 என்ற முகவரிக்கு அனுப்பும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.)

Sunday, June 5, 2016

European Workers Conference of the Fourth International


A letter from the Socialist Labour League in India was read out to the meeting. It emphasized the historical importance of the European conference and described the betrayals of the various currents of Stalinism in India and spoke of the importance of the fight for the united front by the RCL in Sri Lanka. [Reference: Defending Principles: The Political Legacy of Bill Brust, by Bill Brust, Pg. no. 238]

From the Socialist Labour League, India

To comrades Bill and Jean Brust, 

Dear Comrades,


We, the Indian Trotskyists working in Calcutta, were seriously worried to learn about the illness of Comrade Bill Brust through the Bulletin of May 19, 1991, and we earnestly hope that our beloved comrade will come around very soon to carry on his glorious revolutionary activities of giving leadership to the Fourth International.

We are deeply inspired by your invaluable contribution to the world Trotskyist movement, of you both, Comrades Bill and Jean. We read the Bulletin report on the tribute paid at the YS conference to your lifelong contribution, just as we taking the first steps of forming a branch of the SLL here, and it reminded us how much your contribution lives within the successes and the growth of the ICFI. We shall, as members of the Socialist Labour League of India, carry forward this work under the banner of the ICFI, along with all other comrades of the Workers League and all comrades throughout the world.
 
Wishing you a quick recovery, Comrade Bill, and extending our solidarity in the moment of your anxiety and strain, Comrade Jean.


With revolutionary greetings.


Yours fraternally,
DJM, KGD, AW
West Bengal, Indian


June 3, 1991


[Reference: Defending Principles: The Political Legacy of Bill Brust, by Bill Brust, Pg. no. 255.]