"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Monday, December 17, 2018

சிறிலங்கா டிராட்ஸ்கிஸ்டுகளின் மீது கை வைக்காதே!


Thozhilalar Paathai Volume 025
September 1989

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் இலங்கை பகுதியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மீது சிறிலங்காவின் வலதுசாரி பிரேமதாசா ஆட்சியின் ... சோசலிசத் தொழிலாளர் கழகம் வன்மையாக கண்டினம் செய்கிறது. இந்த தாக்குதல்களை கண்டிக்கும்படியும், ராணுவத்தால் கைது செய்யப்பட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தோழர்களை உடனே விடுதலை செய்ய கோரும்படியும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நாம் அழைக்கிறோம்.

 
செப்டம்பர் 6ம்தேதி மாலை 6.30 மணிக்கு ராணுவத்தினர் புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் அச்சக கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அவர்களால் அங்கு யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின்பு பு... வின் தலைமையகத்திற்கு சென்றனர். அங்கே அவர்கள் பு...வின் வார இதழான 'கம்கறு மாவத்த' (தொழிலாளர் பாதை) பத்திரிகையின் ஆசிரியர் ஆனந்தவக்கும் புறவை தேடுவதாக கூறினர். அப்போது தலைமையகத்தில் இருந்த பு...வின் அரசியல் குழு உறுப்பினர் தோழர் W. சுனில் மற்றும் தோழர் அஜித்தையும் ராணுவத்தினர் கைது செய்து சென்றர். இதுவரை அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியாது.

மறுநாள் மதியம் 2 மணிக்கு மீண்டும் ராணுவத்தினர் பு...வின் தலைமையகத்திற்கு வந்து மேலும் மூன்று பு... உறுப்பினர்களை தாம் தேடுவதாக கூறினர். அந்தப்பட்டியலில் பு...வின் பொதுச்செயலாளர் தோழர் விஜே டயஸ் பெயரும், உள்ளடக்கப்பட்டிருந்தது. அவர்கள் தேடிய 3 பேரையும் அங்கு கண்டுபிடிக்க முடியாத நிலையில் அப்போது அலுவலகத்தில் இருந்த இரண்டு தோழர்களை கோரமாக ராணுவத்தினர் தாக்கிவிட்டுச் சென்றனர்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மீது பிரேமதாசா ஆட்சி தாக்குதல்களை உக்கிரப்படுத்தியிருக்கும் இந்த வேளையில், அந்நாட்டில் உள்நாட்டு யுத்தம் வளர்ச்சி அடைந்து வரும் சூழ்நிலைமையில் சர்வகட்சி மாநாட்டில் பங்கு பெறும்படி ஜே.வி.பி. பாசிஸ்டுகளுக்கு பிரேமதாசா அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா அரசின் படைகளுக்கு எதிராகவும் ஜேவிபி பாசிஸ்டுகளுக்கு எதிராகவும் இலங்கைத் தொழிலாள வர்க்கத்தைப் பேண, தொழிலாளர்களின் ஐக்கிய முன்னணி அமைக்க என்ற பிரச்சாரத்தையும், சுதந்திரமான தொழிலாளர் பாதுகாப்பு படைகள் அமைக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்திருப்பது சிறிலங்கா முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு மரணபீதியை உண்டு பண்ணியதாலேயே இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் அடிப்படையில் தமிழ்ஈழத் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து, தமிழ்ஈழ மற்றும் சிறிலங்காவின் ஐக்கிய சோசலிசக் குடியரசுகளை அமைக்கவே பு... போராடுகிறது.

Monday, November 26, 2018

பி அண்டு சி ஆலையில், உடையாரின் 21 கோரிக்கைகளை, கதவடைப்பு திட்டத்தை உடைத்தெறிய உள்ளிருப்பு வேலை நிறுத்தத்திற்காகப் போராடு!

இதற்கு ஆதரவாக, சி..டி.யு, ..டி.யு.சி. யை நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தில் இறக்கப் போராடு!

Thozhilalar Paathai Volume 025
September 1989

கடந்த 70 வருடங்களுக்கு மேலாக B & C தொழிலாளர்கள் போராடிப் பெற்ற அனைத்தையும் முற்றுமுழுதாக அழித்து ஒழிக்க, B & C ஆலையின் நிர்வாகம் B & C தொழிலாளர்களுக்கு அதன் 21 கோரிக்கைகளை சென்னைத் தொழிலாளர் சங்கத்தின் ஸ்டாலினிச W. R. வரதராஜன் மூலமாக சமர்பித்துள்ளது.

கடந்த ஆண்டின் 1 1/2 கோடி நஷ்டம் அடைந்த ஆலை நடப்பு ஆண்டில் 4 மடங்கு (6 கோடி) நஷ்டம் அடைந்துள்ளது... இந்த இழப்பை தடுத்து நிறுத்தாவிட்டால் "B & C யின் தொடர்ச்சியான ... மிக ஆபத்தான ... ஏற்படும்" என்று மீண்டும் 1984 ஐப் போலவும் ஸ்டாண்டர்டு மோட்டார்ஸைப் போலவும் கதவடைப்பு செய்வேன்! என்று மிரட்டுகிறது.

இந்த இழப்பிற்குக் காரணம் 1930களின் பெரும் பொருளாதார வீழ்ச்சிகளின் பின்பு ஏற்பட்ட மிகவும் பிரமாண்டமான பொருளாதார வீழ்ச்சிக்குள் உலக முதலாளித்துவம் மூழ்கிக் கொண்டிருப்பதாகும். ஐக்கிய நாடுகளின் அமைப்பான உங்டாட் (UNGTAD) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 1989-90 களில் உலகப் பொருளாதாரம் குன்ற ஆரம்பித்துள்ளது மட்டுமல்லாது, இன்று முன்னேற்றமடைந்த நாடுகளுக்கு அது மிக குறிப்பிடத்தகுந்தவாறு உள்ளது. உலக சந்தையில் முன்னேற்றமடைந்த முதலாளித்துவ நாடுகளுக்கு அமெரிக்கா ஜப்பான், ஐரோப்பாவுக்கு இடையில் நடக்கும் தீவிர வர்த்தகப் போட்டியில் இந்தியா போன்ற பின்னடைந்த நாடுகள் மேலும் மேலும் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா குறிப்பாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலின் கீழ் 1980 இல் தொடங்கிய வி.பி.சிங்-ராஜீவ்காந்திகளின் புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் தளர்த்தல் கொள்கை, நவீனமயமாக்கல் என்ற கோஷங்களின் கீழ் ஏகாதிபத்திய நாடுகளுக்கு கதவுகளை திறந்து விட்டது, இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி பற்றாக்குறை கூடிக் கொண்டு வந்ததன் விளைவாக இந்தியாவின் அந்நியக் கடன் ... கோடி டாலர்களை எட்டியுள்ளது என உலக நிறுவனமான OECD அறிவித்துள்ளது. மேலும் உலக வர்த்தக சந்தையில் இந்தியாவின் பங்கு ஒரு சதத்திலிருந்து அரை சதமாக வீழ்ச்சியுள்ளது.

இவ்வாறான நிலைமையில் உலக சந்தையில் தனது துணிகளை விற்கும் பி அண்டு சி ஆலையின் "தொடர்ச்சியான இயக்கத்துக்கு நவீனமயமாக்கல் இன்றியமையாதது" (9வது கோரிக்கை) மட்டுமலாமல் வேலைப்பளு 88 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டுமென்றும் நிர்வாகம் கோரியுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்னர் 15 செப்டம்பர் 1988ல் சோசலிசத் தொழிலாளர் அணி B&C தொழிலாளர்களுக்கு எழுதிய பகிரங்க கடிதத்தில் "இன்று ஆக 7,000 பேர் அளவில் உள்ள நிலையில் மேலும் 2,000 தொழிலாளர்களை வேலையிலிருந்து எடுத்து 5,000 க்கு உட்பட்ட எண்ணிக்கையுள்ள தொழிலாளர்களுடன் ஆலையை நடத்த சூழ்ச்சிகள் நடந்து வருவதை அநேக தொழிலாளர்கள் அறிந்திருப்பார்கள்,” என்று கூறிய எச்சரிக்கையை உறுதிப்படுத்துவது போல, 15... பேர் ஆள் குறைத்தல் (கோரிக்கை 1) மேலும் ஆட்களின் எண்ணிக்கை வல்லுநர் குழுவின் மூலம் ஆராயப்படும் (கோரிக்கை 3) என்றும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

72% இருந்த ரூட்டிஎபிசியன்சியும் 70% இருந்த நார்த்ராப் எபிசியன்சியும் முறையே 84%ம் 80%ம் ஆக்கப்பட்டு இப்போது முழு ஆலையிலும் 88% ஆக்கப்பட வேண்டும் என கோரியுள்ளது.

கோரிக்கை 4: இன்று ஆகஸ்ட் 1989ல் தொழிலாளர்கள் சராசரியாக 1170 ரூபா பெறுகிறார்கள். இதில் 850 ரூபா வெட்டப்பட்டு ஜூன் 1985 பஞ்சப்படி அளவிற்கு ஷீலிங் போடப்பட வேண்டுமாம்.

கோரிக்கை 5: முன்பு சம்பளம் தான் உற்பத்தியுடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது பஞ்சப்படியும் உற்பத்தியுடன் இணைக்கப்பட வேண்டுமென்று கோருவதுடன், தனியொரு தொழிலாளி பெரும் பஞ்சப்படி அவர் கொடுக்கும் உற்பத்தியுடன் மட்டுமல்லாது "டிபார்ட்மெண்டில் பணியாற்றும் எல்லா தொழிலாளர்களுக்கும் அங்கு எட்டப்படும் உற்பத்தித்திறன் விகிதத்தில் சம்பளமும், பஞ்சப்படியும் அளிக்கப்படும்" என கோரியுள்ளது.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மாத முடிவில் சம்பளம் கையில் ஏதும் கிடைக்காது ஆலைக்கு பாக்கியுடன், வெற்றிலையைப் போட்டுக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில், இனிமேல் எத்தனை தொழிலாளர்கள் மாதம் முடிவில் சம்பளத்தை கையில் பெறுவார்கள் என்பது கேள்விக்குறியாகும். அவர்களின் கம்பெனிஉப் பாக்கிக்காக, கொத்தடிமையாக ஆலையின் பெரும்பான்மையான தொழிலாளர்களை மாற்ற நிர்வாகம் முயற்சிக்கிறது.

கோரிக்கை 6: B&C தொழிலாளர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அந்தோணிப்பிள்ளை ட்ராட்ஸ்கிச நான்காம் அகிலத்தை விட்டு ஓடுவதற்கு முன்னர் டிராட்ஸ்கிச கொள்கைகளுக்கு B & C தொழிலாளர்களின் தலைமையில் நின்று போராடும் போது வென்றெடுத்த உரிமைகள், பின்பு குசேலரினாலும், “இந்திரா காங்கிரஸ் அந்தோணிப் பிள்ளையாலும், இவர்களுடன் கூட்டாக வி. பி. சிந்தனாலும் 1981ல் 6 மாத போராட்டத்திலும் 1984 இல் 11 மாத போராட்டத்திலும் காட்டிக் கொடுக்கப்பட்டு, இன்றும் எஞ்சியிருக்கும் இரவு ஷிப்ட் அலவன்ஸ், வார் புரடக்ஷன் அலவன்ஸ், தூய்மைப்படி, குறுகிய அவசர விடுப்பு, பனிக்கால விழுக்காடு போன்ற சிறப்புப்படிகள் மற்றும் சலுகைகள் ரத்துச் செய்யப்படுகின்றனவாம்.

கோரிக்கை 7: சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட விடுமுறைகளை தவிர தொழிலாளர்கள் போராடிப் பெற்ற விடுமுறைகள் அனைத்தும் ரத்தாகின்றன என்று நிர்வாகம் தனது கோரிக்கை வைப்பதற்கு முன்னரேயே, “ஆகஸ்ட் 15 சுதந்திர நாளை" நிர்வாகம் வேலை நாள் ஆக்கியது. இதற்கு பெயரளவில் கண்டனம் தெரிவித்துவிட்டு நடைமுறையில் சங்கத்தலைமை ஒத்துழைத்தது.

கோரிக்கை 9: உலக சந்தைக்கான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள B&C ஆலை, தொழிலாளர்களுக்கு எதிரான நவீனமயமாக்கல் என்ற திட்டத்தின் கீழ் மேலும் நடத்த இருக்கும் ஆட்குறைப்பு பணி ஒதுக்கீடு கடமைகள் வேலைகள் நிர்ணயம் செய்து சுரண்டலை 'அறிவியல்' அடிப்படையில் கூட்டுதவற்கும் முதலாளிகள் பெற்ற கடன் திருப்புதலுக்கும் மற்றும் வட்டி கட்டுதலுக்கும் ஏற்பட்டும் நிதிபளுவை நிர்வாகம் சமாளிப்பதற்காக 'தொழிலாளர்கள் கூடிய பொருளாதார உதவி' எதையும் கேட்கக்கூடாதாம்.

கோரிக்கை 12: வேலைபளுவைக் கூட்ட தேவைக்கேற்ப எந்திரங்களின் வேகத்தை திருத்தல் செய்வதில்" எந்திரத்தின் வேகத்தை முடுக்கி விடுவதற்கு "நிர்வாகத்திற்கு உரிமை" உண்டாம்; தொழிலாளர்களுக்கோ, சங்கத்துக்கோ, அதைத் தட்டிக் கேட்க உரிமை இல்லையாம். நிர்வாகம் தொழிலாளியை தன் இஷ்டப்படி ஒரு தொழிலிலிருந்து மற்றொரு தொழிலுக்கோ, ஒரு டிபார்ட்மென்டிலிருந்து மற்றொன்றுக்கோ, அல்லது B&C ஆலையிலிருந்து பங்களூர் மில்லுக்கோ மாற்றம் செய்யப்படுவதற்கு உரியவர்கள் ஆவார்களாம்.

கோரிக்கை 13: நிர்வாகத்தின் கெடுபிடியை கூட ஒவ்வொரு பிரிவு டிபார்ட்மெண்ட் நுழைவாயிலிலும் கார்டு பஞ்சிங் அமைப்பை அறிமுகப்படுத்தப் போகிறதாம்.

கோரிக்கைகள் 15, 16: நிர்வாகத்திற்கு ஜால்ரா போடுபவர்களுக்கு பதவி உயர்வுக்கும் 'காலியிடங்களை நிரப்பி' வேலைவாய்ப்பு அளிப்பதற்கும் 'தகுதி அடிப்படையில் பதவி உயர்வு' கொடுப்பதற்கும் 'காலி இடங்களை நிரப்புவதற்கும்" நிர்வாகத்திற்கு உரிமையாம்.

கேண்டீன் சாப்பாட்டை தொழிலாளியின் தலையில் கட்டி, அதற்கு வழங்க வேண்டிய மானியத்தை வெட்டி 'இனி அது தொழிலாளர்கள் கூட்டுறவு முறையில் சொசைட்டி முறையில் அமைக்கப்படும் சங்கமாக செயற்படுமாம்.

கோரிக்கை 20: தொழிலாளர்கள் இதுவரையில் வென்றெடுத்த கிரேடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு நெசவுத் தொழிலாளர்களுக்கு 1) ஆபரேடிவ் 2) ஆபரேடிவ் உதவியாளர்கள் என்ற இரு பதவிகளை கொண்டு வரப்போகிறார்களாம். “ஒரு குறிப்பிட்ட பணிபுரியும் தொழிலாளி ஆபரேடிவ் மற்றும் ஆபரேடிவ் உதவியாளர் இனங்களில் எவ்வகையை சார்ந்தவர் என்பதை நிர்வாகமே தீர்மானிக்குமாம்.” இது புராதன காலத்து அடிமைமுறையை ஆலைக்குள் அறிமுகப்படுத்துவதாகும்.

கோரிக்கை 18: 21-6-89ல் நடந்த ஊர்வலத்தின் போது சோசலிசத் தொழிலாளர் அணி செயலர் மோசஸ் ராஜ்குமார் தாங்கிய அட்டையை -- சிபிஎம், சிபிஐ தலைமைகள் முதலாளித்துவ கட்சிகளுடன் உறவைத் துண்டித்து தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கம் அமைக்க போராடும்படி கோரும் அட்டையை, ஸ்டாலினிச சிபிஎம் இன் மாவோவாத இந்திய மக்கள் முன்னணியின் சில குண்டர்கள் பறித்து அதை கிழித்துப் போட்ட பின் ஊர்வலத்தின் இறுதியில் வரதராஜன் 'வாய்ச்சவாடல்' அடித்து விட்டு நிர்வாகத்திடம் "உங்களது வேண்டுகோளுக்குப் பதிலளிக்கும் முகமாகத் தொழிலாளர்கள் எபிஸியன்சியை அடைவதோடு ஆப்சென்டீசத்தையும் குறைத்துக் கொள்ள முழு முயற்சியும் எடுப்பார்கள் என்று நாம் உடன்படுகிறோம்" என்று கூறிக் கையெழுத்திட்ட கடிதத்தை சமர்ப்பித்தார்.

இந்திய மக்கள் முன்னணியின் தொழிலாளர் முன்னணியின் செயலர் A. பிரான்சிஸ், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை இழிவான முறையில் நிர்வாகம் பணயக் கைதிகளாக்க உடன்பட்டு "கடின உழைப்பிற்கும் சம்பள இழப்பிற்கும் ஆளாகி வரும் NB தொழிலாளர்களிடம் ஒட்டு மொத்த தொழிலாளர் நலனுக்காக மேலும் ஒத்துழைப்பு கேட்டுள்ளது. ஜனநாயக கோட்பாட்டிற்குப் புறம்பாக இருந்தாலும் சமூகமான பேச்சு வார்த்தைக்கும் பாதிக்கப்பட்ட தோழர்கள், ஆலைக்குள் வரவும் நீதிக்கும் புறம்பாக நீ எதிர்ப்பார்க்கும் ஒத்துழைப்பிலும் இறங்கி விட்டோம்" என்று 4-9-89ல் தட்டி போட்டு அவர்களது துரோகத்தைப் பகிரங்கப் படுத்தியுள்ளார்கள்.

இவ்வாறாக சங்கத்தின் ஸ்டாலினிச, மாவோ விரோத துரோகத் தலைமைகள் வழங்கிய ஆதரவை அடிப்படையாகக் கொண்டு, நிர்வாகம் ஏற்கனவே வேலைப்பளு அதிகரிப்பினாலும் போதிய சம்பளமின்மையாலும் வெறுப்படைந்துள்ள தொழிலாளர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி மேலும் தாக்குதலை தொடுக்கும் முகமாக பின்வருமாறு கூறுகிறது. 'ஆலையை அழிக்கும் விஷவித்தாக 'அசாதாரண மட்டம்' இருந்து வருகிறது, அனுமதியின்றி தாமாகவே மட்டம் போடும் புரையோடிய தொழிலாளர்களின் மட்ட நாட்கள் மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதித் திட்ட மருத்துவச் சான்றிதழ்கள் போர்வையில் கழித்த விடுப்பு நாட்கள் இரண்டும் கோத்து 12 மாதக்காலத்தில் 100 நாட்களோ அதற்கு மேற்பட்டோ காணப்படுமேயானால், அத்தகையோர் இழப்பின்றி பணிவிலக்கம் செய்யப்படுவர் ஒழுக்கத்தைப் பேணுவதிலும், மட்டத்தை குறைப்பதிலும் தொழிலாளர்கள் ஒத்துழைத்தல் வேண்டும்".

இன்று நிர்வாகத்தால் வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தும் உலக அளவில் திவால் அடைந்துள்ள லாப உற்பத்தி அமைப்பு முறைக்கு தொழிலாளர்களை பலியிட்டு 'மூச்சுக்கொடுக்க' கோரப்படுபவையாகும். இன்று உலகின் அனைத்துக் கண்டங்களிலும் தொழிலாளர்கள் இந்த திவாலான முதலாளித்துவ லாப உற்பத்தி அமைப்பு முறைக்கு எதிராக கிளர்ச்சி எழுச்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள். பொது எதிரிக்கு எதிராக தொழிலாளர்கள் அனைவரையும் ஒரு பொது வேலைத் திட்டத்தில் வேலைகளைப் பாதுகாக்க, வாழ்க்கைத்தரத்தை பேண, வேலை நிலைமைகளை பேண காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம், பொது வேலைநிறுத்தம் போன்ற வர்க்கப் போராட்ட முறைகளில் இறக்கி லாப உற்பத்தி முறைக்கு முடிவு கட்டி தேவையை அடிப்படையாகக் கொண்ட திட்டமிடப்பட்ட சோசலிச பொருள் உற்பத்திமுறைக்காக போராட வேண்டும், இப்படி முழு உலகத் தொழிலாளர்களை அணி திரட்ட உலக டிராட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா, கண்டங்களில் போராடி வருகிறது.

ஆனால் இங்கு "கம்யூனிஸ்ட் கட்சி" என தவறாக பெயர் இட்டு செயற்பட்டு வரும் ஸ்டாலினிச சி.பி.எம்., சி.பி.. மற்றும் அவற்றின் தொழிற்சங்க அமைப்புகளான சி..டி.யு., ..டி.யு.சி.தேசிய அளவில் என்பது ஒரு புறம் இருக்க, மாநில அளவிலும் கூட தொழிலாளர்களை ஒன்றுபட்ட போராட்டத்தில் இறக்க மறுத்து வருகிறார்கள்.

முதலாளித்துவ அமைப்புக்கு அபாயம் ஏற்படுத்தாத வகையில் ராஜிவ்காந்திக்கு பதிலாக வி.பி.சிங்குகளை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக பிரச்சாரங்களும், கூட்டங்களும் நடத்துவதோடு, “ஒருநாள் பந்த்"ம் ஏற்பாடு செய்து வி.பி.சிங், கருணாநிதி, ராமராவ், தேவிலால் போன்ற முதலாளி வர்க்க பிரதிநிதிகளின் ஆதரவையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

பொதுப்போராட்டத்திற்கு தொழிலாளி வரமாட்டான் என்று ஸ்டாலினிசத் தலைமைகள் தமது காட்டிக் கொடுப்புகளை நியாயப்படுத்த முயற்சித்தாலும், ராஜிவ்காந்தியை வெளியேற்றவும் தொழிலாளர்களின் பல பொருளாதாரக் கோரிக்கைகளை வைத்து சிஐடியு, ஏஐடியுசி தலைமையில் ஏற்பாடு செய்த ஆகஸ்ட் 30 பந்தில் தொழிலாளர்கள் பங்கு கொண்டு நாட்டை ஸ்தம்பிக்கச் செய்தது, தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமையையும், போராட்ட குணத்தையும் மீண்டும் ஒருமுறை ஸ்டாலினிஸ்டுகளின் பொய்களுக்கு சவாலாக நிரூபித்துள்ளது.

இவ்வாறாக மீனம்பாக்கம் பின்னி என்ஜினியரிங் ஆலையின் மற்றும் மெட்டல் பாக்ஸ் ஆலையின் ஒருவருடத்திற்கும் மேலான கதவடைப்புக்கு எதிராகவும், நாடு பரந்தளவில் 600 க்கும் மேற்பட்ட கதவடைப்புகளுக்கு எதிராக தொழிலாளர்களை ஒன்றுபட்ட போராட்டத்தில் அணிதிரட்டுவதை நிராகரித்து ஒவ்வொன்றையும் பிரித்து, தனிப் போராட்டங்களாக்கி தனிமைப்படுத்தி, தொழிலாளர்களை சோர்வடையச் செய்து, இறுதியில் நிர்வாகத்தின் அடிமை சாசனங்களுக்கு கையெழுத்திடும் நிலைக்கு கொண்டு வரும் "சாதனைகளையே" சிஐடியும் ஸ்டாண்டர்டு மோட்டார் போன்ற ஆலைகளில் ஏஐடியுசிம் செய்து வருகின்றன.

1981, 1984களில் B&C தொழிலாளர்களின் போராட்டமும் இவ்வாறாகவே அந்தோணிப் பிள்ளையாலும் குசேலராலும், வி.பி.சிந்தனாலும் காட்டிக் கொடுக்கப்பட்டது.இத்துரோகத் தலைமைகள், குறைந்தபட்சம் அவர்கள் தலைமையிலுள்ள தொழிற்சங்கங்களை B&C தொழிலாளர்களுக்கு ஆதரவாக அணிதிரட்ட மறுத்து அனைத்துக் கட்சி மாநாடு என்ற பெயரில் அனைத்து துரோகத் தலைமைகளின் பலத்தையும் அணி திரட்டி, இறுதியில் B&C தொழிலாளர்கள் அடிமை சாசனத்தில் கையெழுத்திட வழி செய்தனர்.

இவ்வாறாக தொழிலாளர்களின் போராட்ட சக்தியை மழுங்கடித்து B&C தொழிலாளி போராட்டத்திற்கு தாளமாட்டான் என்று வரதராஜன், மாதவராவ் துரோக தலைமைகள் மிக கேவலமாக கிண்டல் செய்தாலும் B&C தொழிலாளர்கள் ஏனைய தொழிலாளர்களுடன் ஒன்றிணைத்து பொதுப் போராட்டத்தில் இறங்கத் தயார் என்பதை ஆகஸ்ட் 30ல் நிரூபித்துள்ளனர். ஆகஸ்ட் 30 பந்த் மேலும் நிரூபிப்பது சிஐடியு, ஏஐடியுசி இனால் நாடு பரந்தளவில் தொழிலாள வர்க்க பலத்தை அணிதிரட்ட முடியும் என்பதாகும்.

பிஅண்டுசி தொழிலாளர்கள் இத்துரோகத் தலைமைகள் மீண்டும் அவர்களது காட்டிக்கொடுப்புகளை தொடரவிடாது தடுக்க வேண்டும். அதற்காக பின்வரும் கோரிக்கைகளுக்காக போராட பொதுச்சபையை உடனே கூட்டுப்படி நிர்பந்திக்க வேண்டும்.

ஃ நிர்வாகத்தின் தொழிலாள விரோத 21 அம்சக் கோரிக்கைகளை முழுமையாக நிராகரி!

ஃ அனைத்து வேலைகளையும் பாதுகாக்கவும் இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி உயர்வுக்கும் போராடு!

ஃ உள்ளிருப்பு வேலைநிறுத்தத்திற்கு தயார் செய்!

ஃ உள்ளிருப்பு போராட்டத்தை பாதுகாக்க சிஐடியு, ஏஐடியுசியை காலவரை அற்ற பொதுவேலை நிறுத்தத்தில் இறக்கு!

ஃ தொழிலாளர்கள் விரும்பினால் திரும்பி அழைக்கக்கூடிய ஆலைப் போராட்டக் குழுவின் பிரதிநிதிகளை தேர்ந்தெடு!

ஃ நவீன மயமக்கலினால் குறையும் மனித நாட்களுக்கு ஏற்ப, சம்பள வெட்டின்றி வாரம் 48 மணி நேர வேலையை 30 மணி ஆக்கவும் போராடு!

ஃ அனைத்து பதிலி தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்!

ஃ ஆலைக் கணக்குப் புத்தகங்களை தொழிலாளர் பரிசீலனைக்கு திற!

B&C ஆலை உட்பட அனைத்து ஆலைகளையும், வங்கிகளையும் முதலாளிகளுக்கு நஷ்டஈடின்றி தொழிலாளர் ஆதிக்கத்தின் கீழ் தேசியமயமாக்கு!

B&C, ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ், மாதவரம் பால்பண்ணை, மின்சார ஊழியர் மற்றும் அனைத்து தொழிலாளர் போராட்டங்களையும் ஐக்கியப்படுத்து!

ஃ போராட்ட நிதியை திரட்டு!

ஃ சிபிஎம், சிபிஐ தலைமைகள் முதலாளித்துவ கட்சிகளுடன் உறவைத் துண்டித்து சோசலிச வேலைத்திட்டங்களை நிறைவேற்றும் ஒரு தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கம் அமைக்க போராடும்படி நிர்பந்தி!